04 June 2026

மன்னிய சீர் மாதேவருக்கு மதிப்புறு மடல்: கவிஞர் இளையதீபன்

அண்மையில் கும்பகோணத்தில் "தமிழ் ஊற்று இலக்கியக்கூடல்" என்ற அமைப்பினைத் தொடங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோது கவிஞர் இளையதீபன் என்னைச் சந்தித்து, தான் எழுதியுள்ள "மன்னிய சீர் மாதேவருக்கு மதிப்புறு மடல்" என்னும் நூலை வழங்கினார்.  அந்நூலினை வாசித்துப் பெற்ற அனுபவத்தைக் காண்போம்.



எம்பெருமானுக்கு நூலாசிரியர் 17 மடல்களைக் கவிதையாக வடித்துள்ளார். இவற்றைப் படித்தபோது ஈசனுக்கு அருகில் செல்கின்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. ஒரு நண்பருக்கோ, உறவினருக்கோ எழுதும் கடிதத்தைப் போல ஓர் அணுக்கத்தை இக்கடிதங்கள் ஏற்படுத்துகின்றன. திருமுறைகளிலிருந்தும், பிற இலக்கியங்களிலிருந்தும் மேற்கோள்களைத் திரட்டி இவர் வைக்கும் கேள்விகள் ரசிக்கும்படியும், லயிக்கும்படியும் உள்ளன.  

நூலாசிரியர், நிகழ்வு நடந்த இடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார். எம்பெருமானிடம் தன் வேண்டுகோளை வைக்கிறார். தன் ஐயங்களையும், ஆங்காங்கே மொழியின் ரசனையையும் வெளிப்படுத்துகிறார். ஈசனின் பெருமையை அனைவரும் உணரும் வகையில் பல்லாற்றானும் பதிகின்றார்.  

சில இடங்களில் வேண்டுகோள் தெரிகிறது. சில இடங்களில் ஆதங்கம் வெளிப்படுகிறது. நூலாசிரியரின் இலக்கு இறைவனை உரிமையோடு நெருங்குவதே. அவர் அதை உணர்வதோடு வாசிப்போரையும் அந்நிலைக்கு இட்டுச்செல்கிறார். ஒவ்வொரு கடிதத்திற்கும் நாள் குறிப்பிட்டு அனுப்புவதோடு அடியவர்க்கு அடியவன் என நிறைவு செய்த பாங்கு போற்றுதற்குரியது.

எங்கும் எல்லாமுமாக இருக்கும் இறைவனின் பெருமை, திருவிளையாடல்கள், திருவடியின் சிறப்பு, ஐந்து தாண்டவங்கள், கொடிகளின் தொகுப்பு,  என்ற வகையில் பன்முகநோக்கில் விவாதிக்கும் நூலாசிரியர் தன்னுடைய பல ஐயங்களை அவனிடம் கேட்பதன் மூலமாகத் தன்னை தெளிவுபடுத்திக்கொள்வதோடு, வாசகர்களையும் தெளிவுபடுத்திக்கொள்ள வைக்கிறார்.

"கணக்கற்ற வேலை உமக்கு, நேரம் கிடைக்கும்பொழுது இக்கடிதத்தின்மீதும் சற்று கடைக்கண் சாத்தியருளுவாய் என்று நம்புகிறேன்" (ப.3)

"சீற்றம் கொள்ளற்க, கொஞ்சமேனும் நியாயம் இருப்பதாகத் தோன்றினால், ஏற்றருள்க, பரிசீலனை செய்க." (ப.6)

"சிறுமையேன்; உனைப் பற்றும் பாங்கறியேன். பண்பிலேன். உன்பால் அளளவற்ற ஆசையால் மடல் எழுதத் துணிந்தேன். அதை நீ ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் உம்முடைய விருப்பம்." (ப.16)

தன்னுடைய கடிதங்களுக்குப் பரம்பொருளின் மறுமொழியை ஆவலோடு எதிர்பார்க்கும் நூலாசிரியர் அவற்றை எதிர்பார்த்து தொடர்ந்து கடிதம் எழுதிக்கொண்டே இருக்கிறார்.

அனைத்திற்கும் மேலாக அவனே ஆட்டுவிப்பவன் என்பதைப் பதியும்போது அவனிடம் நியாயம் கேட்கும் பாங்கு வாசிப்போரை ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் என்பதே உண்மை.

