தஞ்சாவூர், பெருவுடையார் கோயிலில் சித்தாந்த சாத்திரங்களான 14 நூல்களைப் பற்றி சைவ நெறியாளர்கள் 14 மாதக்கூட்டங்களில் சொற்பொழிவாற்றினர். அதில் 18.9.1998இல் சிவப்பிரகாசம் குறித்து உரையாற்றும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன். பின்னர், சொற்பொழிவுகள் நூல் வடிவம் பெற்றது. அதில் என்னுடைய உரையின் அச்சு வடிவம் வெளியானது.
உமாபதி சிவாச்சாரியார் அருளிய சிவப்பிரகாசம்
முதன் முதலாக தஞ்சாவூர், பெருவுடையார் கோயிலில் இவ்வாறான ஒரு உரையாற்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்ததும், அச்சொற்பொழிவுகள் இடம் பெற்ற தொகுப்பில் என் கட்டுரை இடம் பெற்றதும் எனக்குக் கிடைத்தப் பெரும் பேறாகக் கருதுகிறேன்.








