30 January 2016

கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் உலா

மகாமகம் 2016: இன்னும் 15 நாள்கள்  
கும்பகோணத்தில் மகாமக விழாவிற்காக இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில் 12 தீர்த்தவாரி சைவக்கோயில்களில் 11 கோயில்களை நாம் பார்த்த தற்போது கொட்டையூர் கோடீஸ்வரர் கோயிலுக்குச் செல்வோம். இக்கோயிலைப் பற்றிய கட்டுரை பத்திரிக்கை.காம் இதழில் வெளிவந்துள்ளது. கட்டுரையை வெளியிட்ட பத்திரிக்கை.காம் இதழுக்குக்கு நன்றி. அக்கட்டுரையின் மேம்பட்ட வடிவத்தினைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இத்துடன் மகாமகத்துடன் தொடர்புடைய அனைத்து சைவ தீர்த்தவாரி கோயில்களுக்கும் நாம் சென்றுவந்துவிட்டோம்.


கும்பகோணம்-சுவாமிமலை சாலையிலுள்ள கொட்டையூரில் கோடீஸ்வரர் கோயில் உள்ளது.  மகாமகத்தின்போது மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காண்கின்ற காசி விஸ்வநாதர் கோயில், கும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், கோடீஸ்வரர் கோயில், காளஹஸ்தீஸ்வரர் கோயில், கௌதமேஸ்வரர் கோயில், அமிர்தகலசநாதர் கோயில், பாணபுரீஸ்வரர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில், கம்பட்ட விஸ்வநாதர் கோயில்,  ஏகாம்பரேஸ்வரர் கோயில் ஆகிய 12 கோயில்களில் 10 கோயில்கள் கும்பகோணம் நகரில் உள்ளன. மற்ற இரு கோயில்களான கோடீஸ்வரர் கோயில் கொட்டையூரிலும், அமிர்தகலசநாதர் கோயில் சாக்கோட்டையிலும் உள்ளன. குடமுழுக்கிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இக்கோயிலுக்குச் சென்றோம்.



அமிர்தத்துளிகள் விழுந்த இடம் என்ற நிலையில் இவ்விடம் பெயர் பெற்றது. தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது. குருமணிபோல் அழகமரும் கொட்டையூரில் கோடீச்சரத்து உறையும் கோமான்தானே என்று நாவுக்கரசர் இத்தல இறைவனைப் போற்றுகின்றார்.

ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம், பலிபீடம், நந்தியை ஆகியவை காணப்படுகின்றன. தொடர்ந்து காணப்படுகின்ற முன் மண்டபத்தில் வலப்புறம் நால்வரும் ஆத்ரேய மகரிஷியும் உள்ளனர். திருவலஞ்சுழியில் காவிரியில் இறங்கிய ஏரண்ட முனிவர் (ஆத்ரேய மகரிஷி) இங்கு வந்ததாகவும், ஏரண்டம் எனப்படும் கொட்டைச்செடியின்கீழிருந்து தவம் செய்ததால் அவர் அவ்வாறு பெயர் பெற்றதாகவும் கூறுவர். இடப்புறம் நடராஜர் மண்டபமும் நவக்கிரக சன்னதியும் உள்ளன. கருவறையில் லிங்கத்திருமேனியாக கோடீஸ்வரர் உள்ளார்.

ஒரு காலத்தில் இவ்வூர் ஆமணக்கங்காடாக இருந்ததாகவும், இறைவன் ஆமணக்கின் கொட்டைச் செடியின்கீழ் இருந்ததால் கொட்டையூர் என்று பெயர் பெற்றதாகக் கூறுகின்றனர். சோழ மன்னன் ஒருவனுக்கு கோடிலிங்கமாகத் தரிசனம் கொடுத்ததால் இக்கோயிலைக்கு கோடீச்சரம் என்றழைக்கின்றனர். இறைவனுக்கு கோடீஸ்வரர் என்றும், விநாயகருக்கு கோடி விநாயகர் என்றும், சுப்பிரமணியருக்கு கோடி சுப்பிரமணியர் என்றும், சண்டிகேஸ்வரருக்கு கோடி சண்டிகேஸ்வரர் என்றும் பெயர்கள் உண்டு.  