"நீ ஆட்டுவிக்கின்றாய்; நாங்கள் ஆடுகிறோம். எங்கள் செயலென்று ஏதும் இல்லையே!! எங்கள் பங்கென்று ஏதும் இல்லாதபோது வினைகள் மட்டும் எங்கள் கணக்கில் வைக்கின்றாயே, இது என்ன தர்மம்? வினையின் மூட்டையை எங்கள் முதுகில் ஏற்றுகின்றாயே, எந்த வகையில் நியாயம்?" (ப.26) 

தம்பிரான் தோழரைப் போல நம்மை ஆக்கியது மட்டுமன்றி, ஈசனுக்கு நெருக்கமாக நம்மை இட்டுச்செல்கின்ற  நல்வாய்ப்பினைத் தந்த நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.  மென்மேலும் பல நூல்களைப் படைத்து அவனருளைப் பெற ஈசனை வேண்டுகிறேன்.


நூல்: மன்னிய சீர் மாதேவருக்கு மதிப்புறு மடல்
ஆசிரியர்: கவிஞர் இளையதீபன் மகாலிங்கம்
உரிமைப்பதிவு: இந்து சமய தத்துவ விசாரணை மையம், மயிலாடுதுறை
பதிப்பு: 2025, முதல் பதிப்பு
விலை: ரூ.100
கிடைக்குமிடம்: சு.தட்சிணாமூர்த்தி, 55, வடக்கு வீதி, அறுபத்துமூவர் பேட்டை, கூறைநாடு மயிலாடுதுறை 609 002, அலைபேசி 9442392021
சபா.ப.மகாலிங்கம், 20, பு.சன்னதித்தெரு, திருவிடைமருதூர் 612 104, அலைபேசி 99409 79641

03 June 2026

பேராசிரியர் அ.ம.சத்தியமூர்த்தியின் ஆய்வுக் கருவூலம்

அண்மையில் கும்பகோணத்தில் "தமிழ் ஊற்று இலக்கியக்கூடல்" என்ற அமைப்பினைத் தொடங்கிவைக்கும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன். பல கவிஞர்களையும், எழுத்தாளர்களையும், மண்ணின் மைந்தர்களையும் ஒருசேரக் காணும் வாய்ப்பினையும், சிலருடன் உரையாடும் நல்வாய்ப்பினையும் பெற்றேன். 


தொடக்க விழாவிற்கு வந்திருந்த பேராசிரியர் முனைவர் அ.ம. சத்தியமூர்த்தி அவர்கள், தன்னுடைய படைப்புகளை ஒருங்கிணைத்து அமைத்துள்ள "பேராசிரியர் அ.ம.சத்தியமூர்த்தியின் ஆய்வுக் கருவூலம்" என்ற நூலினை மேடையில் வந்து தந்து வாழ்த்திவிட்டுச் சென்றார். அன்னாருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.


அவர் தன்னுடைய உரையில் "குடந்தைக் கல்லூரித் தமிழறிஞர்கள்" என்னும் நூலை கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் போதிய தரவுகளைத் திரட்டி வெளிக்க் கொணர்ந்த அனுபவத்தைக் குறிப்பிட்டார். 

இந்நூலில் அவர் தான் எழுதிய நூல்கள் (16), அச்சில் வராத ஆய்வு நூல் (1), பதிப்பு நூல்கள் (19), அச்சில் வெளி வராத பதிப்பு நூல்கள் (5), கட்டுரைகள் (206), கருத்தரங்கக் கட்டுரைகள் (62) உள்ளிட்டவற்றை 1972 முதல் கால நிரல் வாரியாகத் தந்துள்ளார். ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் இந்த அடைவு பெரிதும் துணை நிற்கும். நம்மைப் பற்றியும், நம் மண்ணில் வாழ்ந்தோர் பற்றியும் ஆவணப்படுத்தியுள்ள அவரைப் போலவே நாமும் தொடர்ந்து அவ்வாறான பணிகளில் ஈடுபடும்போது அது வரலாற்றுக்கும், இலக்கியத்துக்கும் பெரிய பங்களிப்பாக அமையும். 

கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தது முதல் அண்மைக்காலம் வரை அவருடைய எழுத்துப்பணிகளை மிகவும் சிறப்பாக ஆவணப்படுத்தியுள்ளார்.  ஆங்காங்கே அவர் பகிர்ந்துள்ள அனுபவங்கள் இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாகும். குறிப்பெடுத்தல், கட்டுரைகளை உருவாக்குதல், அவற்றிக்கு அச்சு வடிவம் தருதல் என்ற ஒவ்வொரு திறனும் தன்னுள் ஏற்பட்டதற்கான சூழலையும் காரணத்தையும் எளிமையாகத் தந்துள்ளார். எழுதுவது என்பதைவிட அதனை ஆவணப்படுத்துதலே மிகவும் முக்கியமானது என்பதை நான் அடிக்கடி கூறுவதுண்டு. அவ்வகையில் அன்னாரின் பணி போற்றத்தக்கதாகும். 

என்னுடைய உரையில் நான் அவர் பேசியதைக் குறிப்பிட்டு, பேராசிரியர் சத்தியமூர்த்தி அவர்கள் அடுத்து ஒரு தொகுதி இவ்வாறாக வெளியிடுவாரேயானால் அதில் என் பெயர் அடிக்குறிப்பாகவேனும் இடம்பெறும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டேன்.

என்னுடைய "முனைவர் ஜம்புலிங்கம்" (https://drbjambulingam.blogspot.com/) மற்றும் "சோழ நாட்டில் பௌத்தம்" (https://ponnibuddha.blogspot.com/) என்ற தலைப்பிலான வலைப்பூக்களில் இவ்வாறாக வகைப்படுத்தி பதிவுகளை உரிய தலைப்புகளில் பதிந்துவருகிறேன். 

நூலாசிரியரை அடியொற்றி, வளரும் ஆய்வாளர்கள் தம் படைப்புகளை இவ்வாறாக ஒருங்கிணைத்து ஓரிடத்தில் பதிவு செய்தால் வளரும் தலைமுறையினருக்கு நாம் செய்கின்ற பெரும் பங்களிப்பாக அமையும். 

நூல்: பேராசிரியர் அ.ம.சத்தியமூர்த்தியின் ஆய்வுக் கருவூலம்
ஆசிரியர்: பேராசிரியர் முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி (94430 86520)
பதிப்பகம்: மகேந்திரன் பதிப்பகம், 7/220ஏ, தலைமைச் சாலை, அம்மாச்சத்திரம் 612 103, தஞ்சாவூர் மாவட்டம்
பதிப்பு: அக்டோபர் 2022, முதல் பதிப்பு
விலை: ரூ.40

அந்த நாள் நினைவுகள்
சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்பில் வகுப்பிற்கு விண்ணப்பித்து, நேர்காணலுக்கு அழைக்கப்பட்டபோது நேர்காணல் குழுவின் தலைவரான பேராசிரியர் சி.பாலசுப்பிரமணியம், ஏதேனும் கட்டுரை எழுதி வெளியிட்டிருக்கிறாயா? என்று கேட்டதையும் இல்லை என்று தான் கூறியதையும், தான் தேர்வு செய்யப்படாமல் இருக்க இது ஒரு காரணமாகவும் இருக்கலாம் என்று பதிந்துள்ளார். பின்னர் எம்பில் வகுப்பு தொடங்கி 40 நாள்களுக்குப் பின்னர், ஒரு வகுப்பில் சி.பா.கூறியதன் மூலமாகவே கும்பகோணம் கல்லூரிப்பேராசிரியர் வா.இராமகிருட்டினன் மேற்கொண்ட முயற்சியை அறிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் கேட்ட கேள்வியே தன்னை உறுத்திக்கொண்டிருந்ததாகவும், எப்படியாவது கட்டுரைகள் எழுதி அவற்றை இதழ்களில் வெளியிடவேண்டும் என்ற வேட்கை இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக அவர் மேற்கொண்டு உருவாக்கிய படைப்புகளை எழுதி, பெரிய சாதனை படைத்துள்ளார். இதனைப் படித்தபோது என்னுடைய பல்கலைக்கழக அக்கால நினைவுகள் மனதின் முன்தோன்றின.

