15 July 2024

சிலப்பதிகாரத்தில் இசைக்கருவிகள் : முனைவர் இராச. கலைவாணி, முனைவர் சு. தமிழ்வேலு

முனைவர் இராச.கலைவாணியும், முனைவர் சு.தமிழ்வேலுவும் இணைந்து எழுதியுள்ள சிலப்பதிகாரத்தில் இசைக்கருவிகள் என்ற நூல்  நரம்புக்கருவி (யாழ், வீணை), காற்றுக்கருவி (குழல், கோடு, சங்கு, சூறைச்சின்னம், வயிர்), தோற்கருவிகள் (ஆறெறிப்பறை, கிணைப்பறை, சிறுபறை, தண்ணுமை, துடி, தொண்டகப்பறை, பறை, முரசு, முருடு, முழவு), கஞ்சக்கருவிகள் (கைத்தாளம், மணி), குயிலுவக்கருவிகள், பல்லியம் என்ற உட்தலைப்புகளில் பல்வேறு வகையான இசைக்கருவிகளைப் பற்றி ஆராய்கிறது.

நூலாசிரியர்கள், இசைக்கருவிகளின் அமைப்பு, பகுதிகள், வளர்ச்சி நிலை, பல்வேறு வகைகள், சிறப்பு, பயன்பாடு ஆகியவற்றை இலக்கியம் உள்ளிட்ட சான்றுகளோடு விவாதிக்கின்றனர். நூலில் காணப்படுகின்ற முக்கியமான கூறுகளில் சிலவற்றைக் காண்போம்.

"சங்க இலக்கியத்தில் வீணை என்னும் சொல் பெயரளவில் கூட பதிவு பெறாத நிலையில் சிலப்பதிகாரத்தில் நாரதன் இசைக்கும் கருவியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது." (.67)

"நாட்டிய அரங்கில் உள்ள அனைத்துக் கருவிகளையும் முதன்மையான கருவியாக நின்று வழி நடத்தக்கூடியது வங்கியம் என்றழைக்கப்படும் குழலே ஆகும்." (.70)

"பக்தி இலக்கியங்கள் சங்கை ஒரு மங்கலகரமான இசைக்கருவியாகப் பதிவு செய்துள்ளன......இன்றைக்கு இறப்புச்சடங்கு நடக்கும் இடங்களில் சேகண்டி என்னும் இரும்புக்கோல் கொண்டு அடிக்கும் வெண்கலத்தட்டுடன் இணை ஒலியாகச் சங்கு பயன்படுத்தப்படுகிறது. " (.92)

"வயிர் என்பது ஒரு வகை ஊது கொம்பு. சங்க காலம் முதலே மிகுதியான பயன்பாட்டில் உள்ள கருவியாகத் திகழ்ந்து வருகிறது. இக்கருவி தனித்தும் பிற இசைக்கருவிகளுடன் இணைந்தும் இசைக்கப்பட்டுள்ளது." (.102)

"தண்ணுமை என்னும் இருமுகப்பறை இரு புறமும் நீண்டு குவிந்து நடுப்பக்கம் அகலமாக அமைந்த பறையாகும். இது தோலினால் இருபுற வாய்களும் மூடப்பட்ட, வார்க்கட்டுகளால் இழுத்துக்கட்டப்பட்ட பறையாகும். மிகத் தொன்மையான பறையாகும்." (.119)

"பறை என்பது பல்வேறு வகையான முழக்கும் தோற்கருவிகளின் பொதுப்பெயர். அதைப் போல் பறை என்பது நெல் முதலான தானியங்களை முகத்தல் அளக்கும் அளவை என்னும் பொருண்மையிலும் சிலப்பதிகாரத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது." (.139)

"முரசு காலை முரசு, வீர முரசு, போர் முரசு, வெற்றி முரசு, மணமுரசு, பொது முரசு, நியாய முரசு, நாள் முரசு எனப் பல செயல்பாடுகளுக்கப் பயன்படுத்தும் வகையில் பல வகைகளாக இருந்துள்ளன. காலை நேரத்தில் கொட்டப்படுவது காலை முரசம் ஆகும்…..திருமண நிகழ்வை அறிவிக்கவும், திருமண நிகழ்வின்போதும் இசைக்கப்படுவது மண முரசாகும்…..." (.146)

