1979இல் கும்பகோணத்தில் கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு, சென்னையிலும், கோவையிலும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றினேன். பின்னர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் 16.8.1982இல் தட்டச்சுச் சுருக்கெழுத்தாளராக பணியில் சேர்ந்த நான் வார, மாத இதழ்களில் வாசகர் கடிதம் எழுத ஆரம்பித்தேன்.
முதல் வாசகர் கடிதம் 15.9.1983இல் வெளியானது. உடனுக்குடன் கதைகளையும், பிற செய்திகளையும் படித்து, அவற்றைப் பற்றிய கருத்துக்களைத் தெரிவிப்பது என்ற சிந்தனை அப்போது என்னுள் மேலிட்டிருந்தது. நான் எழுதி வெளியாகின்ற வாசகர் கடிதங்களை இதழ்களில் படிக்கும்போது ஏற்பட்ட மகிழ்ச்சியானது சிறுகதைகளை எழுதும் ஆர்வத்தைத் தூண்டியது. கருத்துக்களை மேம்படுத்திக் கொள்ளவும், வெளிக்கொணரவும் இதனை ஓர் வாய்ப்பாக நான் உணர்ந்தேன்.
சிறுகதைகள் நூலாக வடிவம் பெற்றபோது மனதில் ஒருவகையான நிறைவு ஏற்பட்டது. தொடர்ந்து மொழிபெயர்ப்பில் இருந்த ஆர்வமும், படியாக்கம் என்ற நிகழ்வின் மீதான ஆர்வமும் பிற நூல்கள் வரக் காரணமாக அமைந்தன.
இந்நிலையில் வாசகர் கடிதத்தில் தொடங்கிய பயணம்.......
100க்கும் மேற்பட்ட வாசகர் கடிதங்கள்
10 நூல்கள்
100க்கும் மேற்பட்ட வாசகர் கடிதங்கள்
10 நூல்கள்
ஆய்விதழ், நாளிதழ்களில் 150+ கட்டுரைகள்
சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் 200+ பதிவுகள்
முனைவர் ஜம்புலிங்கம் வலைப்பூவில் 440+ பதிவுகள்
சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் 200+ பதிவுகள்
முனைவர் ஜம்புலிங்கம் வலைப்பூவில் 440+ பதிவுகள்
தமிழ் விக்கிப்பீடியாவில் 1320+ கட்டுரைகள்
ஆங்கில விக்கிப்பீடியாவில் 360+ கட்டுரைகள்
175 பத்திரிக்கை நறுக்குகள் முதல் பத்திரிக்கை நறுக்கு (தினமலர், 17.6.1999)
தமிழ்/ஆங்கில இதழ்களில் மேற்கோள்கள்
முதல் மேற்கோள் (The Hindu 24.11.2000)
தமிழ்க்கட்டுரையில் முதல் மேற்கோள் (காலச்சுவடு, ஜூலை 2004)
ஆங்கிலக்கட்டுரையில் முதல் மேற்கோள் (Outlook, 19.7.2004)
தமிழ்/ஆங்கில இதழ்களில் பேட்டிகள்
தமிழ் நாளிதழில் முதல் பேட்டி (தினமணி, 6.1.2008)
ஆங்கில நாளிதழில் முதல் பேட்டி (Times of India, 29.10.2012)
தமிழ் நாளிதழ்களில் கட்டுரைகள்
ராஜராஜன் நேருவின் பார்வையில் (தினமணி, 22.4.2010)
படிப்போம் பகிர்வோம் (தினமணி, 22.4.2013)
தமிழில் இந்த ஆண்டின் சொல் எது? (தி இந்து, 12.1.2014)
நிதான வாசிப்பு (மொழிபெயர்ப்பு) (தி இந்து, 13.1.2014)
இவ்வாறாக என்னை எழுதவைத்ததோடு மட்டுமன்றி களப்பணியில் ஈடுபட வைத்து ஓர் ஆய்வாளனாக உருவாக்கியது சுமார் 35 ஆண்டுகளாக மேலாக நான் பணியாற்றி, பணி நிறைவு பெற்ற தமிழ்ப்பல்கலைக்கழகம். என் எழுத்துப்பணியையும், ஆய்வுப்பணியையும் ஊக்குவிக்கும் அனைத்து நல்லுங்களுக்கும் நன்றி கூறும் இவ்வினிய வேளையில் என்னுடைய நூல்களை வலைப்பூவில் அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகின்றேன்.