பேராசிரியர் சி.பா. அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தபோது (1989-1992) நான் அவரிடம் நேர்முக உதவியாளரிடம் பணியாற்றியது (புகைப்படம் நாள் 16.8.1991) எனக்குக் கிடைத்தற்கரிய அனுபவமாகும். முதன்முதலில் உதவியாளர் நிலையில் நேர்முக உதவியாளர் என்ற பெரும் பொறுப்பினை நான் பெற்றதும், அப்பொறுப்பினை மிகவும் கவனமாக ஏற்றுச் சிறப்பாக நிறைவு செய்து அனைவருடைய வாழ்த்தினைப் பெற்றதும் மறக்கமுடியாததாகும். நேர்மையான மனிதர், அனைவருக்கும் நல்லது செய்யவேண்டும் என்று நினைப்பவர், அவரைக் காண்பதற்கு யார் சென்றாலும் முதலில் அமருங்கள் என்று கூறிவிட்டே பேசுவார். அவருடன் உதவியாளர் என்ற முறையில் பிற பல்கலைக்கழகங்களுக்குச் சென்றதுண்டு. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாங்கள் சந்தித்த அரிய மனிதர்களில் ஒருவர்.   

01 June 2026

தமிழ் ஊற்று இலக்கியக்கூடல்: வாழ்க...வளர்க...

கும்பகோணத்தில் நேற்று (31.5.2026)  "தமிழ் ஊற்று இலக்கியக்கூடல்" அமைப்பின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. அமைப்பைத் தொடங்கிவைத்து தலைமையுரை ஆற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். அமைப்பினைத் தொடங்கிவைப்பதைக் குறிக்கும் வகையில் பதிவேட்டில் முதல் கையொப்பமிட்டேன்.

திரு எஸ்.வி.சங்கரும், திரு க.மனோகரனும் முன்னிலை வகிக்க, திரு கௌரேஇ கணேசன் வரவேற்புரையாற்ற, திரு செருகுடி செந்தில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி நிரலில் கண்டவாறு நூல்கள் அறிமுகம் நடைபெற்றது. கவிஞர்களும், எழுத்தாளர்களும் தத்தம் கருத்தை முன்வைத்ததோடு  இலக்கியக்கூடலுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

என்னுடைய தலைமையுரையில் கீழ்க்கண்டவை உள்ளிட்ட கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். 

  • நான் பிறந்து, வளர்ந்த கும்பகோணத்தில் தமிழ் ஊற்று இலக்கியக்கூடல் அமைப்பினைத் தொடங்கிவைத்ததை எனக்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பாகக் கருதுகிறேன்.
  • பள்ளிக்காலத்தில் படிப்பு, பள்ளி என்றாலே நடுங்கும் அளவிற்கு இருந்த என்னை ஓர் ஆய்வாளனாக உயர்த்திய பெருமையுடையது எண்ணற்ற எழுத்தாளர்களையும், படைப்பாளிகளையும், கவிஞர்களையும் உருவாக்கிய கும்பகோணமாகும். 
  • கட்டடம், சிற்பம் போன்ற கலைகளில் புகழ்பெற்ற இவ்வூரின் அழகு கலைத்தன்மை வாய்ந்ததாகும். அச்சூழலில் வளர்ந்து வாழ்வோருக்கு இயற்கையாகவே அழகியல் ரசனை இருப்பதை உணரமுடியும். அந்த அனுபவத்தை நானும் பெற்றுள்ளேன். அதற்கு ஆரம்பமாக தேணுகா போன்றோரின் நட்பு பெரிதும் உதவியது.
  • கடந்த 50 ஆண்டுகளாக தி இந்து நாளிதழின் வாசகராக இருக்கின்ற என்னுடைய எழுத்துப்பணியானது வாசகர் கடிதத்தில் தொடங்கி, சிறுகதைகளில் வேரூன்ற ஆரம்பித்தது. ஆய்வுத்துறையில் தடம் பதித்தபின்னர் என் கவனமானது களப்பணி நோக்கி திரும்பியது. வரலாற்றறிஞர்கள் குடவாயில் பாலசுப்பிரமணியன், கும்பகோணம் சேதுராமன், சோ.ந.கந்தசாமி உள்ளிட்டோரின் வாழ்த்துகளுடன் தொடர்கின்ற ஆய்வின்போது பல புத்தர் சிலைகளைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விக்கிப்பீடியாவிலும், வலைப்பூக்களிலும் சுமார் 2000க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 10 நூல்கள் என்ற வகையில் எழுத்துப்பணி தொடர்கிறது.
  • கும்பகோணம் தொடர்பாகவும் மகாமகம் தொடர்பாகவும் விக்கிப்பீடியாவிலும், என் வலைப்பூவிலும் கட்டுரைகளை எழுதியதோடு, விழா நடைபெற்றபோது கும்பகோணம் வந்து நேரடியாக புகைப்படமெடுத்து அவற்றை என் பதிவுகளில் இணைத்துள்ளேன்.
  • என் ஆய்வின் முன்னோடியான வரலாற்றறிஞர் மயிலை சீனி வேங்கடசாமியின் பௌத்தமும் தமிழும் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பில் என்னுடைய ஆங்கிலக்கட்டுரை இடம்பெற்றது எனக்கு மன நிறைவைத் தந்த அனுபவம்.
  • அனைத்தையும் வரும் தலைமுறைக்கு எடுத்துச்செல்லவேண்டும் என்ற நோக்கத்திலும் ஆவணப்படுத்துவதில் முழு கவனம் செலுத்துகிறேன். 
  • எனக்கு முன்பாக பேசிய பேராசிரியர் அ.ம.சத்தியமூர்த்தி கும்பகோணம் படைப்பாளிகள் பற்றி தான் கொணர்ந்த தொகுப்பினைப் பற்றிப் பேசினார். அவருடைய முயற்சி போற்றத்தக்கதாகும். அவர் அடுத்து கொணரும் தொகுப்பில் அடிக்குறிப்பிலாவது என் பெயர் இடம்பெறவேண்டும் என்பதே என்னுடைய ஆவல். 
  • தமிழ் ஊற்று இலக்கியக்கூடல் என்பதானது ஓர் அரிய முயற்சி. இதனை நிறுவியுள்ள திரு செல்வகுமார் நிகழ்வுகளைத் தொடர்ந்து சீராக நடத்தி, நிகழ்வுகளை  உரிய முறையில் பதிவு செய்து  ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லவேண்டும். இளம் கவிஞர்களையும், படைப்பாளிகளையும் அறிமுகப்படுத்துதல், நூல்களை அறிமுகப்படுத்துதல், மாணவர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள் என்ற நிலையில் அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் வகையில் நிகழ்வுகளை நடத்தி மென்மேலும் வளர வாழ்த்துகள். 
  • ஒரே நிகழ்வில் பெரும்பாலான இலக்கிய ஆளுமைகளைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது ஓர் அரிய வாய்ப்பாகும். ஒவ்வொவருக்கும் தனிப்பட்ட முறையில் என் நன்றி. 