"கோவலன் கண்ணகி இருவருக்குமான திருமணத்தை ஊர் முழுவதும் அறிவிக்கின்றனர். அப்போது முரசுடன் முருடு என்னும் தோற்கருவியும் இசைக்கப்பட்டுள்ளது. " (.160)

"காளை மாடுகள், பசுக்கள் ஆகியவற்றின் கழுத்தில் மணி கட்டப்படுவது பழமையான வழக்கமாகும். இனிமையான ஒலிநயம் அல்லது தங்களது மாடுகளைத் தனித்து அடையாளப்படுத்த அல்லது மாடுகளின் இருப்பையும் வருகையையும் அறிந்துகொள்ள எனப் பல்வேறு பயன்பாடுகளை முன்னிறுத்தி மணிகள் கட்டப்பட்டன. சிறிய அளவிலான மணிகள் கயிறு கொண்டு கட்டப்படும் வழக்கம் இன்றும் நிலைபெற்றிருக்கின்றது…சிலப்பதிகாரத்தில் பசுக்கள் கழுத்தில் மணி கட்டப்பட்டிருந்தது. அம்மணி அறுந்து வீழ்தல் என்பது தீய அறிகுறியாகக் கருதப்பட்டது….." (.172)

நூலாசிரியர்கள் குறிப்பிடுகின்ற விளக்கங்களும், ஒப்புநோக்கும், சான்றுகளும் ஒவ்வொரு இசைக்கருவியைப் பற்றியும் ஒரு தெளிவான புரிதலைத் தருகிறது. சங்க காலம் தொடங்கி இன்று வரையிலான பயன்பாட்டைத் தர அவர்கள் எடுத்துக்கொண்டுள்ள முயற்சி பெரிதும் போற்றத்தக்கதாகும். தொடர் களப்பணியும், பரந்த வாசிப்பும் நூல் சிறப்பாக அமையப் பெருந்துணை புரிந்துள்ளது. அரியதொரு நூலைப் படைத்துள்ள ஆசிரியர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

தலைப்பு : சிலப்பதிகாரத்தில் இசைக்கருவிகள்
ஆசிரியர் : முனைவர் இராச. கலைவாணி, முனைவர் சு.தமிழ்வேலு
பதிப்பகம் : ஏழிசைப்பதிப்பகம், தமிழ்க்கலையகம், 15/1, மாந்தோப்புத்தெரு, மூங்கில் தோட்டம், மயிலாடுதுறை 609 305 (அலைபேசி 99655 33832/96299 08792)
ஆண்டு : 2024
விலை : ரூ.200

04 July 2024

Art of Kongunadu (A Collection of Research Articles) : Dr. K. Manivannan

Dr. K. Manivannan's Art of Kongunadu (A Collection of Research Articles) contains 17 articles on the architecture and sculpture of the temples of Kongu region of Tamil Nadu, India. All the articles have endnotes. This book also contains photographs of salient features of selected temples which enable the reader for easier understanding. The bibliography is replete with primary and secondary sources. The glossary is an important addition to this work.  

Jambulingam with author Dr Manivannan/June 2023

In the first chapter the author gives a bird's eye view of the historical significance of the study area, the Kongu Mandalam known for its unique history, culture, art, civilization, and customs,  in brief, based on literature and stone gravings. In the other chapters he discusses about the selected temples of Coimbatore, Dindigul and Tirupur districts of Tamil Nadu. They include the temples of Munthondriswara (Avinashi), Renganatha Perumal (Karamadai), Kannadi Perumal, Magudeeswara (Kodumudi), Ayaduki Cozheeswara, Periyanayahi, Vaheeswara (Palani),  Kulaseharaswami (Sozhamadevi), Vinayaka and Nataraja  (Udumalpet). He put forths the historical background, significance of art and archiecture and the notability with reliable sources. The way he discusses the points prove the depth of his field study.

While discussing about a temple he starts with the location of the temple and analyses its art and architecture. Wherever necessary he gives the apt the literary, inscription and other sources. The special features of garbagriha, (in some temples pradaksinapatha), Antarala, Maha mandapa, Mukha mandapa, Vahana mandapa, Prakara, Nandhi, Palipita, Dvajasthamba, Deepastamba,  Gopura, and Vimana are dealt with. Location of Temple tank, and Temple tree are discussed in detail. In some places he also spells out the development of temple arts.