கோயிலின் கருவறையைச் சுற்றிவரும்போது நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டீஸ்வரர் சன்னதி உள்ளது. 



திருச்சுற்றில் கோடி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் மற்றும் கஜலட்சுமிக்கான சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் உள்ள இறைவி பந்தாடுநாயகி ஆவார். மகாமகத்திற்காக குடமுழுக்கு கண்ட கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். தற்போது இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று நிறைவுற்றது.

2016 பிப்ரவரி 13 முதல் 22 வரை மகாமகப்பெருவிழா நடைபெறவுள்ள வேளையில் தீர்த்தவாரி காண்கின்ற கோயில்களுக்குச் செல்லும்போது இக்கோயிலுக்கும் செல்வோம்.
---------------------------------------------------------------------------------------------------
      ---------------------------------------------------------------------------------------------------
      துணை நின்றவை
      மகாமகப்பெருவிழா 2004 கும்பகோணம், இந்து சமய அறநிலையத்துறை,தமிழ்நாடு அரசு
      பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை

      28 January 2016

      நாகேஸ்வரர் ஆலய உலா : தி இந்து


      கும்பகோணத்தில் தீர்த்தவாரி காணும் 12 சைவக்கோயில்களில் நாம் பார்க்கவேண்டிய கோயிலான நாகேஸ்வரன் கோயிலைப் பற்றிய கட்டுரை இன்றைய தி இந்து இதழில் வெளிவந்துள்ளது. கட்டுரையை வெளியிட்ட தி இந்து நாளிதழுக்கு நன்றி. அக்கட்டுரையின் மேம்பட்ட வடிவத்தினைப் பகிர்வதில் மகிழ்கிறேன். 


        
      குடமூக்கு, குடந்தை என்று போற்றப்படும் அழைக்கப்படுகின்ற கும்பகோணம் கோயில்கள் நிறைந்த நகராகும். பிப்ரவரி 13 முதல் 22 வரை நிகழவுள்ள மகாமகத்தை முன்னிட்டு மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காணும் சைவக்கோயில்கள், காவிரியாற்றில் தீர்த்தவாரி காணும் வைணவக்கோயில்கள் உள்ளிட்ட பல கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றது. இக்கோயில்கள் அனைத்திற்கும் சென்றுவந்த நிலையில் அண்மையில் நாகேஸ்வரர் கோயில் சென்றேன்.  பல முறை அக்கோயிலுக்குச் சென்றபோதிலும் ஒவ்வொரு முறை செல்லும்போதும் புதியதாகச் செல்லும் உணர்வை ஏற்படுத்தும் பெருமை வாய்ந்தது அக்கோயில். 

      கோயில் உலாக்களில் மறக்க முடியாத கோயில்களில் ஒன்று இக்கோயில். கும்பகோணத்திலுள்ள கோயில்களில் சார்ங்கபாணிகோயில் அழகான கோபுரத்திற்கும், ராமசாமி கோயில் அழகான சிற்ப மண்டபத்திற்கும், ராமாயண ஓவியங்களும் பெயர் பெற்றுள்ள நிலையில் இக்கோயில் தேர் வடிவில் அமைந்துள்ள நடராசர் மண்டபம், கருவறையைச் சிறிய அழகான சிற்பங்கள், அழகான கருவறையுடன் கூடிய விமானம் என்ற நிலையில் சிறப்பைப் பெற்று கட்டடக்கலையிலும் சிற்பக்கலையிலும் முதன்மையான  இடத்தைப் பெறுகிறது.




