26 February 2020

Project Tiger 2.0 : Tamil Wikipedia at the helm

In the Project Tiger 2.0 conducted by Wikimedia Foundation and Goggle, in national level 331 participants in 16 languages contributed 13,490 articles, of which Tamil Wikipedia with 62 participants contributed 2959 articles and got the first place. With 260 articles I got the ninth place in national level and third place in Tamil Nadu. I feel happy to share the experiences of my participation. 
   
Recently Wikipedia organised three competitions viz., Project Tiger 2.0 (10 Oct 2019 -10 January 2020),  Wikipedia Asian Month 2019 (1 November 2019 - 7 December 2019) and Wiki women for Women Wellbeing (1 November 2019 -10 January 2020). Out of these competitions, in the Project Tiger 2.0, Tamil language bagged the first place. The articles should have been written with more than 300 words, excluding templates, information box (infobox), references and so on.

Tamil language at the helm
In the Project Tiger 2.0 of Tamil edition, 62 contributors wrote 2959 articles and Tamil got the first place. Punjabi (Gurmukhi) got the second place (1768 articles) and Bengali, the third place (1460), followed by  Urdu (1377), Santali (566), Hindi (417), Telugu (416), Kannada (249), Malayalam (229), Marathi (220), Assamese (205), Gujarati (202), Odia (155), Tulu (32) and Sanskrit (19).

During the time of the competition the contributors evinced much interest and totally involved themselves in the herculean task with no stone left unturned. Their one and only aim was to get the Tamil the first place, and they succeeded in their attempt.  It was very interesting to see that many newcomers and youngsters took much efforts to attain the main goal. Jury members guided and helped in many ways during the time of writing. They were very particular the standard of the articles should be upto mark.     


Third place (Tamil Wikipedia) and Ninth place (National level) 
For the Project Tiger 2.0 I wrote 260 articles and got the ninth place in national level  (331 contributors) and third place in Tamil Nadu (62 contributors)I convey my thanks to my Wikipedia friends and well wishers who encouraged me in this task.

Balasubramanian (599) got the first place followed by  G.Sridhar, (second place/ 492), B.Jambulingam (third place/260), Fathima Rinosa (fourth place/237 articles), and Vasantha Lakshmi (fifth place/217). This list has 62 participants who contested.  For this contest I wrote articles on Museums, Archives, Art Galleries and Science Centres and Libraries  in India and in Tamil Nadu which were not found in Tamil Wikipedia.  
Third place in Tamil Wikipedia (Total contributors 62)

Ninth place in national level (Total contributors 331), Rank lists courtesy: Neechalkaran aka Rajaraman
Courtesy: J. Balaji
Articles in Tamil Wikipedia will be of very helpful not only to common people but also to researchers and subject experts for reference. My earnest desire is that articles on all subjects should have a place in Tamil language. To reach that goal I am now translating many articles from English Wikipedia, from English into Tamil. In the meantime I am improving the articles, written by me and others, in Tamil Wikipedia adding more information with relevant links.  By this way I am trying to update the information. Wherever necessary I am uploading the photographs, in Wikicommons, taken by me during the field trips. I have uploaded nearly 1,500 photographs. I welcome newcomers to join in Tamil Wikipedia and start writing. With the advice of senior Wikipedians and friends my journey will continue. 

My memorable moments in Wikipedia:
2014: Started writing and editing in Tamil Wikipedia from July 2014. (As on date wrote 994 articles)

2015: Tamil Wikipedia featured me in its first page. It increased my interest of writing in Wikipedia.   
First page of Tamil Wikipedia, 2015
2015: Started writing and editing in English Wikipedia from May 2015. (As on date wrote 147 articles)

2015: Awarded for my contribution in Tamil Wikipedia at the Bloggers Meet held in Pudukottai, Tamil Nadu. 

2017: In the contest held during 2017 (1 January 2017-31 January 2017) I wrote 253 articles and got third place Wiki Trophy. Many of the articles were on the Temples of Tamil Nadu. 

2020: For the Project Tiger 2.0 (10 Oct 2019 -10 January 2020) I wrote 260 articles and got third place in Tamil Nadu and ninth place in national level. 
 
