தஞ்சாவூர் நகர சைவ சமய அமைப்புகள் இணைந்து 14.5.1998 முதல் 28.5.1998 வரை சைவ சமய இலவச வகுப்பினை நடத்தின. அவ்வகுப்பில் சிறப்பு நிலைப் பேராசிரியராகப் பங்கேற்று மாணவர்களுக்கு வகுப்பெடுத்து உதவியமைக்காக பாராட்டும் வகையில் சிறப்புப்பட்டம் பெறுவதற்கான அழைப்பினை தஞ்சாவூர், தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டத்தின் அமைப்பாளர் பேராசிரியர் முனைவர் சிவ.திருச்சிற்றம்பலம் அவர்கள் அனுப்பியிருந்தார்.
28.5.1998 அன்று தஞ்சாவூர், கூட்டுறவு குடியிருப்பு வளாகத்திலுள்ள அருள்மிகு கற்பக விநாயகர் கோயில் சொற்பொழிவு மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவின்போது அருள்நெறிக்காவலர் டி.பாலசுப்ரமணியன் எழுதிய சிவமூர்த்தங்கள்-நடராஜர் நூல் வெளியீடு, மாணவ மாணவியருக்குச் சான்றிதழ் வழங்கல், பேராசிரியர்களாக வகுப்பு எடுத்தவர்களுக்கு அருள்நெறி ஆசான் சிறப்புப்பட்டம் வழங்கல், மாணவர்களுக்கு இலவச உணவு உறையுள் வழங்க உதவிய சைவ சமய நிறுவன அருள்நெறிப் புரவலர்களுக்கு பாராட்டு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. அதில் அருள்நெறி ஆசான் என்னும் சிறப்புப்பட்டத்தினைப் பெற்றேன்.
சைவ சமயப் பற்றாளர்களையும், முன்னோடிகளையும் காண்கின்ற, உரையாடுகின்ற வாய்ப்பினைப் பெற்றேன்.