The role of sculptures, inevitable in temple arts is widely analysed. Starting from the presiding deity Linga and the Devi, he pinpoints the iconographical features of all the murtis. They include Vinayaka, Muruga with his consorts Valli and Deivanai, Dakhinamurti, Brahma, Durga, Chandikeswara, Nayanmars,  In the Vishnu temples the sculptures of the presiding deity with his consorts Sridevi and Bhudevi are dealt with in meticulous manner.

The history of the temples through the ages gives the reader a clear outlook to understand their salient characters. The metamorphosis the temples faced during the period of different rulers are laid out in order with relevant explanations in detail. 

Daily pujas, rituals carried out in the temples and the special days of the temples are also given. This book will be a helpful guide for devotees and the public. I wish the author, with the blessings of the Almighty, cover the other areas of Tamil Nadu and bring out the glimpses of other temples in the coming days.   

----------------------------------------------------

Dr. K.Manivannan (Mobile: 99654 93171), Art of Kongunadu, (A Collection of Research Articles), GM Amudhan Publicaitons, Papanasam, Dec 2020, Rs.200

----------------------------------------------------

26 June 2024

கார்டியன் : 15 வருட வாசிப்பு

கல்லூரிக்காலத்தில் தட்டச்சினையும், சுருக்கெழுத்தினையும் கற்றபோது புதிய சொல்லுக்கான பொருளையும், பயன்பாட்டையும் தெரிந்துகொள்ளும் ஆர்வமும், மொழி நடையினை உற்றுநோக்கும் ஆர்வமும் எனக்கு இருந்தது. அதன் தொடர்ச்சியாகவே நாளிதழ் வாசிப்பை நான் கருதுகிறேன்.

1970களின் இடையில் தொடங்கிய, இந்து  (The Hindu) நாளிதழின் வாசிப்பானது அவ்வப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான் க்ரானிகல் உள்ளிட்டவற்றை வாசிக்கும் ஆவலைத் தூண்டியது. குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைப் பற்றிய செய்தியை,  அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் செய்தியின் தலைப்பு, உட்தலைப்புகள், செய்தி அமைந்துள்ள விதம், சொற்களின் அமைப்பு, எழுத்துருவின் தடிமன், படங்கள், பெட்டிச்செய்திகள்  போன்றவற்றை ஒப்புநோக்கிப் பார்ப்பதுடன்,  மொழி நடையையும் கூர்ந்து கவனிப்பேன்.    

அடுத்து என் கவனமானது இந்து இதழில் மேற்கோளாகக் காட்டப்படுகின்ற, கட்டுரைகள் வெளிவருகின்ற வெளிநாட்டு இதழ்களின் பக்கம் திரும்பியது.  ஒரு முறை அதில் ன் (The Sun) இதழை மேற்கோளிட்டு வந்தச் செய்திகளைக் கண்டேன். ஸ்கூப் எனப்படுகின்ற தலைப்புச்செய்திக்குப் புகழ்பெற்ற அவ்விதழை அச்சில் பார்க்க விரும்பி சன் இதழுக்கு 20 மார்ச் 1997இல் (The Editor, The Sun, London, United Kingdom என்று முகவரியிட்டு) கடிதம் எழுதி, அதனைப் பெற்றேன். டேப்ளாய்ட் வடிவில்  84 பக்கங்களுடன், அதிகமான விளம்பரங்களுடன் இருந்தது. இதழை அனுப்பியதற்காக அவர்களுக்கு 17 ஏப்ரல் 1997இல் நன்றி தெரிவித்தேன். அவ்விதழ், கும்பகோணத்தில் என் இளம் வயதில் எங்கள் தாத்தா வாசித்த நாத்திகம், கல்லூரிக்காலத்தில் நான் வாசித்த பிளிட்ஸ் (Blitz) ஆகிய டேப்ளாய்ட் வடிவ இதழ்களை நினைவூட்டியது. 

