24 March 2026

சித்தர் கருவூரார் அருளிய பூஜா விதி: பதிப்பாசிரியர் வீ.ஜெயபால்

தஞ்சாவூர், பெருவுடையார் கோயிலின் கருவூரார் சன்னதியில், அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக சித்தர் பெருவிழாவின் 33ஆம் ஆண்டு நிகழ்வின் ஓர் அங்கமாக அருள்மிகு சித்தர் கருவூரார் அருளிய பூஜா விதி (பதிப்பாசிரியர் சித்தாந்த வித்யாநிதி முனைவர் வீ.ஜெயபால்) என்னும் நூல் 19.4.2008இல் வெளியிடப்பட்டது.  

இந்நூலில் தஞ்சாவூர், பெரிய கோயிலில் அருள்பாலித்து வரும் கருவூர் சித்தரின் வரலாறும், அவருடைய அற்புதங்களும், அவர் அருளிய பூஜாவிதி என்னும் நூலுக்கான உரையும் இடம்பெற்றுள்ளதோடு கருவூர் சித்தரின் யோக அனுபவங்களும் தெளிவாக்கப்பட்டுள்ளதாகப் பதிப்பாசிரியர் கூறுகிறார்.  

இந்த நூல் வெளியீட்டு விழாவில் தலைமை வகிக்கும் பேற்றினைப் பெற்றேன். தலைமையுரையாற்றியதும், விழா தொடர்பான செய்தி நாளிதழில் வெளியானதும் நெஞ்சில் நிற்கும் அனுபவம்.

இதற்கு முன்பாக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாகத் தஞ்சாவூர், பெருவுடையார் கோயிலில் 18.9.1998இல் சிவப்பிரகாசம் குறித்து உரையாற்றியுள்ளேன். 







-------------------------------------------------------------------------------------------
நன்றி: அகத்தியர் சன்மார்க்க சங்கம், தஞ்சாவூர், 
தினமலர் 
-------------------------------------------------------------------------------------------