      மகாமகத்தின்போது மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காண்கின்ற காசி விஸ்வநாதர் கோயில், கும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், கோடீஸ்வரர் கோயில், காளஹஸ்தீஸ்வரர் கோயில், கௌதமேஸ்வரர் கோயில், அமிர்தகலசநாதர் கோயில், பாணபுரீஸ்வரர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில், கம்பட்ட விஸ்வநாதர் கோயில்,  ஏகாம்பரேஸ்வரர் கோயில் ஆகிய 12 கோயில்களில் 10 கோயில்கள் கும்பகோணம் நகரில் உள்ளன. மற்ற இரு கோயில்களான கோடீஸ்வரர் கோயில் கொட்டையூரிலும், அமிர்தகலசநாதர் கோயில் சாக்கோட்டையிலும் உள்ளன.

      தேவாரப்பாடல் பெற்ற தலங்களில், காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள 27ஆவது தலமாகும். கி.பி.ஏழாம் நூற்றாண்டில் செங்கற்கோயிலாக இருந்து கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் ஆதித்தசோழனால் கற்கோயிலாக வடிவம் பெற்ற பெருமையுடையது இக்கோயில்.  நாகராஜனும், சூரியனும்  பூசித்த பெருமை பெற்றது இக்கோயில். இத்தலத்து இறைவனை நாகேசப்பெருமான் என்றும், தலத்தினை நாகேஸ்வரம் என்றும் அழைப்பர்.  பாஸ்கர சேத்திரம் என்று பெயர் பெற்றதற்கு இத்தலம் சான்றாக உள்ளது. இத்தலத்தில் இன்றும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய நாள்களில் சூரிய கிரகணங்கள் கருவறையில் உள்ள லிங்கத்திருமேனியின்மீது நேராக விழுகின்ற அரிய காட்சியைக் காணமுடியும். திருநாவுக்கரசர் இங்குள்ள இறைவனைப் போற்றிப்பாடும்போது இத்தலத்தினைக் குடந்தைக்கீழ்க்கோட்டம் என்கிறார்.

      ஐந்து நிலைகளுடன் உள்ள ராஜகோபுரம் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளது. உள்ளே செல்லும்போது வலப்புறம்  அம்பிகையின் சன்னதி உள்ளது. 

      இடப்புறம் சிங்கக்கிணறு உள்ளது. அடுத்து இக்கோயிலில் திருப்பணி மேற்கொண்டு 1923இல் குடமுழுக்கு செய்த பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளுக்கான தனி சன்னதி  அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலின் இரு புறமும் விநாயகரும், சுப்பிரமணியரும் காணப்படுகின்றனர். நுழைவாயிலைக் கடந்து செல்லும்போது கொடி மரம், பலிபீடம் காணப்படுகின்றன. இடப்புறம் பதினாறு கால் மண்டபமும், வலப்புறமும் நடராஜர் சன்னதியும் உள்ளன. 


      நடராஜர் சன்னதி நகர்ந்து செல்லும் தேர் வடிவில் அமைந்துள்ளது. மண்டபத்தில் இரு புறங்களிலும் கல்லால் ஆன சக்கரங்கள் உள்ளன. 




      இரு குதிரைகளும், நான்கு யானைகளும் இழுத்துச் செல்லும் நிலையில் இம்மண்டபம் அமைந்துள்ளது. சக்கரங்களின் ஆரங்களாக 12 ராசிகளும் இடம்பெற்றுள்ளன.  

      இக்கோயிலின் உள் மண்டபத்தில் படைவெட்டி மாரியம்மன், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. கருவறையைச் சுற்றி வரும்போது கருவறைக் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறையின் பின்புறம் வீதிவிடங்கர் (திருவாரூர்), சோளிங்கநாதர் (திருக்குவளை), கண்ணாயிரநாதர் (திருக்காரவாயில்), வாய்மூர்நாதர் (திருவாய்மூர்), மறைகாட்சி மணாளநாதர் (வேதாரண்யம்), தர்பாரண்யேஸ்வரர் (திருநள்ளாறு) ஆகியோரைக் குறிக்கும் லிங்கத்திருமேனிகள் காணப்படுகின்றன. அடுத்து சுப்பிரமணியர், கஜலட்சுமி, சரஸ்வதி காணப்படுகின்றனர். 

      திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதி, சூரியன் சன்னதி, சோமாஸ்கந்தர் சன்னதியும், நடராசர் சன்னதியும் அருகேயுள்ளன. சூரியன் சன்னதி வடகிழக்குப் பகுதியில் மேற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது.

      கருவறையில் லிங்கத்திருமேனியாக உள்ள மூலவர் நாகேஸ்வரர் என்றும் நாகநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். கருவறையின் வெளியே கோஷ்டத்திற்குக் கீழே அதிட்டானப்பகுதியில் சிறிய அளவிலான சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றில் இராமாயணச்சிற்பங்கள் உள்ளிட்ட சிற்பங்கள் அமைந்துள்ளன. இவை போன்ற சிற்பங்களை திருப்புறம்பியத்திலும், புள்ளமங்கையிலும் காணமுடியும். 







      பெரியநாயகி என்றும் பிரகந்நாயகி என்றும் அழைக்கப்படும் அம்மன் சன்னதி தெற்கு நோக்கிய நிலையில் தனியாக அமைந்துள்ளது. இச்சன்னதியில் ஆடிப்பூர அம்மன் சன்னதியும், பள்ளியறையும் உள்ளன. அருகே பிராமஹி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் உள்ளனர். கருவறையைச் சுற்றிவரும்போது சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது.  


      இக்கோயிலில் உள்ள சன்னதிகளில் முக்கியமானதாகக் கருதப்படுகின்ற மற்றொரு சன்னதியான நாகர் சன்னதி வெளிச்சுற்றில் உள்ளது.  இங்குள்ள நாக கன்னி அம்மன் சன்னதியைச் சுற்றி அதிகமான நாக சிற்பங்கள் காணப்படுகின்றன.   


      பிப்ரவரி 13இல் மகாமகத்திற்காக கோயில்களில் கொடியேற்றம் தொடங்கி 22 வரை மகாமக நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறவுள்ள நிலையில் மகாமகத்திற்காக கும்பகோணம் வரும்போது சிற்பக்கலை நுணுக்கத்தைத் தன்னுள் கொண்டு விளங்கும்.

      இக்கோயிலுக்கு உலா செல்வோம். நம் பயணத்தில் நாம் பார்க்கவேண்டிய மீதியுள்ள ஒரே கோயிலான கொட்டையூர் கோடீஸ்வரர் கோயிலுக்கு விரைவில் செல்வோம்.

      ---------------------------------------------------------------------------------------------------
          ---------------------------------------------------------------------------------------------------
          துணை நின்றவை
          மகாமகப்பெருவிழா 2004 கும்பகோணம், இந்து சமய அறநிலையத்துறை,தமிழ்நாடு அரசு

          25 January 2016

          கும்பகோணம் ராஜகோபாலசுவாமி கோயில்

          மகாமகத்தின்போது தீர்த்தவாரி காணும் வைணவக்கோயில்களில் நாம் இன்னும் செல்லவேண்டியது ராஜகோபாலசுவாமி கோயிலும், சக்கரபாணி கோயிலும் ஆகும். மகாமக விழாவிற்காக நேற்று (24.1.2016) கும்பகோணத்தில் அனைத்து கோயில்களிலும் பந்தக்கால் நடப்பட்ட இவ்வேளையில் தற்போது நாம் ராஜகோபாலசுவாமி கோயிலுக்குச் செல்வோம்.

          ராஜகோபாலசுவாமி கோயில் என்றாம் நம் நினைவிற்கு வருவது மன்னார்குடியே. கும்பகோணத்தில் இரு ராஜகோபாலசுவாமி கோயில்கள் உள்ளன. மகாமகத் தீர்த்தவாரியின்போது காவிரியில் தீர்த்தவாரி பெறும் கோயில்களில் ஒன்று கும்பகோணம் பெரிய கடைத்தெருவிலுள்ள ராஜகோபாலசுவாமி கோயில். 19.6.2015இல் இக்கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கு முன்னும், நவராத்திரியின்போது 17.10.2015 அன்றும் இக்கோயிலுக்குச் சென்றேன்.