என்னுடைய படியாக்கம் (தாமரை பப்ளிகேஷன்ஸ் பி லிட், சென்னை, 2004) நூலுக்காகக் கூடுதல் தரவுகளைத் திரட்ட நேச்சர் (Nature) போன்ற இதழ்களைத் தேடியபோது வெளிநாட்டு ஆங்கில இதழ்களைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். அதில் வெளியான முக்கியமான செய்திகளை மொழியாக்கம் செய்து அயலக வாசிப்பு என்று தலைப்பிட்டும், ஆண்டின் சிறந்த சொல் தொடர்பாகவும் (WOTY, Word of the Year) ஒவ்வோராண்டும் எழுத ஆரம்பித்தேன். அந்த அனுபவங்களைப் பிறிதொரு பதிவில் காண்போம். 

அயலக இதழ்களின் வாசிப்பும், மொழியாக்க ஆர்வமும் 2010களின் இடையில் இணையத்தில் கார்டியன் (The Guardian), நியூ யார்க் டைம்ஸ் (The New York Times) உள்ளிட்ட பல இதழ்களை வாசிக்க ஓர் ஆரம்பமாக அமைந்தது.

இன்றைய (26 ஜூன் 2024) தி கார்டியன் இதழின் முதல் பக்கம்

ஐக்கிய நாடுகளில் 1821இல் மான்செஸ்டர் கார்டியன் என்ற பெயரில் வெளியாகிவந்த,  1959இல் கார்டியன் என்ற பெயரைப் பெற்ற இவ்விதழ் 1821-2005இல் பிராட்ஷீட் வடிவிலும், 2005-2018இல் பெர்லினர் வடிவிலும் வெளியானது. 15 ஜனவரி 2018 முதல் டேப்ளாய்ட் வடிவத்திற்கு மறுபடியும் மாறியபோது, 2005 முதல் பயன்படுத்தப்பட்டு வந்த நீல நிறமும், வெள்ளை நிறமும் கொண்ட முகப்பு வேறு வண்ணத்தினைப் பெற்றது. இதழ் வடிவமைப்பின் மாற்றத்தின்போது கார்டியன், அப்சர்வர் இதழ்களின் முதன்மை இதழாசிரியர் “பல மாதங்கள் மேற்கொண்ட சிந்தனை, படைப்பாற்றல், இலக்குகளின் அடிப்படையின் விளைவே இந்த புதிய வடிவம். இதழின் மூத்த ஆசிரியர்களும், வடிவமைப்பாளர்களும் இணைந்து இதனை வடிவமைத்துள்ளனர். தாம் விரும்புவதைப் போலவே வாசகர்களும் புதிய முகப்பினை விரும்புவர்" என்று கூறியிருந்தார்.

கும்பகோணம் பள்ளித் தீ விபத்து (ஜூலை 2004)முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் மறைவு (ஜூலை 2015),  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு (டிசம்பர் 2016) உள்ளிட்ட பல செய்திகளை இவ்விதழில் கண்டேன்.

கார்டியன் இதழில் வெளியான கட்டுரைகளில் சிலவற்றை வித்தியாசமான தலைப்பு, சில இடங்களில் செய்தியைச் சுருக்குதல், எளிய நடை என்ற உத்திகளைப் பயன்படுத்தி மொழியாக்கம் செய்ய ஆரம்பித்தேன். அவ்வகையில் தமிழ்நாட்டின் இனிய அறுவடை விழாவான பொங்கல் திருநாள் (ஜனவரி 2010)உரிய நேரத்தில் உறங்கச் செல்லும் குழந்தைகள் செய்யும் குறும்பு குறைவே (பிப்ரவரி 2013)உறங்கச்செல்லும்முன் படிப்பதைக் குதூகலமாக்க 10 வழிகள் (செப்டம்பர் 2013)நிதான வாசிப்பு ஒரு கலை (13 ஜனவரி 2014), ஐந்து ரூபாய்க்கு உணவு வழங்கி நல்லெண்ணத்தைப் பெறும் முதல்வர்  (ஏப்ரல் 2014)அமெரிக்கா-கியூபா உறவு: இப்படியும் ஒரு ராஜதந்திரம் (5 ஜனவரி 2015),  நூற்றுக்கணக்கான கோயில்கள், ஆனால் மிகச்சில பிரிட்டிஷாரைக் காணும் நிலை (ஜூலை 2015), தமிழ்நாட்டுப் பெண்கள் ஏன் சாராயம் தடை செய்யப்படவேண்டும் என ஏன் விரும்புகின்றார்கள்? (மே 2016)பலத்த எதிர்ப்பின் காரணமாக தமிழ்நாட்டில், ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கம் (ஜனவரி 2017)என்றென்றும் நாயகன் சே குவாரா இறுதித் தருணங்கள் (9 அக்டோபர் 2017)அலைச்சறுக்கின் மணிமகுடம் மகாபலிபுரம் (பிப்ரவரி 2018)ஹைதராபாத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு இந்திய ரயில்வேயின் ஆன்மீகச்சுற்றுலா (மே 2018) இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக்குவதற்கான எதிர்ப்பு வலுக்கிறது (டிசம்பர் 2022)மோடி  தென்னிந்தியாவை வென்று இந்தியாவின் தேர்தல் வரைபடத்திற்கு மறுவடிவம் தருவாரா? (மே 2024) என்பன போன்ற பல கட்டுரைகளையும் கார்டியனில் படித்துள்ளேன். இவற்றில் சில கட்டுரைகளை இந்து தமிழ் திசை இதழிலும், என் வலைப்பூவிலும் எழுதினேன். மொழியாக்கத்தை ஒரு கலையாக நோக்கிய என் கட்டுரை தினமணி இதழில் வெளியானது.