நிறைவாக தமிழ் ஊற்று இலக்கியக்கூடலில் நிறுவனர் திரு மா.செல்வகுமார் நன்றி கூறினார்.   




(பதிவாளர் என்பதை உதவிப்பதிவாளர் என்று வாசிக்கவேண்டுகிறேன்)











-------------------------------------------------------------------------------------------
நன்றி: தமிழ் ஊற்று இலக்கியக்கூடல், கும்பகோணம்
-------------------------------------------------------------------------------------------

பிள்ளையார் பெற்ற முத்துச்சிவிகை: பெரிய புராண ஆய்வுமாலை 2001











-------------------------------------------------------------------------------------------
நன்றி: பெரிய புராண ஆய்வு மாலை 
பதிப்பாசிரியர்கள்: முனைவர் த.கோ.பரமசிவம் மற்றும் பலர்
-------------------------------------------------------------------------------------------

30 May 2026

சுயசரிதை

கும்பகோணத்தில் 2.4.1959இல் பிறந்து, அங்கேயே பள்ளிப்படிப்பையும், கல்லூரிப்படிப்பையும் நிறைவு செய்து,  படித்த காலத்தில் பெற்ற தட்டச்சு போன்ற தகுதிகளுடன் பணியில் சேர்ந்து, பணி நிறைவு பெற்றது வரை எதிர்கொண்ட வாழ்க்கை அனுபவங்கள் அதிகமாகும். அவற்றில் சிலவற்றை அவ்வப்போது என்னுடைய வலைப்பூவில் எழுதியுள்ளேன். அனைத்தையும் இங்கே வரிசைப்படுத்தி, முடிந்தவரை காலவாரியாக, தந்துள்ளேன். என்னை சுயமதிப்பீடு செய்துகொள்வதற்கும், மேம்படுத்திக்கொள்வதற்கும் இப்பதிவு உதவுவதாக நம்புகிறேன். 

உறவுகள்

நினைவுகள்


விழாக்கள்



பணி/தமிழ்ப் பல்கலைக்கழகம்

சுய மதிப்பீடு

கட்டுரைகள்

பேட்டிகள்
நிகழ்வுகள்

4.6.2026இல் மேம்படுத்தப்பட்டது.