தமிழ்/ஆங்கில இதழ்களில் மேற்கோள்கள்
முதல் மேற்கோள் (The Hindu 24.11.2000)
தமிழ்க்கட்டுரையில் முதல் மேற்கோள் (காலச்சுவடு, ஜூலை 2004)
ஆங்கிலக்கட்டுரையில் முதல் மேற்கோள் (Outlook, 19.7.2004)
தமிழ்/ஆங்கில இதழ்களில் பேட்டிகள்
தமிழ் நாளிதழில் முதல் பேட்டி (தினமணி, 6.1.2008)
ஆங்கில நாளிதழில் முதல் பேட்டி (Times of India, 29.10.2012)
தமிழ் நாளிதழ்களில் கட்டுரைகள்
ராஜராஜன் நேருவின் பார்வையில் (தினமணி, 22.4.2010)
படிப்போம் பகிர்வோம் (தினமணி, 22.4.2013)
தமிழில் இந்த ஆண்டின் சொல் எது? (தி இந்து, 12.1.2014)
நிதான வாசிப்பு (மொழிபெயர்ப்பு) (தி இந்து, 13.1.2014)
இவ்வாறாக என்னை எழுதவைத்ததோடு மட்டுமன்றி களப்பணியில் ஈடுபட வைத்து ஓர் ஆய்வாளனாக உருவாக்கியது சுமார் 35 ஆண்டுகளாக மேலாக நான் பணியாற்றி, பணி நிறைவு பெற்ற தமிழ்ப்பல்கலைக்கழகம். என் எழுத்துப்பணியையும், ஆய்வுப்பணியையும் ஊக்குவிக்கும் அனைத்து நல்லுங்களுக்கும் நன்றி கூறும் இவ்வினிய வேளையில் என்னுடைய நூல்களை வலைப்பூவில் அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகின்றேன்.
![]() |
பிட்டி விஜயகுமார், 269/833, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சென்னை 600 021,டிசம்பர் 2001, ரூ.46 |
"ஜம்புலிங்கத்திற்குக் கதை எழுத வருகிறது. ஏராளமான கதைகளுக்குரிய ஊற்றுக்கண்களை மனத்தால் படம் பிடித்துக் கொள்ளும் திறன் கைவசம் இருக்கிறது. பாத்திரங்களை இழுத்துக்கொண்டு மனம் விரும்பியபடியெல்லாம் ஓடவும், அந்தப் பாத்திரங்கள் இழுத்துக்கொண்டு போகும் திசையெல்லாம் இவர் ஓடவும்...இந்தச் சித்து விளையாட்டு இவர் கையிலிருக்கும்போது இவர் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை..." (முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள் அளித்த அணிந்துரையிலிருந்து)
என்னுடைய முதல் நூலான வாழ்வில் வெற்றி, மின்னூலாகவும் வெளிவந்துள்ளது.
![]() |
Judgement Stories of Mariyathai Raman (Tr), New Century Book House (P) Ltd, 41B, SIDCO Industrial Estate, Ambattur, Chennai 600 098, November 2002, I Edition, Rs.30 |
![]() | ||
Tantric Tales of Birbal (Tr), New Century Book House (P) Ltd, November 2002, I Edition, Rs.45 |
![]() |
Jesting Tales of Tenali Raman (Tr), New Century Book House (P) Ltd, October
2005, I Edition, Rs.50 |
![]() |
Nomadic Tales from Greek (Tr), New Century Book House (P) Ltd, May 2007, I Edition, Rs.25 |
".........He (Dr B Jambulingam) is having a flair for translation. His translation work includes the Tamil books of Mullai P.L.Muthiah into English (Mariyathai Raman Theerppu Kathaikal, Birbal Thanthira Kathaikal and Tenali Raman Vikata Kathaikal). Now the author successfully translated the book Greekka Nadodi Kathaikl written in Tamil by C.S.Subramanian into English under the title Nomadic Tales from Greek.....He is a man with a multidimensional outlook who needs encouragement to proceed further with his liteary and academic activities.We hope that this book written by him will go a long way in achieving this ambition....." (From the Preface of Nomadic Tales from Greek)
![]() |
தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 41பி, சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 600 098, டிசம்பர் 2004, ரூ.50 |
"வரலாற்று ஆய்வுக் களங்களிலும், அறிவியல் ஆய்வுக் களங்களிலும் தனித்த முத்திரையைப் பதித்துவரும் நூலாசிரியர் முனைவர் பா.ஜம்புலிங்கம் இவ்வரிய நூலை பெரிதும் பாராட்டும்வண்ணம் உருவாக்கியுள்ளார். படியாக்கம் குறித்த அறிவியல் செய்திகளை இளம் மாணவர்களும், அறிவியல் ஆர்வலர்களும் உணர்ந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் நூலை உருவாக்கியுள்ளார். படியாக்கம் என்னும் இந்நூல் அறிவியல் தமிழுக்கு ஒரு புது வரவாகத் திகழ்கிறது....." (தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள் அளித்த அணிந்துரையிலிருந்து)
