சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, தஞ்சாவூர் தமிழ்ச்சங்கம்ஆகிய அமைப்புகள் சார்பாக 3 ஆகஸ்டு 2026ஆம் நாள் ஆடிப்பெருக்கன்று மாமன்னர் இராஜராஜ சோழர் முடிசூடிய 1041ஆவது ஆண்டு விழா தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் வளாகத்தில் பெத்தண்ணன் கலையரங்கில் நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கிய விழாவிற்குத் தமிழ்நாடு கலை பண்பாட்டு மைய மண்டல உதவி இயக்குநர் திரு.ராஜாராமன் முன்னிலை வகித்தார். இராஜராஜசோழர் புகழுரையை வரலாற்றறிஞர் முனைவர் கோ.தெய்வநாயகம் எடுத்துரைத்தார். முனைவர் மணி.மாறன், திரு தங்கதுரை, திரு அறம் கிருஷ்ணன், முனைவர் நா.சேதுராமன், திரு யோகம் செழியன், திரு செ.ராமநாதன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். நோக்கவுரையை மருத்துவர் சா.உதயசங்கர் எடுத்துரைத்தார்.
நிகழ்வின்போது அமரர் K.A.நீலகண்ட சாஸ்திரி, அமரர் கோவிந்தராசனார் போன்ற வரலாற்று மாமேதைகள் குடும்பத்தாருக்கு இராஜராஜர் விருதும், திரு.வேதாச்சலம், திரு.கரு.ரராஜேந்திரன் ஆகியோருக்குச் சிறந்த வரலாற்றறிஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டன.
முனைவர்.ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன் எழுதிய "நிலவியல் நோக்கில் கங்கை கொண்ட சோழபுரம் வரலாறு" என்ற நூலை உதவி இயக்குநர் திரு.ராஜாராமன் வெளியிட, அதன் முதல் படியைப் பெறுகின்ற அரிய நல்வாய்ப்பினைப் பெற்றேன்.
முன்னதாக திரு ஆண்டவர் கனி வரவேற்புரையாற்றினார். நிறைவாக திரு கபிலன் நன்றிரை கூறினார். ஸ்ரீநந்தா நாட்டியக்குழுவினரின் நாட்டியாஞ்சலி பார்வையாளர்களைக் கவர்ந்தது. தொடர்ந்து ஆண்டுதோறும் நிகழ்வினைச் சிறப்பாக நடத்திவருகின்ற சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவினரின் முயற்சியும், ஈடுபாடும் போற்றத்தக்கது.
அந்நாள், இந்நாள் வரலாற்றறிஞர்களுக்கு சிறப்பு செய்தது மிகவும் போற்றத்தக்கதாகும். வளரும் இளைஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் தாமும் ஒரு வரலாற்றுச் சாதனையை படைக்கவேண்டும் என்ற ஓர் எண்ணத்தை உண்டாக்க இந்த நிகழ்வு ஒரு பெரிய தூண்டுகோலாக அமையும்.
-----------------------------------------------------------------------------------
புகைப்படங்கள் நன்றி: சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு
-----------------------------------------------------------------------------------