-----------------------------------------------------
My earlier articles/interviews on Tamil Wikipedia:

20 February 2020

விக்கிப்பீடியா வேங்கைத்திட்டம் 2.0 : முதலிடத்தில் தமிழ்

வேங்கைத்திட்டத்தில் இந்திய அளவில் 331 பயனர்கள் 16 மொழிகளில் 13,490 கட்டுரைகள் எழுதியுள்ளனர். அவற்றில் 62 பயனர்களின் 2959 கட்டுரைகளைக் கொண்டு தமிழ் விக்கிப்பீடியா முதல் இடத்தைப்பெற்றுள்ளது.

இந்திய அளவில் 331 பயனர்களில் நான் ஒன்பதாவது இடத்தையும், தமிழக அளவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளேன் என்பதையும் மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன். என் முயற்சியில் துணை நின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
புகைப்படம் நன்றி : புதிய தலைமுறை

விக்கிப்பீடியா அண்மையில் வேங்கைத்திட்டம்2.0 (10 அக்டோபர் 2019 -10 ஜனவரி 2020),  ஆசிய மாதம் தொடர் தொகுப்பு 2019 (1 நவம்பர் 2019 - 7 டிசம்பர் 2019) மற்றும் பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர்  (1 நவம்பர் 2019 -10 ஜனவரி 2020) என்ற மூன்று போட்டிகளை அறிவித்திருந்தது. அவற்றில் வேங்கைத்திட்டத்தில் இந்திய அளவில் தமிழ் மொழி முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

வேங்கைத்திட்டம் 2.0







முதல் வேங்கைத்திட்டம் போல, 2019ஆம் ஆண்டு, விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுள் நிறுவனமும் இணைந்து இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம், விக்கிமீடியா இந்தியா, இந்திய விக்கிமீடியா சமூகங்கள் மற்றும் பயனர் குழுக்களின் உறுதுணையுடன் இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் உள்ளூர் வாசகர்களின் தேவைக்குத் தக்க உயர் தரக் கட்டுரைகளை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுத்தது.  ஒவ்வொரு மாதமும் சிறப்பாகப் பங்களிப்பவர்களுக்கு தனிப்பட்ட பரிசுகள் வழங்குவதுடன் ஒட்டுமொத்தமாகச் சிறப்பாகச் செயற்படுகிற விக்கிப்பீடியா சமூகத்துக்குத் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.  கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து புதிய கட்டுரைகளை உருவாக்குதல் அல்லது ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்குதல், ஒவ்வொரு போட்டிக் கட்டுரையும் குறைந்தது 300 சொற்களையும், 6000 பைட்டுகள் அளவையும் கொண்டதாக அமைய வேண்டும் என்பன உள்ளிட்டவை இப்போட்டிகளின் விதிகளாக இருந்தன.

முதல் இடத்தில் தமிழ் விக்கிப்பீடியா
விக்கி வேங்கைத்திட்டம் 2.0இல் 62 பயனர்கள் கலந்துகொண்டு 2959 கட்டுரைகளை உருவாக்கி தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இரண்டாவது இடத்தை பஞ்சாபி (குர்முகி) மொழியும் (1768 கட்டுரைகள்), மூன்றாம் இடத்தை வங்காள மொழியும் (1460 கட்டுரைகள்) பெற்றுள்ளன.  உருது (1377), சந்தாலி (566), இந்தி (417), தெலுங்கு (416), கன்னடம் (249), மலையாளம் (229), மராத்தி (220), அஸ்ஸாமிய மொழி (205), குஜராத்தி (202), ஒடியா (155), துளு (32), சமஸ்கிருதம் (19) என்ற வகையில்  கட்டுரைகளைக் கொண்டு அமைந்துள்ளன.