29 May 2026

2016 மகாமகம்

2016ஆம் ஆண்டு மகாமகம் என்னுடைய எழுத்துலகில் ஒரு முக்கியமான தாக்கத்தை உண்டாக்கியது.  அந்த மகாமகத்தின்போது கும்பகோணத்திற்குப் பல முறை சென்று கும்பகோணத்திலுள்ள, தீர்த்தவாரி காண்கின்ற சைவ, வைணவக் கோயில்கள் உள்ளிட்ட பல கோயில்களைப் பற்றி பதிவுகளை எழுதினேன். மகாமகத்தின்போது நடைபெற்ற பெரும்பாலான கோயில்களில் குடமுழுக்குகளில் கலந்துகொண்டுள்ளேன். 

அத்துடன் விக்கிப்பீடியாவிலும்  பதிவுகளை அவ்வப்போது ஆரம்பித்து, உரிய புகைப்படங்களை இணைத்தேன். மகாமகம் தொடர்பாக வெளியான மலர்களில் என்னுடைய கட்டுரைகள் வெளியானதும் ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. இப்பதிவில் மகாமகம் தொடர்பாக எழுதிய கட்டுரைகளை வாசிக்க அந்தந்த பதிவினைச் சொடுக்கலாம். 

2016 மகாமகம் தொடங்குவதற்கு கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட பயணமானது ஓராண்டு நீடித்து, மகாமகம் நிறைவுற்ற பின் நிறைவடைந்தது. மகாமக விழா நாட்களில் தொடர்புடைய கோயிலுக்குச் சென்று புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, அன்றோ மறுநாளோ பதிவில் இணைக்கப்பட்டன. இதற்கு முன்னால் நான் கண்ட ஐந்து மகாமகங்களைப் பற்றியும் பதிவு எழுதியுள்ளேன். ஈசனின் அருளோடு  தொடர்ந்து எழுதுவேன். 

மகாமகத்திற்கு முந்தைய ஆண்டு நிகழ்வுகள்



தீர்த்தவாரி சிவன் கோயில்கள்/கும்பாபிஷேகம்

தீர்த்தவாரி வைணவக் கோயில்கள்/கும்பாபிஷேகம்
மகாமகம் மலர்

மகாமகம் நினைவுகள்

பிற கட்டுரைகள்

மாசி மகம்

விக்கிப்பீடியா
(பதிவு ஆரம்பிக்கப்பட்டு, கோயில்களிலும், குளத்திலும் விழா நாட்களிலும், தீர்த்தவாரி சைவ, வைணவக் கோயில்களிலும் புகைப்படங்கள் என்னால் எடுக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டன.)