15 ஜனவரி 2018இல் வெளியான முதல் டேப்ளாய்ட் வடிவ
கார்டியன் இதழுடன் ஆசிரியர்

கார்டியனையும், இந்துவையும் என்னுடைய கைபேசியில் செயலி வழியாகவும், இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி அச்சிதழ்களையும், அவ்வப்போது இணையத்தில் நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், டான் உள்ளிட்ட இதழ்களையும் தொடர்ந்து வாசிக்கிறேன்.   

29 ஜூன் 2024இல் மேம்படுத்தப்பட்டது.

18 June 2024

திருக்குறள் பழநிதீபன் உரை

பழநிதீபன் எழுதியுள்ள திருக்குறள் உரை என்னும் நூல் 133 அதிகாரங்களுக்குமான உரையினைக் கொண்டு அமைந்துள்ளது. அதிகம் பேசப்படுகின்ற, எழுதப்படுகின்ற, விவாதிக்கப்படுகின்ற பொருண்மையில் நூல் எழுத மேற்கொண்டுள்ள நூலாசிரியரின் முயற்சி போற்றத்தக்கதாகும். அறத்துப்பால் (பாயிரம் தொடங்கி இல்லறவியல், துறவிவறவியல், ஊழியல்), பொருட்பால், (அரசியல், அங்கவியல், குடியியல்), இன்பத்துப்பால் (களவியல், கற்பியல்) என்ற வகையில் பிரித்து, நுணுக்கமாக உரையினைத் தந்துள்ளார். எளிய சொற்கள், புரியும் வகையில் அமைந்துள்ள நடை, ஆங்காங்கே சில உதாரணங்கள் என்ற வகையில் படிப்போர் மனதில் பதியும் வகையில் உரை அமைந்துள்ளது. குறிப்பிட்ட பொருள் தொடர்பான தொடர் வாசிப்பும், ஒப்புநோக்கலும் நூலாசிரியர் தன்னுடைய கருத்துகளைத் தெளிவாக முன்வைக்கப் பெரிதும் உதவியுள்ளதைக் காணமுடிகிறது. ஊடாக சமுதாயக் கண்ணோட்டத்தை அவர் வெளிப்படுத்துகின்ற முறையானது அவருடைய சமூகப் பிரக்ஞையை வெளிப்படுத்துகிறது. தம் சிந்தனைக்கேற்றவாறு அதன் கருத்துகளை முற்றிலுமாக மனதில் இருத்திக்கொண்டு அதனை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு குறளையும் தடித்த எழுத்தில் அமைத்து, அடுத்து அதற்கான உரையினை சற்றே உள்ளடக்கித் தந்துள்ளவிதம் சிறப்பாக உள்ளது. 


முன்னுரையில் நூலாசிரியர், திருக்குறள் தொடர்பாக நூல் எழுதி வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதற்கான சூழலைக் கூறியுள்ளார். அவருடய அந்த ஈடுபாடும், விடாமுயற்சியும் தற்போது நூலாக வெளிவடிவம் பெற்றுள்ளது. 