![]() |
படியாக்கம் நூலுக்கு முன்னாள் குடியரசுத்தலைவர் மேதகு ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் அளித்த பாராட்டுக்கடிதம் |
![]() |
படியாக்கம் நூலுக்கு தமிழ்ப்பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்ரமணியம் அளித்த பாராட்டுக்கடிதம் ஏடகம், 2481, ஜவுளி செட்டித்தெரு, தெற்கு வீதி, தஞ்சாவூர், அலைபேசி 94434 76597, 2018, ரூ.130 தஞ்சை மாவட்டத்தில் சமணம் என்ற தலைப்பில் நண்பர்கள் திரு தில்லை.கோவிந்தராஜன், முனைவர் மணி.மாறன் ஆகியோருடன் இணைந்து எழுதியுள்ள நூலில் தஞ்சை மாவட்டத்தில் சமண சமய வரலாற்றினை ஆராய்கிறது. விக்கிப்பீடியாவில் எழுதியபோது பெற்ற அனுபவங்களைக் கொண்டு விக்கிப்பீடியா 1000 : பதிவு அனுபவங்கள் என்ற தலைப்பில் எழுதியுள்ள நூலில் விக்கிப்பீடியாவில் பதிவுகளை எழுதும்போது பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துள்ளேன். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur District, 1995) ஆய்வினையும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினையும் (சோழ நாட்டில் பௌத்தம், 1999) நிறைவு செய்து, தொடர்ந்து இரண்டு மாமாங்கத்திற்கும் மேலாக களப்பணி மேற்கொண்டு வரும் நிலையில் என் ஆய்வு மேம்படுத்தப்பட்டு அண்மையில் நூல் வடிவம் பெற்றுள்ளது. "பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் குறிஞ்சி மலரும். அதுபோன்றுதான் மிக அரிதாக ஆண்டுகள் பல கடந்து தமிழகத்தில் பெளத்தம் பற்றிய ஓரிரு நூல்கள் மலர்கின்றன. அதுபோன்றே பெளத்தம் பற்றி ஆய்வோர் இன்று தமிழகத்தில் மிகச்சிலரே. அவர்கள் வரிசையில் முனைவர் பா. ஜம்புலிங்கம் தன் கடின உழைப்பால் பெளத்தம் பற்றி ஆய்ந்து வருவதோடு முக்கிய தரவுகளை ஒளிப்படங்களுடன் ஆவணப்படுத்தியும் வருகின்றார். அவர்தம் கடுமையான உழைப்பின் அற்புதமான வெளிப்பாடுதான் சோழநாட்டில் பெளத்தம் எனும் இந்நூல்...." (முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்) புது எழுத்து, அலைபேசி 98426 47101, 2022, ரூ.1000 பேரா. சோ.ந.கந்தசாமி அவர்களின் மதிப்புரை சோழ நாட்டில் பௌத்தம் நூலை சற்றே மேம்படுத்தி அதன் ஆங்கிலப்பதிப்பினை அடுத்த ஆண்டில் கொணர்ந்தேன். Pudhu Ezhuthu, Mobile 98426 47101, 2023, Rs.1500 பேரா. கோ.தெய்வநாயகம் அவர்களின் மதிப்புரை என்னுடைய நூல்கள் 1) வாழ்வில் வெற்றி, பிட்டி விஜயகுமார், 269/833, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சென்னை 600 021,டிசம்பர் 2001, ரூ.46 2) Judgement Stories of Mariyathai Raman (Tr), New Century Book House (P) Ltd, 41B, SIDCO Industrial Estate, Ambattur, Chennai 600 098, November 2002, I Edition, Rs.30 3) Tantric Tales of Birbal (Tr), NCBH, November 2002, I Edition, Rs.45 4) Jesting Tales of Tenali Raman (Tr), NCBH, October 2005, I Edition, Rs.50 5) Nomadic Tales from Greek (Tr), NCBH, May 2007, I Edition, Rs.25 6) படியாக்கம், தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 41பி, சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 600 098, டிசம்பர் 2004, ரூ.50 7) தஞ்சை மாவட்டத்தில் சமணம், தில்லை.கோவிந்தராஜன், முனைவர் மணி.மாறன் உடன் இணைந்து, ஏடகம், 2481, ஜவுளி செட்டித்தெரு, தெற்கு வீதி, தஞ்சாவூர், அலைபேசி 94434 76597, 2018, ரூ.130 9) சோழ நாட்டில் பௌத்தம், புது எழுத்து, 2/203, அண்ணா நகர், காவேரிப்பட்டிணம், 635 112, அலைபேசி 9842647101, செப்டம்பர் 2022, ரூ.1000 10) Buddhism in Chola Nadu, Pudhu Ezuthu, 2/203, Anna Nagar, Kaveripattinam. 635 112, Mobile 9842647101, 2023. Rs.1500 |
--------------------------------------------------------------------------------------------------
இன்று (20.4.2014) எங்கள் (ஜம்புலிங்கம்-பாக்கியவதி) பேரனுக்கு
(மகன் திரு பாரத்- மருமகள் திருமதி அமுதா)
தமிழழகன்
தமிழழகன்
பெயர் சூட்டு விழா
--------------------------------------------------------------------------------------------------
2 ஆகஸ்டு 2025இல் மேம்படுத்தப்பட்டது.