பயனர்கள் மிகவும் ஆர்வமாகவும், முனைப்போடும் ஆரோக்கியமான போட்டியினை தமக்குள் உண்டாக்கி எழுதுவதை ஆரம்பம் முதல் காணமுடிந்தது. ஒவ்வொருவரும் மிக ஈடுபாட்டோடு தமக்குள் ஓர் இலக்கினை அமைத்துக்கொண்டு தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை உருவாக்குதல் அதே சமயத்தில் எந்த நிலையிலும் தரம் குறைந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தனர். புதியவர்களும் ஆர்வமாக எழுதியதைப் போட்டிக்காலத்தில் காணமுடிந்தது. மூத்த பயனர்களும், வேங்கைத்திட்ட நடுவர்கள் உள்ளிட்ட நிர்வாகத்தினரும் போட்டியில் கலந்துகொண்டோரை சிறப்பாக வழிநடத்திச் சென்றனர்.   இவ்வாறாக தமிழில் தொடர்ந்து பயணித்தோமேயானால் மிகச் சிறந்த பதிவுகளை தமிழ் விக்கிப்பீடியாவில் கொணர முடியும் என்ற நம்பிக்கையினை என்னுள் இந்த போட்டியானது விதைத்தது. பிற பயனர்களும் அவ்வாறான ஒரு வித்தியாசமான அனுபவத்தைப் பெற இந்த போட்டியானது மிகவும் உதவியாக இருந்தது.

தமிழ் விக்கிப்பீடியாவில் மூன்றாவது இடம்
இந்த போட்டியில் 260 கட்டுரைகளை எழுதி இந்திய அளவில் ஒன்பதாவது இடத்தையும் தமிழக அளவில் மூன்றாவது இடத்தையும் பெற்றதை பெருமையாகக் கருதுகிறேன். ஸ்ரீபாலசுப்ரமணியன் (629) முதல் இடத்தையும், ஞா. ஸ்ரீதர் (492) இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

தமிழக அளவில் (62 பயனரில்) 3ஆவது இடம்

இந்திய அளவில் (331 பயனரில்) 9ஆவது இடம்
தமிழக அளவில் மூன்றாம் இடம் (தொகுப்புப்பட்டியல் நன்றி : திரு ஜெ.பாலாஜி)

வேங்கைத்திட்டம் போட்டிக்காக எழுதிய 260 கட்டுரைகளில் நெல்லூர் சோழர்கள், மைசூர் வெற்றிலை, தொண்டைமான் வம்சம், பண்டைய தமிழகத்தில் பெயர் சூட்டும் மரபுகள், பெங்களூர் பழைய மடிவாலா சோமேஸ்வரர்கோயில், டோம்லூர் சொக்கநாதசுவாமி கோயில், சுவாதி பிரமல், லீனா நாயர் உள்ளிட்ட தலைப்புகளில் பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டன. அடுத்து தமிழ் விக்கிபீடியாவில் இல்லாத, இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள், ஆவணக்காப்பகங்கள், கலைக்கூடங்கள், அறிவியல் மையங்கள் மற்றும் நூலகங்கள் ஆகியவற்றைப் பற்றிய தலைப்புகளில் பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டன.  ஆசிய மாதம் தொடர்பாக ஒரு நாட்டினைத் தெரிவு செய்து அங்குள்ள பண்பாடு, கலை, சமயம் என்ற நிலையிலான பதிவுகள் ஆரம்பிக்க முடிவெடுத்து, இந்தோனேசியாவில் உள்ள அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள், அரண்மனைகள், இந்து பௌத்தக் கோயில்கள் என்ற தலைப்புகளில் பதிவுகள் எழுதப்பட்டன. போட்டியின்போது திரு தகவல் உழவன் மூலமாக சில கருத்துகளைப் பெறும் வாய்ப்பினைப் பெற்றேன். அவருக்கும் திரு நீச்சல்காரன் அவர்களுக்கும், பிற நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. 