          இக்கோயில் கடைத்தெருவில் கடைகளின் இடையே இருப்பதால் கண்டுபிடிப்பது சற்றுச் சிரமமே. 1970கள் தொடங்கி இக்கோயிலுக்குப் பல முறை சென்றுள்ளேன். தற்போது நடந்த கும்பாபிஷேகத்தின்போது முகப்பில் புதிய ராஜகோபுரம் கட்டப்பட்டது. வாயிலின் இரு புறமும் கருடர் மற்றும் அனுமாரின் சிலைகள் உள்ளன. 

          நெடிய வாயிலை கடந்து உள்ளே வரும் நம்மை இரு புறமும் சுதையாலான சிலைகளும், யானைகளும் வரவேற்கின்றன. முன்மண்டபத்தில் புதுப்பிக்கப்பட்ட கொடி மரம் மிக அருமையாக உள்ளது. 


          ராஜகோபாலர், செங்கமலவல்லித்தாயார் உறையும் இக்கோயிலின் கருவறை விமானம் திருப்பணிக்குப் பின் அழகாகக் காட்சியளிக்கிறது. கருவறையைச் சுற்றி வரும்போது அங்கிருந்து கம்பீரமாக உள்ள ராஜகோபுரத்தை காணலாம். இக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் கருடசேவையும் ஒன்றாகும்.




            

          ராமசாமி கோயிலிலிருந்து கிளம்பி பெரியக்கடைத்தெருவில் சென்றால் வரிசையாக அனுமார் கோயில், சரநாராயணப்பெருமாள் கோயில், கூரத்தாழ்வார் சன்னதி, உடையவர் சன்னதி, ராஜகோபாலசுவாமி கோயில், ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் என்று வரிசையாக கோயில்கள் உள்ளதைக் காணமுடியும். அதே பாதையில் சென்றால் சக்கரபாணி கோயிலைச் சென்றடையலாம். கும்பகோணத்தில் நேர்கோட்டில் அதிகமான கோயில்கள் உள்ள இடங்களில் பெரியக்கடைத்தெருவும் ஒன்றாகும். 19 சூன் 2015இல் இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது. இக்கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.30 மணி வரை. மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை. 

          மகாமகம்
          மகாமகத்தை முன்னிட்டு கும்பகோணத்திலுள்ள சிவன் கோயில்களில் 13.2.2016 அன்றும், வைணவக்கோயில்களில் 14.2.2016 அன்றும் கொடியேற்றத்துடன் விழா தொடங்கவுள்ளது. 13.2.2016 முதல் 22.2.2016 வரை நடைபெறுகின்ற மகாமக விழாவில் பங்கேற்கவும் அந்நாள்களில் குளத்தில் புனித நீராடவும் பக்தர்கள் வரவுள்ளனர்.

          தோப்புத்தெருவில் இன்னொரு ராஜகோபாலசுவாமி கோயில்
          கும்பகோணம் தோப்புத்தெருவில், கருவறையில் ஒரே கல்லில் சீதைராமரையும், அருகில் லட்சுமணரையும் கொண்டுள்ள ராஜகோபாலசுவாமிகோயில் என்ற பெயரில் மற்றொரு கோயில் உள்ளது.  

          மகாமகத்திற்கு முன்போ, பின்போ தீர்த்தவாரியுடன் தொடர்புள்ள பெரியக்கடைத் தெருவிலுள்ள ராஜகோபாலசுவாமி கோயிலுக்குச் செல்வோம். ஒரே கல்லில் ராமர் சீதை சிற்பம் உள்ள தோப்புத்தெரு ராஜகோபாலசுவாமி கோயிலுக்கும் செல்வோம்.
          --------------------------------------------------------------------------------------------------------
          காவிரி ஆற்றில் தீர்த்தவாரி கொடுக்கும் வைணவக்கோயில்கள்
          --------------------------------------------------------------------------------------------------------
          27.1.2016 அன்று மேம்படுத்தப்பட்டது.