அன்புடையீர்..
ReplyDeleteதங்களுடைய இல்லத்தில் நிகழும் மங்கலகரமான விழாவினை அறிந்து மனம் மிகவும் மகிழ்கின்றது.
செல்வன் தமிழழகன் அனைத்து நலன்களையும் பெற்று நீடூழி வாழ அன்னை அபிராமவல்லியும் அமுதீசனும் நல்லருள் புரிய வேண்டுகின்றேன்..
வாழ்க வளமுடன்!..
தங்களின் வரவும் வாழ்த்தும் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மனம் நிறைந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி.
Deleteமிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteஎப்பொழுதும் துணையாக வரும் தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி.
Deleteதங்களின் எழுத்துலகச் சாதனைகள் தொடரட்டும்.
ReplyDeleteதமிழழகன்
அருமையான பெயர்.
பெயரினைப் போலவே
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகின்றேன்
தமிழழகன் பெயரினைப் போல வாழ்வாங்கு வாழ வாழ்த்துகின்ற தங்களின் உயரிய பாராட்டுக்கு நன்றி.
Deleteநமது பெயரன், “தமிழழகன்“ - தங்கள் தமிழைப் போலவே தழைத்து வளர்ந்து வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்துகள். தங்களுக்கும் தங்கள் மகன், மருமகளுக்கும் வணக்கம் அய்யா. பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteதங்களின் அன்பான வாழ்த்து எனக்கும் என் குடும்பத்தாருக்கும் எல்லையில்லா மகிழ்வினைத் தருகிறது. நன்றி.
Deleteபாராட்டுக்கள்! உங்கள் ஆங்கில நூல்களை N.C.B.H நடத்தும் புத்தக கண்காட்சிகளில் பார்த்து இருக்கிறேன்.
ReplyDeleteதங்கள் பேரன் தமிழழகனுக்கு வாழ்த்துக்கள்!
எனது ஆங்கில நூல்களைத் தாங்கள் பார்த்தது அறிந்து மகிழ்ச்சி. பேரனுக்கு தாங்கள் அனுப்பிய வாழ்த்துக்கு நன்றி.
Delete(ஜம்புலிங்கம்-பாக்கியவதி) பேரனுக்கு
ReplyDelete(மகன் திரு பாரத்- மருமகள் திருமதி அமுதா)
தமிழழகன் பெயர் சூட்டு விழாவுக்கு இனிய வாழ்த்துகள்...!
எனது பதிவுகளைத் தொடர்ந்து வரும் தங்களின் வருகையும், பெயர் சூட்டுவிழாவிற்கான தங்களின் வாழ்த்தும் மனதிற்கு நிறைவைத்தருகின்றன. நன்றி.
Deleteஎழுத்துலகில் சாதனை படைத்து வரும் தங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக எல்லாம் வல்ல இறைவன் இருப்பது போல் தங்களின் பேரக் குழந்தை "தமிழழகன் "தமிழ் போற்றும் நல்லுலகில் சாதனைச் சுவடுகளைப் பதித்திட பெயருக்கு ஒப்ப வாழ்வும் வளமும் சிறக்க வாழ்த்தி வணங்குகின்றேன் ஐயா .அழைப்பிற்கும்
ReplyDeleteபகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா .
தங்களின் அன்பும் வாழ்த்தும் இறையருளால் கைகூடும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக உண்டு. வருகைக்கு நன்றி.
Deleteதங்கள் சீரிய எழுத்துப் பணி
ReplyDeleteபிரமிக்க வைக்கிறது
விரிவாக பதிவர்களும் அனைவரும்
அறியும் வண்ணம் பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
பேரன் தமிழகனும் தங்களைப் போல
சிறந்த தமிழ் அறிஞராய் எதிர்காலத்தில் விளங்க
எல்லாம வல்லவனை வேண்டிக் கொள்கிறேன்
வாழ்த்துக்களுடன்....
எழுத்துப்பணிகளை ஏதாவது ஓரிடத்தில் பதியும்போது பல வகையில் அது பலன் தரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வாறான முறையை மேற்கொண்டேன். தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி.
Deleteமகிழ்ச்சி.
ReplyDeleteவாழ்த்துகள்.
வழக்கம்போல் தொடர்ந்து பதிவுகளைக் காணும் தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
Deleteஇத்தனைப் புத்தகங்கள் எழுதி,, படியாக்கம் பற்றி தமிழில் அறியக்கொடுத்து ..நன்றி ஐயா.
ReplyDeleteதங்கள் பேரனுக்கு இனிய வாழ்த்துக்கள்! இறைவன் அவனை ஆசிர்வதிக்கட்டும். அழகுப் பெயர் ஐயா..பகிர்விற்கு நன்றி.
1980வாக்கில் கோவையில் Frankenstein என்ற ஆங்கிலப்படம் பார்த்தேன். இறந்த இருவருக்கு (ஒருவர் ஆண் மற்றொருவர் பெண்) உயிரூட்டப்படும் பயங்கரமான படம். அவ்வாறே 1990களில் தஞ்சையில் அதே தலைப்பில் வேறொரு படம் பார்த்தேன். இறந்த ஒருவருக்கு உயிரூட்டப்படும் காட்சி சித்தரிக்கப்பட்டிருக்கும். தொடர்ந்து லண்டனில் டாலி ஆட்டுக்குட்டி செயற்கையாகப் பிறப்பிக்கப்பட்ட செய்தியைப் படித்தேன். அதில் உள்ள ஆர்வம் என்னை இந்நூலை எழுதத் தூண்டியது. தங்கள் வருகைக்கும் என் பேரனுக்கான வாழ்த்துக்கும் நன்றி.
Deleteஉங்களது வலைப்பூவில் பதித்துள்ள உங்கள் களப் பணி சார்ந்த எழுத்துக்கள் படித்துள்ளேன். உங்களது பிற எழுத்துக்கள் பற்றி இப்போதுஅறிகிறேன். ஒரு நல்ல நாளில் பேரனுக்குப் பெயர் சூட்டும் விழாவில் உங்கள் எழுத்தும் பரிமளிக்க இறைவனை வேண்டுகிறேன். பேரன் பல்லாண்டு நலமுடன் வாழவும் வேண்டுகிறேன் . அவன் வளர்ந்து பெரியவனாகும்போது அவன் உங்கள் நூல்கள் பற்றிப் பேசி பெருமை கொள்வான். வாழ்த்துக்கள்
ReplyDeleteமுதன்முதலாக வாசகர் கடிதம் வெளியானபோது நான் பெற்ற மகிழ்ச்சி அளப்பரியது. தொடர்ந்து நண்பர்கள் தரும் ஊக்கம் என் எல்லையை விரிவுபடுத்தியது. தொடர்ந்து எழுதவேண்டும் என்ற முனைப்பானது களத்தை விரிவாக்கியது. பேரனுக்கான தங்களின் வாழ்த்துக்கும் என் எழுத்து மீதான நேசிப்புக்கும் நன்றி.
Deleteதங்களுக்கும் தங்களின் பேரருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
DeleteYou are a hardworking and sincere researcher.You have enough to share with others.It is not only research but also service to society.My sincere wishes to selvan thamilazhagan.
ReplyDeleteஎன் எழுத்தினையும் ஆய்வினையும் பகிர்ந்துகொள்ளும் இக் களத்தில் தாங்கள் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்தமைக்கு நன்றி.
Deleteஅற்புதம்... நிறைவான வாழ்க்கை வாழ்கிறீர்கள்...
ReplyDeleteதங்களின் அன்பான வாழ்த்து இன்னும் என்னை எழுதவைக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. நன்றி.
ReplyDelete