இதற்கு முன்னர் 2017இல் நடைபெற்ற விக்கிக்கோப்பைப் போட்டியில் (1 ஜனவரி 2017-31 ஜனவரி 2017) கலந்துகொண்டு 253 பதிவுகளை எழுதி மூன்றாம் இடத்தினைப் பெற்று, விக்கிக்கோப்பை வெற்றியாளர் பதக்கத்தைப் பெற்றதும் ஒரு மறக்க முடியாத அனுபவம் ஆகும். 
 தமிழில் இல்லாததே இல்லை என்பதை உருவாக்க அனைவரும் கைகோர்ப்போம். பிற மொழிகளில் குறிப்பாக ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள, தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாத, கட்டுரைகளை மொழியாக்கம் செய்து தமிழின் பெருமை மென்மேலும் உயரச் செய்வோம். தமிழ் விக்கிப்பீடியா என்றும் தொடர்ந்து முன்னணியில் இருக்க புதியவர்களை அன்போடு அழைப்போம். அவர்களின் எழுத்துப்பணிக்குத் துணை நிற்போம். மூத்த பயனர்களின் வழிகாட்டலோடு பயணிப்போம். விக்கிப்பீடியாவில் எழுத முன்வருவோருக்கு உதவி செய்யவும், என்னால் இயன்றவரை வழிகாட்டவும் ஆயத்தமாக உள்ளேன் என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.


நன்றி: இந்து தமிழ் திசை, 23 பிப்ரவரி 2020

விக்கிபீடியா தொடர்பான பிற பதிவுகள்: 

முந்தைய விருதுகள்
சித்தாந்த இரத்தினம், 1997


அருள்நெறி ஆசான், 1998

பாரதி பணிச்செல்வர், 2001


முன்னோடி விக்கிப்பீடியா எழுத்தாளர், 2015

விக்கிக்கோப்பை வெற்றியாளர் மூன்றாமிடம், 2017 



20 பிப்ரவரி 2022இல் மேம்படுத்தப்பட்டது.

15 February 2020

வியக்க வைக்கும் விக்கிப்பீடியா பதிவர் : புதிய தலைமுறை

வியக்க வைக்கும் விக்கிப்பீடியா பதிவர் என்ற தலைப்பில் என்னுடைய விக்கிப்பீடியா அனுபவங்கள் புதிய தலைமுறை (13.2.2020, பக்.30, 31) இதழில் வெளியாகியுள்ளது. அதனைப் பகிர்வதில் மகிழ்கிறேன், திரு சு.வீரமணி அவர்களுக்கும், புதிய தலைமுறை இதழுக்கும் நன்றியுடன்.

கல்வெட்டு, ஓலைச்சுவடி, அச்சு நூல்கள் என காலம்தோறும் ஒவ்வொரு வளச்சியிலும் கொடிகட்டிப் பறந்தது தமிழ். இப்போது இணையத்திலும் அதுபோல் தமிழின் கொடி பறக்கிறது. அதற்குக் காரணமானவர்களில் ஒருவர் முனைவர் பா.ஜம்புலிங்கம்.

உலகளவில் அனைத்து தகவல்களையும் தரக்கூடிய, கட்டற்ற செய்தி களஞ்சியமாக விக்கிப்பீடியா உள்ளதால், எந்த செய்தியைப் பற்றி அறிந்துகொள்ளவும் உடனே நாம் இணையத்தில் துலாவுவது விக்கிப்பீடியாவைத்தான். ஆங்கிலம், சீனம், ரஷ்ய மொழிகளில் அதிகளவிலான செய்திக் கட்டுரைகள் விக்கிப்பீடியாவில் உள்ளது. ஆனால், தமிழில் அந்தளவுக்கு விக்கிப்பீடியாவில் செய்திகள் இல்லையென்ற குறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்து வந்தது. அந்த குறையை போக்கி பல்வேறு தமிழ் கட்டுரைகளை விக்கிப்பீடியாவில் சேர்க்கும் நோக்கத்துடன் பல தமிழறிஞர்கள் விக்கிப்பீடியாவில் பயனராக இணைந்தனர்.



இவ்வாறு 2014இல் விக்கிப்பீடியாவில் எழுதத் தொடங்கி தமிழில் இல்லாத, தமிழில் வெளிவராத பதிவுகளை புதிதாக எழுதுவதையும், ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதையும் தொடர்ந்து செய்து வருகிறார் முனைவர் பா.ஜம்புலிங்கம். இப்போது வரை தமிழ் விக்கிப்பீடியாவில் 994 கட்டுரைகள், ஆங்கில விக்கிப்பீடியாவில் 146 கட்டுரைகள் என மொத்தம் 1140 கட்டுரைகள் எழுதியுள்ளார். அவரைச் சந்தித்தோம்.