28 May 2026

மொழியாக்கம்

மொழியாக்கத்திற்கான ஆரம்பம்


தேடலும், வாசிப்பும்

ஆண்டின் சிறந்த சொல்

தலைவர்கள்

அரசியல், வரலாறு

பிற துறை பிரமுகர்கள்

பிற பொருண்மைகள்
இதழ் பதிப்பு, நடை

அயலக இதழ்களின் செய்தி நறுக்குகள்
Pudhu Ezuthu, Kaveripattinam


விக்கிப்பீடியா

விக்கிப்பீடியாவில் ஜூன் 2013இல் எழுத ஆரம்பித்து பெற்ற பல அனுபவங்களைப் பெறமுடிந்தது. ஆங்கிலத்தில் இல்லாத, தமிழ், தமிழ்ப் பண்பாடு போன்றவை தொடர்பான பதிவுகள் அனைவருக்கும் சென்றடையவேண்டும் என்ற நோக்கில் ஆங்கில விக்கிப்பீடியாவில் எழுத ஆரம்பித்தேன். நான் கடந்து வந்த பாதை புதிய பயனர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். சக விக்கிப்பீடியர்களின் துணையுடன் என் பயணம் தொடரும்.
  • பயனராகாமல் முதல் பதிவு, நீக்கம், ஜுன் 2013
  • என்னைப் பற்றி எழுதுதல், தலைப்புப் பிரிப்பு, பயனர் ஆதல்
  • முதல் பதிவு எழுதி மேம்படுத்துதல், 6 ஜுலை 2014
  • முந்தைய மாத 250 தொகுப்புகளுக்காக பாராட்டு பெறல், ஆகஸ்டு 2014
  • அசத்தும் புதிய பயனர், விடாமுயற்சியாளர், தொடர் பங்களிப்பு (ஆகஸ்டு 2014), சைவ சமயப் பங்களிப்பு (அக்டோபர் 2014) ஆகியவற்றுக்கான பதக்கங்கள் பெறல்.
  • விக்கிகாமன்சில் முதல் படிமம் பதிவு, 15 செப்டம்பர் 2014
  • முதற்பக்கத்தில் “உங்களுக்குத் தெரியுமா?” பகுதியில் நான் ஆரம்பித்த/ மேம்படுத்திய சரபேந்திர பூபாலக் குறவஞ்சி (15 அக்டோபர் 2014), ஆதுர சாலை (29 அக்டோபர் 2014), கங்கா ஆரத்தி (நவம்பர் 2014), ஆழித்தேர் (17 ஜுன் 2015), தஞ்சைப் பெருவுடையார் கோயில் (20 ஜனவரி 2016) கட்டுரைகளிலிருந்து தகவல்கள் வெளிவரல்
  • முகப்புப்பக்கத்தில் பங்களிப்பாளராக அறிமுகமாதல், 1 நவம்பர் 2015
  • என் கணக்கு தற்காவல் பயனர் உரிமைக்கு மாற்றப்படல், ஜுலை 2016
  • வேங்கைத்திட்டம் வெற்றியாளர், 260 பதிவுகள், மூன்றாம் இடம், 2019
  • ஆசிய மாதம் வெற்றியாளர், 115 பதிவுகள், இரண்டாம் இடம், 2019
  • விக்கிப்பீடியாவில் 1000 பதிவுகள் நிறைவு, ஏப்ரல் 2020
  • ஆங்கில விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தில், “Did You Know?” பகுதியில், நான் ஆரம்பித்த Thukkachi Abatsahayesvar temple கட்டுரையிலிருந்து வெளிவரல், 20 ஆகஸ்டு 2017
  • ஆங்கில விக்கிப்பீடியாவின் WikiProject India/The 10,000 Challenge (மே 1, 2020-ஜுலை 31, 2020) திட்டத்தில் கலந்துகொள்ளல்
  • ஆங்கில விக்கிப்பீடியாவில் முதன்முதலாக The Special Barnstar பதக்கத்தினைப் பெறல்
பதிவு அனுபவங்கள்


பேட்டிகள்/நாளிதழ் செய்திகள்


போட்டிகள்

நூல்


நிகழ்வுகள்/விக்கிப்பீடியா

நிகழ்வுகள்/பிற நிறுவனங்கள்

27 May 2026

நூல் மதிப்புரை/Book Review

2013 டிசம்பர் தொடங்கி இவ்வலைப்பூவில் எழுதப்பட்டு வந்துள்ள நூல்களின் மதிப்புரைகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த பக்கத்தைச் சொடுக்கி தேவையான பதிவை வாசிக்க வேண்டுகிறேன். பௌத்தம் தொடர்பான பிற மதிப்புரைகளுக்கான இணைப்பு பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ளது.

தொடர்ந்து, நிறைவாக என் மனைவி, எங்கள் மகன்களின் எழுத்துப்பணி தனியாக கீழே தரப்பட்டுள்ளது.

பன்னிரு திருமுறைகள் 

முதல் மூன்று திருமுறைகள்/ஞானசம்பந்தர் தேவாரம்
நான்காம் திருமுறை/திருநாவுக்கரசர் தேவாரம்
ஐந்தாம் திருமுறை/திருநாவுக்கரசர் தேவாரம்
ஏழாம் திருமுறை/சுந்தரர் தேவாரம்

நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்


அண்டனூர் சுரா/சொல்லேர்/புக் டே
அழகிரி விசுவநாதன்/மறதி வாழ்க (நாடகங்கள்)
அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி/செஞ்சி வேங்கடரமணர் கோயில்
அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி/தமிழ்நாட்டில் சமணம் (கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரை)
உட்கோட்டை பழனியப்பன்/எளிது எளிது ஐ.ஏ.எஸ் தேர்வு
கரந்தை ஜெயக்குமார்/அப்பா
கண்ணதாசன்,சோ./வெற்றிலை வேளாண் கலைச்சொல் அகராதி 
கரந்தை ஜெயக்குமார்(கரந்தை சரவணன் உடன்)/உமாமகேசுவரம் 
கரந்தை ஜெயக்குமார்/கரந்தை மாமனிதர்கள்
கரந்தை ஜெயக்குமார்/சித்தப்பா
கலியுகன் கோபி/செம்மேகம்
கலைவாணி, இராச.,தமிழ்வேலு, சு./சிலப்பதிகாரத்தில் இசைக்கருவிகள்
கனிமொழி செல்லத்துரை/உயிர்சுருட்டி
கிரேஸ் பிரதிபா.வி,/துளிர் விடும் விதைகள் 
குடவாயில் பாலசுப்ரமணியன்/கங்கைகொண்ட சோழீச்சரம்/புக்டே
குடவாயில் பாலசுப்ரமணியன்/கலையியல் ரசனை கட்டுரைகள்
குடவாயில் பாலசுப்ரமணியன்/தஞ்சாவூர் (கி.பி.600-1850)
குடவாயில் பாலசுப்ரமணியன்/பனை உறை தெய்வம்/புக்டே
கும்பகோணம் ஆ.கோபிநாத்/வரலாறு கூறும் "திருநல்ல கூரூர்"
குருநாதன், இராம./போடோ சிறுகதைகள்
சமஸ் (தொ.ஆ.)/சோழர்கள் இன்று
செந்தில்நாயகம், கே., எஸ்.ஏ.சம்பத்குமார்/தமிழகத்தின் முன்னணி நூலகங்கள்
செல்வகுமார், மா./கும்பகோணம்-சுவாமிமலை அருகேயுள்ள கோயில்கள்
தஞ்சை சி.கேசவமூர்த்தி/அணிலாடு சீறூர் (சங்க இலக்கியக் குறுந்தொகைக் கதைகள்)
தில்லை கோவிந்தராஜன்(பதிப்)/விக்கிரம சோழனுலா 
துளசிதரன். வே./ தில்லைஅகத்து/காலம் செய்த கோலமடி
பார்த்திபன், வே./கல்லாகிப் போனவர்கள்
பாலசுப்ரமணியன், கு./அறம் பயில்வோம்
பாலசுப்ரமணியம், ஜி.எம்,/வாழ்வின் விளிம்பில் 
மங்கை ராகவன், சி.வீரராகவன், சுகவன முருகன்/தமிழகத்தில் லகுலீச பாசுபதம்
மணி.மாறன்/தஞ்சையும் அரண்மனையும்
மணி.மாறன்(மற்றும் பயிற்சி மாணவர்கள்)/தமிழ் மருத்துவ முறைகள்
மணிவண்ணன், க./சிற்பக்கலை
முத்துநிலவன், நா./இலக்கணம் இனிது/புக் டே
மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்+/தமிழ் நடைக் கையேடு
ரவிசுப்பிரமணியன்/ஆளுமைகள் தருணங்கள்
வேணுகோபாலன், எஸ்.வி./தர்ப்பண சுந்தரி
வேணுகோபாலன், எஸ்.வி./உதிர்ந்தும் உதிராத
ஜான் ஜெயக்குமார், ஆ./ஒளிவீசும் ஜெபமாலைபுரம் (கண்டதும் கேட்டதும்)
ஜோதிஜி/டாலர் நகரம் 


Benazir Bhutto/Daughter of the East
Charles Chaplin/My autobiography
Jawaharlal Nehru/Glimpses of world history 
Supraja Kannan/One minute birding 

-------------------------------------------------------------------------------------------
சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ
---------------------------------------------------------------------------------------------

-------------------------------------------------------------------------------------------
குடும்பத்தாரின் எழுத்துப்பணி
---------------------------------------------------------------------------------------------

நூல்கள்
பாக்கியவதி, ஜ.(மனைவி)/கோயில் உலா
பாக்கியவதி, ஜ./அப்பாவுக்காக... 
பாரத், ஜ.(மூத்த மகன்)/கடவுள்களுடன் தேநீர்
பாரத், ஜ./திண்ணை
பாரத், ஜ./மண் வாசனை
சிவகுரு, ஜ. (இளைய மகன்)/100 நூறு வார்த்தை கதைகள்
மறக்கமுடியா ஆவணப்பதிவு: 2020இல் எங்கள் வெளியீடுகள்



4.6.2026இல் மேம்படுத்தப்பட்டது.