          22 January 2016

          Mahamaham 2016: 30 Days To Go

          Mahamaham, the largest congregation of humanity on the banks of a tank, known as Mahamamaham tank at Kumbakonam in Thanjavur district of Tamil Nadu will take place on this date of next month, ie., 22nd February 2016. The tank and the whole town are getting a facelift to face such number of people. Kumbakonam dotted with many number of Siva and Vishnu temples, including tirttavari temples, will accommodate one and all with all humility. Now get ready to visit all these temples since there are only 30 days to go. 

          Mahamaham Tank
          Before going to the temples let us have a look at Mahamaham tank which is getting ready for the greatest spectacle.  





          Within 30 days all the works would be completed and the devotees from the length and breadth of the country are expected to come over to this tank. It is expected that even before the stipulated date and time people would be coming over here. The festival would get a grand opening on 13th and culminate on 22nd of February 2016. It is advisable to visit the Mahamaham related temples and other temples in time.  Now over to tirttavari Siva and Vishnu temples.  

          Siva Temples:
          The Siva temples which are connected with Mahamaham are Kasi Viswanathar temple, Kumbeswarar temple, Nageswarar temple, Someswarar temple, Kotiswarar temple, Kalahasteeswarar temple, Gouthameswarar temple, Amirthakalasanathar temple, Banapuriswarar temple, Abimukeswarar temple, Kambatta Viswanathar temple and Ekambeswarar temple. In all these Siva temples, linga is found in the sanctum sanctorum. The deities of these Siva temples would participate in the tirttavari on the banks of Mahamaham tank.     
          Kasi Viswanathar temple
          The temple is situated on the northern banks of Mahamaham tank. The presiding deity of the temple is Kasi Viswanathar. His consort is known as Visalakshi. Gnanasambandar, Sekkizhar and Meenakshi Sundaram Pillai praised the deity of the temple. In this temple navakannis are found. The Kumbabishegam of the temple took place on 9th February 2014.   
          Kumbeswarar temple
          This temple is situated at the centre of the town. The presiding deity of the temple is Kumbeswarar. His consort is known as Mangalambigai. Gnanasambandar and Tirunavukkarasar praised the deity of the temple. The Kumbabishegam of the temple took place on 5th June 2009.   



          Nageswarar temple
          This temple is situated at the centre of the town. The presiding deity of the temple is Nageswarar. His consort is known as Periyanayagi. Tirunavukkarasar praised the deity of the temple. This temple is famous for the minute sculptures around the sanctum sanctorum and the chariot like mandapa pulled by horses. The Kumbabishegam of the temple took place on 29th November 2015. 

          Someswarar temple
          This temple is situated near Portamarai tank. The presiding deity of the temple is Someswarar. His consort is known as Somanayagi. Gnanasambandar praised the deity of the temple. The Kumbabishegam of the temple took place on 2nd November 2015. 
          Kotiswarar temple
          This temple is situated at Kottayur in Kumbakonam-Swamamilai road. The presiding deity of the temple is Kotiswarar. His consort is known as Panthadunayagi. Tirunavukkarasar praised the deity of the temple. The Kumbabishegam of the temple took place on 26th October 2015. 
          Kalahasteeswarar temple
          This temple is situated at Mutt street on the southern bank of Cauvery. The presiding deity of the temple is Kalahasteeswarar. His consort is known as Gnanambigai. The Kumbabishegam of the temple took place on 26th October 2015. 
          Gouthameswarar temple
          This temple is situated at the south-west corner of Mahamaham tank. The presiding deity of the temple is Gouthameswarar. His consort is known as Soundaranayagi. The Kumbabishegam of the temple took place on 9th September 2015. 


