14 June 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு 'அறிக அறிவியல்' இதழின் பங்கு

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட  காலகட்டத்தில் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு, ஆய்வுக்கு அப்பாற்பட்டு அறிவியல் தொடர்பான கட்டுரைகளையும்  வாசிக்க ஆரம்பித்தேன். அவ்வகையில் நான் வாசித்த முதல் கட்டுரை 1995இல் அனைத்திந்திய அறிவியில் தமிழ்க் கழகம் சார்பாக நடத்தப்பெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான தலைப்பிலான கருத்தரங்கில் "சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு 'அறிக அறிவியல்' இதழின் பங்கு" என்ற தலைப்பிலான கட்டுரையாகும். 

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 7-8.10.1995இல் நடைபெற்ற அக்கருத்தரங்கில் முதன்முதலாகக் கட்டுரையை அளித்தபோது சற்று தயக்கமாக இருந்தது. இருப்பினும் சிறப்பான முறையில் வாசித்தேன். அது அச்சு வடிவில் வெளியான தொகுப்பிலும் இடம்பெற்றது. 







-------------------------------------------------------------------------------------------
நன்றி: வளர் தமிழில் அறிவியல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
பதிப்பாசிரியர்கள்: முனைவர் இராம.சுந்தரம், முனைவர் நே.ஜோசப்
-------------------------------------------------------------------------------------------