விக்கிப்பீடியாவில் தகவல்களை பதிவேற்றிக்கொண்டே நம்மிடம் பேசிய முனைவர் பா.ஜம்புலிங்கம் “நான் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உதவிப்பதிவாளராக இருந்து ஓய்வு பெற்றுள்ளேன். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோதே கடந்த 25 ஆண்டுகளாக சோழ நாட்டில் உள்ள பௌத்தம் தொடர்பான சிற்பங்கள், விகாரைகள், அதன் எச்சங்கள் பற்றிய ஆய்வுகளை செய்து வந்தேன். அதற்கான களப்பணியின்போது நான் புதிதாக 30 புத்த, சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் கண்டறிந்துள்ளதுடன், சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளேன்.

இந்த தகவல்களை பதிவு செய்வதற்காகத்தான் முதன்முதலாக இணையத்தில் இணைந்தேன். சோழ நாட்டில் பௌத்தம் தொடர்பான தகவல்களை பதிவு செய்வதற்காக ‘சோழ நாட்டில் பௌத்தம்’ என்ற ப்ளாக் தொடங்கி எழுதினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு ‘முனைவர் ஜம்புலிங்கம்’ என்ற பெயரிலும் ஒரு ப்ளாக் தொடங்கி எழுத ஆரம்பித்தேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அப்போதுதான் விக்கிப்பீடியா அறிமுகமானது. ஆங்கில விக்கிப்பீடியாவில் உலகிலுள்ள அனைத்து தகவல்களும் விரல் நுனியிலிருந்தது. ஆனால், தமிழ் விக்கிப்பீடியாவைப் பார்த்தபோது அதில் பெரும்பாலான தகவல்கள் இல்லை. அதனால், அதில் பயனராக இணைந்து புதிய பதிவுகளை எழுதுவோம் என்று சாதாரணமாக ஆரம்பித்த வேலைதான் இப்போது இந்த சூழலில் வந்து நிற்கிறது. ஆரம்பத்தில் நான் விக்கிப்பீடியாவில் இல்லாத அறிஞர்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், கோயில்கள், அருங்காட்சியகங்கள், புத்தக மதிப்புரை போன்றவற்றை எழுதினேன். பிறகு பல்வேறு தகவல்களை எழுத ஆரம்பித்தேன். ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்தும், தமிழில் உள்ள கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் எழுதியுள்ளேன்”  என்றபடி நினைவுகளை அசைபோடுகிறார்.

2014ஆம் ஆண்டில் தொடங்கி ஆறு ஆண்டுகளாக விக்கிப்பீடியாவில் இயங்கிவரும் இவர், ஒவ்வொரு ஆண்டும் விக்கிப்பீடியாவில் அதிகக் கட்டுரைகள் எழுதியோர் பட்டியலில் முன்னணி இடத்தில் இருக்கிறார். விக்கிப்பீடியாவில் எப்படி எழுதுவது என்று இளைஞர்கள், சக அறிஞர்களுக்கு பயிற்சியளித்தும் வருகிறார்.

விக்கிப்பீடியாவில் எழுதுவதற்காக எந்த மதிப்பூதியமும் அந்த நிறுவனத்திலிருந்து  வழங்கப்படுவதில்லை. இருந்தாலும் தனது சொந்தக் காசை செலவு செய்து தமிழகத்தில் உள்ள முக்கியமான கோயிலகள், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கெல்லாம் சென்று அதனைப் பற்றி பதிவு செய்துள்ளார் ஜம்புலிங்கம். நாம் விக்கிப்பீடியாவில் தேடும் பெரும்பாலான கோயில்களைப் பற்றிப் பதிவு செய்திருப்பது இவர்தான்.