"உலகச் சமயங்களில் சிவனியம், மாலியம், கிறித்துவம், இசுலாம் முதலியவை இறையச்சத்தை மையமாகக் கொண்டு சுழல்கின்றன. பௌத்தம் அறன் அச்சத்தையும், சமணம் இன்னா செய்யாமை அறனையும் முதன்மையாகக் கொண்டு சுழல்கின்றன. ஆரிய சனாதன சமயமோ, இவை இரண்டிலும் சேராமல், வேத மந்திரங்களை மையமாகக் கொண்டு ஓர் அதிசயத் தொங்குத் தோட்டமாக அந்தரத்தில் திகழ்கிறது. திருக்குறள் என்னும் தமிழ்த்தேர், இன்னா செய்யாமை, அறனச்சம் ஆகிய இரண்டின் கலவையால் செய்யப்பட்ட அச்சாணியை நடுவாகக் கொண்டு உலகில் வலம் வருவதை, குறளை உள்ளது உள்ளவாறே அணுகி, ஆழ்ந்தும், ஆய்வு மனத்தோடும், கற்கும்போது அறியமுடிகிறது." என்கிறார். 

குறளில் வரும் அந்தணன் யார்? திருக்குறள் அறநூலா, இலக்கியமா?, முயற்சியா, ஊழா? பகவத் கீதையும், திருக்குறளும் என்ற உட்தலைப்புகளில் பிற்சேர்க்கையில் பல கேள்விகளையும், அவை தொடர்பான விவாதங்களையும் எடுத்துரைக்கிறார். பலவாறான கோணங்களில் அவர் நோக்குகின்ற பாங்கு வாசகரை அதிகம் சிந்திக்க வைக்கிறது. நூலின் இறுதியில் தரப்பட்டுள்ள பாட்டு முதற்குறிப்பு வாசகர்களுக்கு மிகவும் துணையாக உள்ளது. 

வள்ளுவரின் கருத்தியலை, தனித்துவத்தை, சரியான வழியில் மனதில் உள்வாங்கிக்கொண்டு, பகுத்தறிவு நிலையில் உயர்ந்து, இவ்வுலகில் தாமும் நல்வாழ்வு வாழ்ந்து, உலகச் செழிப்புக்கும் உறுதுணை புரிவார்கள் எனில், அதுவே இந்நூலுக்கும் தனக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுவதாகத் தன் எண்ணத்தை வெளிப்படுத்துகிறார். அவ்வகையில் நூலாசிரியர் வெற்றி பெற்றுள்ளார் என்று உறுதியாகக் கூறலாம். அவருடைய முயற்சி போற்றத்தக்கது. மனம் நிறைந்த வாழ்த்துகள். 

---------------------------------------------------------------------------------------------------

நூல் : திருக்குறள் பழநிதீபன் உரை
உரையாசிரியர் : ந.பழநிதீபன் 
பதிப்பகம் : பழநிமாறன் பதிப்பகம், 1/101, இராமலிங்கசாமி மடம் தெரு, அரையாளம் கிராமம் &  அஞ்சல், ஆரணி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம், 632 326,   snpalani267@gmail.com (98427 05710)
ஆண்டு : முதற்பதிப்பு, ஜூன் 2024
விலை : ரூ.320
---------------------------------------------------------------------------------------------------

01 May 2024

From an Agriculturalist Boy to an Advocate

Na. Palani Deepan's From an Agriculturalist Boy to an Advocate is a book having collection of many anecdotes from his life. The sublime style of the writing makes the reader to get involved much in the subject. 



He meticulously shares so many incidents from school days to till date. In the Preface he says that the book is not made of pure gold called Truth. It categorically expresses the open mindset of the author. Of the 34 chapters, many are very interesting and informative. 

The background for his reading habit will make one wonder. He says that he came across the Vanavasam of Kannadasan, while studying VII std and continued reading it many times. Having much impressed through it, he wrote many of his school examinations in simple style, he adds.