          Amirthakalasanathar temple
          This temple is situated at a distance of 3 kms rom Kumbakonam at Sakkottai in Kumbakonam-Valangaiman road. The presiding deity of the temple is Amirthakalasanathar. His consort is known as Amirthavalli. Sundarar praised the deity of the temple. The Kumbabishegam of the temple took place on 22nd October 2015.  

          Banapuriswarar temple
          This temple is situated at Kumbakonam. The presiding deity of the temple is Banupuriswarar. His consort is known as Somakamalambal. The Kumbabishegam of the temple took place on 26th October 2015. 
          Abimukeswarar temple
          The temple is situated on the eastern banks of Mahamaham tank. The presiding deity of the temple is Abimukeswarar. His consort is known as Amuthavalli. The Kumbabishegam of the temple took place on 26th October 2015.  
          Kambatta Viswanathar temple
          The temple is situated on the Kumbakonam-Thanjavur road, at the south-west of Kumbeswarar temple. The presiding deity of the temple is Viswanathar. His consort is known as Ananthanithi. The Kumbabishegam of the temple took place on 26th October 2015.  
          Ekambeswarar temple
          The temple is situated near Mahamaham tank. The presiding deity of the temple is Ekambareswarar. His consort is known as Kamatchi. The Kumbabishegam of the temple took place on 22nd October 2015.  

          Vishnu Temples:
          The Vishnu temples which are connected with Mahamaham are Sarngapani temple, Chakrapani temple, Ramasamy temple, Rajagopalasamy temple and Varahaperumal temple.  The deities of these Siva temples would participate in the tirttavari on the banks of Cauvery.   

          Sarngapani temple
          The temple is situated at the centre of Kumbakonam. The presiding deity of the temple is Sarngapani. His consort is known as Komalavalli. The is one of the temples sung by Alwars. The temple has a chariot-like sanctum sanctorum. This is famous for its majestic rajagopuram and its chariot like sanctum sanctorum.  The Kumbabishegam of the temple took place on 13th July 2015. 
          Chakrapani temple
          The temple is situated at the south of Cauvery in Kumbakonam. The presiding deity of the temple is Chakrapani. His consort is known as Vijayavalli. Due to the worship of Sun this place is known as Baskara Kshetram. The Kumbabishegam of the temple took place on 8th November 2015. 




          Ramasamy temple
          The temple is situated at Kumbakonam. The speciality of the temple is Rama is found in pattabishega posture alongwith His consort Sita, Lakshmanar, Baradhan, Satrukanan and Anjaneya in the sanctum sanctorum. This temple is famous for its beautiful pillar mandapa with sculptures. Around the sanctum sanctorum the Ramayana is found in painting. The Kumbabishegam of the temple took place on 9th September 2015. 
          Rajagopalasamy temple
          The temple is situated at Big Bazaar street in Kumbakonam. The presiding deity of the temple is Rajagopalasamy. His consort is known as Sengamalavalli. The Kumbabishegam of the temple took place on 19th June 2015. The present rajagopuram at the entrance was built during this Kumbabishegam.
          Varahaperumal temple
          The temple is situated in Kumbakonam. The presiding deity of the temple is Varahaperumal. His consort is known as Boodevi. As the presiding deity has the face of a pig He was known as Varaham. The Kumbabishegam of the temple took place on 26th October 2015. 

          Of the 17 tirttavari temples two are on the outskirts of Kumbakonam town. It is advisable to cover all these temples duly planned. To get the blessings of these deities, to have holy dip at Mahamaham tank and Cauvery, and to enjoy as connoisseurs of art make a visit to Kumbakonam on or before Mahamaham festivities the memories of which will be cherished in the coming Mahamahams.    
          At the Nataraja Mandapa in Nageswara Temple 
          References:
          Mahamama Peruvizha 2004, Hindu Religious and Charitable Endowments Department
          Mahamaham Souvenir 1992 and 2004