தொடர்ந்து பேசிய ஜம்புலிங்கம், “உலகில் அதிக கல்வெட்டுகள், சுவடிகள் கொண்ட மொழி தமிழ்தான். அதுபோல இணையத்திலும் நமது தமிழ் வியாபித்து நிற்கவேண்டும். அதற்காகத்தான் உழைத்து வருகிறேன். இளைஞர்கள், அறிஞர்கள் அனைவரும் கடமையாக நினைத்து விக்கிப்பீடியாவில் பதிவு செய்தால் அது தமிழ்ச் சமூகத்துக்கு பயனுற்றதாக இருக்கும்” என்கிறார்.   
புகைப்படம் நன்றி : புதிய தலைமுறை
             
விக்கிபீடியா தொடர்பான பிற பதிவுகள்: 
டிசம்பர் 2019 : விக்கிபீடியாவில் 900ஆவது பதிவு
பிப்ரவரி 2020 : விக்கிபீடியா வேங்கைத்திட்டம் :முதலிடத்தில் தமிழ்
---------------------------------------
The Hindu நாளிதழில் வருகின்ற வித்தியாசமான சொற்களைப் பற்றி அவ்வபோது முகநூலில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் அண்மையில் பதிந்த பதிவு.

Love letter சொல் பயன்பாடு.

"போர்ச்சூழலில் ஸ்கேட்போர்டு கற்றுக்கொள்ளல் (நீ ஒரு பெண்ணாக இருப்பின்)" திரைப்படமானது ஆப்கானிய நாட்டுப் பெண்களுக்கான என் அன்புக்காணிக்கை என்று அதன் இயக்குநர் கரோல் டைசிங்கர் கூறினார். The film's director Carol Dysinger also highlighted.......... "This movie is my love letter to the brave girls of that country," she said. (The Hindu of even date, p.16) (போஸ்டர் நன்றி : https://skateistan.org/)



---------------------------------------

05 February 2020

இராஜராஜேச்சரம் குடமுழுக்கு

இராஜராஜேச்சரம் என்றழைக்கப்படுகின்ற பெரிய கோயிலின் குடமுழுக்கு இன்று காலை 5 பிப்ரவரி 2020இல் நடைபெற்றது. 1997க்குப் பிறகு நடைபெறுகின்ற இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக விடியற்காலை 1.00 மணியளவில் கிளம்பி கோயிலுக்கு வந்து சேர்ந்தேன். கோயிலுக்கு வெளியே தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அவனின் அருளைப் பெற எனக்கு முன்னரே பலர் வந்து காத்துக்கிடப்பதைக் காணமுடிந்தது.

கூட்டத்தில் இவ்வாறாக இருந்து பார்க்கவேண்டுமா என்பதை நினைக்கும்போது சொந்த ஊரான கும்பகோணத்துக் கோயில் விழாக்கள் நினைவிற்கு வந்தன. ஒவ்வொரு விழாவின்போதும் ஆர்வமாகக் கலந்துகொண்ட அனுபவம் இதிலும் கலந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியது. 

விடியற்காலை 1.30 கோயில் நோக்கிச் செல்லல்




விடியற்காலை 4.15 மணி வரை ராஜராஜசோழன் சிலையருகே காத்திருப்பு

சுமார் 4.30 மணி வாக்கில் தடுப்புகள் திறந்தபின்னர்
கோயில் நோக்கிச் சென்றபோது எடுத்த படம்


காலை 4.00 மணிக்கு திறக்கப்படவுள்ளதாக முன்னர் கூறப்பட்டது. ஆனால் 4.30 மணிவாக்கில்தான் வெளியே (கோயிலுக்கு வெளியே சற்று தூரத்தில்) இருந்த தற்காலிக கதவுகள் திறக்கப்பட்டன. கேரளாந்தகன் வாயிலுக்கு வலது புறம் உள்ள பாதை வழியாக அனைவரையும் அனுப்பினர். கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. 


உள்ளே நுழைந்தவுடன் (சுமார் 4.30 மணிவாக்கில்) முன்மண்டபத்தோடு கூடிய விமானத்தைப் பார்த்ததும் விண்ணிலிருந்து வந்து இறங்கிய, தங்கத்தகடு போர்த்தியதைப் போன்ற உணர்வினைக் காணமுடிந்தது. அந்த இருட்டில் வண்ண விளக்கொளியில் விமானம் தங்க விமானமாகக் காட்சியளித்தது.