After passing in +2, midst of abject poverty, he took much pain to join B.A., (Tamil Literature) in the University of Madras, through correspondence. In the meantime he started taking tuition to students to meet the monthly fees for both English and Tamil typewriting. He reminiscences the good hearted persons who were very helpful in shaping him, with gratitude.             

Now, it is the turn of joining Law School in Madras. The repeat of his struggle. With much effort he gets admission in Law College of Madras and with the magnanimous help of friends continues his journey. He proudly records that as an agriculturist boy he studied, became a lawyer in the same Madras College, was the first graduate from his village to study Law, and then became an advocate. Without strong will this would not have been possible. He proclaims that, by facing the insults and wounds and succeeding boldly, he made Varuna Dharma bow before him. 

He speaks from his heart that for this profession study and practice are very necessary.  Through his legal career, he feels satisfied that poor people and their families are benefitted. 

His search for his better half would arise a surprise among the readers.  As he says like a good wife, good friends are a blessing.  

He opines on many topics and shares his view. They include Tamil language and religion are inseparable, Dravidian movement was the primary reason for his interest in Tamil,  the happiness of life lies in handling relationships carefully, friends are those with whom one can share private things that cannot be shared with wife, like keeping good friends and friendship selecting and reading the books is an art, and those people who are having smoking and drinking habits are playing with disease and death. The list is endless.    

He talks about Tirukkural with much involvementTo him, learning to ride a bicycle is an achievement and learning to swim is a thrill. He analyses his connection with the political parties with the relevant background.  

The author expresses with boldness his memorable moments of his life, for which he has to be appreciated. While reading the book one would feel that the author is exemplary, so as to emulate. 

Na.Palani Deepan, From an Agricultural boy to an Advocate, Palani Publishers, 47/8A, Bharathiyar Street, Arni 632 301, Tamil Nadu, February 2024, Rs.130, Mobile:  98427 05710

06 March 2024

பனை உறை தெய்வம் : குடவாயில் பாலசுப்ரமணியன்

குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதியுள்ள பனை உறை தெய்வம் என்னும் நூல் 25 கட்டுரைகளைக் கொண்டதாகும். அவற்றில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கோயில்களின் சிறப்புகளை சிற்பம், வரலாறு, இலக்கியம் என்ற  பலவகையான பொருண்மைகளில்  ஆசிரியர் விவாதிக்கிறார். அறிவியல், பொறியியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட கூறுபாடுகளைப் பல இடங்களில்  ஒப்புமைப்படுத்தி சிறப்பாகக் கூறியுள்ளார். சிற்பம், கட்டடக்கலைக்கு அப்பாற்பட்டு சமுதாயத்திற்குத் தேவையான பண்பாட்டு அடிப்படையிலான பல நுட்பங்களை கோயில்கள் வெளிப்படுத்தியுள்ளதையும் முன்வைக்கிறார்.  


நூலின் தலைப்பினைப் பார்த்தபோது, கும்பகோணத்தில் என்னுடைய இளம் வயதில் எங்களின் சின்ன ஆத்தா வீட்டில் குலதெய்வம் பனையடியானுக்கு சிவராத்திரியன்று கொண்டாடப்பட்டுவந்த விழா நினைவிற்கு வந்தது. 

மரங்கள் என்பவை தெய்வத்தோடு தொடர்புடையவை என்பதால் ஒவ்வொரு சிவன் கோயிலிலும் தல விருட்சம் என ஏதாவது ஒரு மரம் புனிதமாகப் போற்றப்பெறுவதாகவும், சில கோயில்களில் பனை மரங்களே தல மரங்களாக விளங்குவதாகவும்  கூறுகிறார். மகாகார்த்திகை நாளான கார்த்திகை மாதத்து கார்த்திகை நாளில் சிவன் கோயில்களிலும், விஷ்ணு கோயில்களிலும் ஒரு மனை மரத்தை கோயிலின் வாயிலில் நட்டு அதனைப் பனை மட்டைகளைக் கொண்டு உச்சி வரை மூடுவதைக் குறிக்கின்ற சொக்கப்பனை என்பது உண்மையிலேயே சொக்கன்பனை என்றும், காலப்போக்கில் திரிந்து சொக்கப்பனை ஆகிவிட்டது என்றும் கூறுகிறார். 