சுமார் 7.30 மணி வரை பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் அப்படியே அமர்ந்திருக்க வேண்டியிருந்தது. கையில் பிஸ்கட், பழம், குளுகோஸ், குடிநீர் ஆகியவற்றை எடுத்துச் சென்றிருந்ததால் கொஞ்சம் சமாளித்தேன். 
வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர் ஆர்வம் காரணமாக வந்து காத்திருந்ததைக் காணமுடிந்தது. யாகசாலை நடந்துகொண்டிருப்பது ஒலிபெருக்கி மூலமாக எங்களுக்குத் தெரிந்தது. எட்டாம் நிலை யாகசாலைப் பூசை முடிந்தபின்னர் கலசங்கள் எடுத்துவரப்பட்டன. அதனைப் பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
தொடர்ந்து குடமுழுக்கிற்கான ஏற்பாடுகள் தொடங்கி கலசங்கள் அந்தந்த சன்னதிக்கு மேலே எடுத்துச் செல்லப்பட்டன. கலசத்தை ஏற்றியதை முன்பொரு பதிவில் நாம் பார்த்துள்ளோம். நான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து விமானம், இராசராசன் வாயில், கேரளாந்தகன் வாயில் ஆகியவற்றைக் காண முடிந்தது. 
  




சுமார் 9.00 மணிக்கு மேல் நிகழ்வுகள் நிறைவிற்கு வர அனைவருடைய சிந்தனைகளும், கண்களும் விமானத்தின் உச்சியை நோக்கியே இருந்தன. எங்கும் சிவ சிவ, தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி முழக்கங்கள் விமானத்தையும் தாண்டி, விண்ணைத் தொட்டன.  


  


வழக்கமாக தினமும் ஒரு தேவாரப்பதிகம் என்ற நிலையில் பல ஆண்டுகளாகப் படித்துவருகிறேன். குடமுழுக்கு நாளன்று பொருத்தமாக கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பாவில் ஒன்பதாக அமைந்துள்ள தஞ்சை இராசராசேச்சரம் பற்றி படிக்கும் வாய்ப்பு  கிடைத்தது. அப்பொருத்தத்தினை எண்ணி வியந்தேன். அதில் ஒரு பாடலுக்கான பொருளைப் பகிர்ந்து எம்பெருமானை நினைவுகூர்வதைப் பெருமையாக எண்ணுகிறேன்.  

"தேவதாரு, மந்தாரம், சண்பகம், மகிழ், சந்தனம் ஆகிய ரங்கள் நிறைந்த நந்தவனத்தின் கரிய இருள் பரவியிருக்கின்ற இடமும் மதிலும் சூழ்ந்த தஞ்சையில் உள்ள இராசராசேச்சரம் என்னும் பெரிய கோயிலில் எழுந்தருளிய இப்பெருவுடையாரிடத்துப் பிறவிப்பிணிக்கு அரிய மருந்து ஆகிய அவரது திருவருளைப் பருகித் துன்பம் நீங்கப் பெற்ற கருவூர்த்தேவர் பாடிய பாமாலையாகிய இந்தப் பத்துப் பாடலகளின் பொருளாகிய அரிய மருந்தை உண்பவர்கள், உணர்ந்து அனுபவிப்பவர்கள் சிவபதம் என்னும் அழகிய பெரிய  கயிலாய மலையைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டவர்கள் ஆவார்கள்."

அரசுத்துறைகள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், பக்தர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடு மிகவும் சிறப்பாக விழா நிறைவடைந்தது. இப்பணியைச் செவ்வனே செய்த அனைவரும் போற்றுதற்குரியவர்கள் ஆவர். கி.பி.1010இல் மாமன்னன் இராசராசன் கோயிலை அமைத்து குடமுழுக்கு செய்து 1010 ஆண்டுகளுக்குப் பின்னர் காணும் பேற்றினைப் பெற்றது மகிழ்ச்சியே. நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்காகவும் மனதுருகி இறைவனை வணங்கி மன நிறைவோடு அங்கிருந்து கிளம்பினேன்.