பொ.ஆ.870-900இல் முதல் ஆதித்தசோழன் கும்பகோணத்தில் எடுத்த நாகேஸ்வரன் கோயிலில் கருவறையின் அதிஷ்டானத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட இராமாயணச் சிற்பக் காட்சிகள் கம்பர், இராமன் கதையை இலக்கியமாக நமக்குக் காட்டுவதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே சோழ நாட்டுச் சிற்பிகளால் செதுக்கப்பட்டதாகவும், இவ்வாறான இராமாயணத் தொடர்ச் சிற்பக் காட்சிகள் கும்பகோணம்-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் உள்ள புள்ளமங்கை கோயிலில் கலைக்கோட்டு முனிவரின் யாகத்தில் தொடங்கி இராம காதை இறுதி வரை இடம்பெற்றுள்ளதாகவும் கூறுகிறார்.

சேக்கிழார் பெருமான் வாயிலாக, "மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும்..."  என்று தொடங்கும் பதிகம் மலர்ந்த வரலாற்றை நேரில் கேள்வியுற்ற இரண்டாம் இராஜராஜசோழன், கும்பகோணம் அருகிலுள்ள தாராசுரத்தில் தான் எடுத்த இராஜராஜேச்சரத்தில் அறுபத்துமூவர் வரலாற்றுக் காட்சிகளைச் சிற்பத் தொடர்களாகப் படைத்தபோது நாவுக்கரசர் திருவையாற்றுக்கு வந்த வரலாற்றைக் காட்டி அப்பதிகத்தின் பதினொரு பாடலுக்கும் பதினொரு சிற்பக்காட்சியை அமைத்து ஒரு பதிகத்தையே கலைப்படைப்பு வாயிலாக அங்கு காட்சிப்படுத்தியதாகக் கூறுகிறார். அதில் அன்றில், மகன்றிலைப் பற்றிக் கூறும்போது, அன்றில் வேறு, மகன்றில் வேறு என்றும், நாரை வகையைச் சார்ந்த அன்றிலை வடமொழியில் கிரவுஞ்சம் என்றும், அன்றில் இறந்தால் அதன் துணை உடன் இறக்கும் என்பது தவறான கருத்தாகும் என்றும் தெளிவுபடுத்துகிறார். 

தென்குடித்திட்டையில் திருஞானசம்பந்தர் கனகமூக்கு என ஒரு அரிய வகை வயல் மீனைக் குறிப்பிடுவதுபோல திருநாவுக்கரசர், காவிரியாற்றில் வந்த கொய்மீன் எனும் அரிய வகை மீனைப் பற்றி தம் பதிகத்தில் குறிப்பிடுவதாகவும் மக்கள் இவ்வகை மீனை பொய்க்கெண்டை என்றழைப்பதாகவும் கூறுகிறார். 

மழைபெய்யத் தொடங்கியடன் சேகரமாகும் அழுக்கு நீரை நந்தவனங்களுக்கு பாயுமாறு அனுப்பத் தனிக் கால்வாயும், தொடர்ந்த பெருமழையால் பின்பு சேரும் தூய நீரைத் திருக்குளங்களுக்கு அனுப்பத் தனிக் கால்வாயும் அமைத்து, மழைநீர் சேகரிப்பை முற்காலத்தில் நம் கோயில்களில் நடைமுறை சாத்தியமாக்கியதை பல கோயில்களின் கட்டுமான அமைப்பால் அறிய முடியும் என்று கட்டுமானத்தின் பொறியியல் சிறப்பை எடுத்துக்கூறுகிறார். 

நூலைப் படிக்கும்போது நேரில் அவ்விடங்களுக்குச் சென்று காணவேண்டும் என்ற ஆவல் இயற்கையாக எழுவதை உணரமுடிகிறது. அத்தகைய ஓர் எண்ணத்தைத் தூண்டியுள்ள நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

---------------------------------------------------------------------------------------------------
நூல் : பனை உறை தெய்வம்
ஆசிரியர் : குடவாயில் பாலசுப்ரமணியன் (80154 13327)
பதிப்பகம் : அன்னம், 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007  annamakaram@gmail.com (75983 06030/99430 59371)
ஆண்டு : முதற்பதிப்பு, டிசம்பர் 2023
விலை : ரூ.170
---------------------------------------------------------------------------------------------------