தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
13 May 2026
பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி
01 May 2026
பழைசை மழபாடியில் திருஞானசம்பந்தர்: பட்டீஸ்வரம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக மலர் 1999
09 April 2026
யாவரும் கேளீர்: வாழ்க, வளர்க..
அன்பு நண்பர் முனைவர் தி.நெடுஞ்செழியன் அனுப்பிவைத்த யாவரும் கேளீர் (ஏப்ரல் 2026) முதல் இதழ் கிடைக்கப்பெற்றேன். ஆசிரியர் உரையுடன் தொடங்கும் இவ்விதழ் பெண்ணியம் அறிதலும் புரிதலும், அமெரிக்க எழுத்தாளர் சக்தியின் தமிழ்மொழிப் பற்றும் படைப்புலகமும், ஒரு நிமிடக்கதை உணர்த்தும் பெண்ணியச் சிந்தனை, சாவித்திரிபாய் புலேயின் பெண் கல்வியை மையமிட்ட அறிவாயுத நுண்ணரசியல், பெண்ணிய நோக்கில் ஒப்பாரிப்பாடல்கள், ஆன்மீக வழி நடந்த ஆளுமை அன்னை தமிழ்ச்செல்வி தங்கம்மா, சில விலங்குகளின் பெயர்களில் சாதி பாரபட்சம், பொன்னாடை, அவர்கள் பெண் வீராங்கனைகளை, சங்க ஔவையார் பாடல்களில் வாழ்வியல் வெளிப்பாடுகள், எழுத்தாளர் கேத்தரீன் ஆரோக்கியசாமி, உடன்கட்டை ஏறுதல்-ஒழிக்கப்பட்ட வரலாறு, கழிகல மகளிர் கைம்பெண் குறித்த சிறுகதைகள் என்ற தலைப்புகளைக் கொண்ட ஆய்வுக்கட்டுரை, கதை, எழுத்தாளர் அறிமுகம் உள்ளிட்ட சிறப்பான பதிவுகளைக் கொண்டு பெண்ணிய சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. ஆங்காங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.
திருச்சியை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்ற அங்குசம் சமூக நல அறக்கட்டளை சார்பில் பொதுக்கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைளை உள்ளடக்கிய ஓர் இடைநிலை இதழாகக் கொண்டு வரும் முயற்சி இது என்று இதழாசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் குறிப்பிடுகிறார். அதன் வெளிப்பாடானது சிறந்த முறையில் இதழில் பிரதிபலிப்பதைப் படிக்கும்போது உணரமுடிந்தது.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிர்வாகப்பணியாளராக அறிமுகமாகி பல்வேறு நிலைகளில் பரிணமித்து திருச்சி, தூய வளனார் கல்லூரியில் தமிழ் இணைப்பேராசிரியராகப் பணி நிறைவு பெற்ற நெடுஞ்செழியனின் முயற்சி மிகவும் போற்றத்தக்கதாகும். அவர் எடுக்கின்ற முன்னெடுப்பு ஒவ்வொன்றும் சிறப்பாக அமைவதை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். கவனிக்கத்தக்க அவருடைய குணங்களில் ஒன்று வளரும் இளைஞர்களையும், ஆய்வாளர்களையும் அறிமுகப்படுத்தி முன்னுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதாகும். அவருடைய மன உறுதியும், தொடர் முயற்சியும் பல ஆக்கபூர்வமான படைப்புகளை சமூகத்திற்குத் தந்துள்ளது. மேற்கொள்ளும் பணியைச் செவ்வனே செய்யவேண்டும் என்ற அவருடைய கொள்கையானது இவ்விதழில் தெளிவாக வெளிப்படுகிறது. இதற்கு முன்னரே அவர் பல நூல்கள் எழுதியுள்ளார். அங்குசம் வார இதழும், அங்குசத்தின் யுடியூப் சேனல்களும் அவருடைய ஆத்மார்த்தமான பணிமீதான ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்றன.
ஒரு இதழ் நடத்துவது என்பது மிகச் சிரமமான காரியமாகும். படைப்புகளைப் பெறுதல், பரிசீலித்தல், தேர்ந்தெடுத்தல், இதழில் உரிய பக்க முறைப்படி அமைத்தல் என்ற வகையில் மிகக்கவனம் செலுத்தியுள்ளதைக் காணமுடிகிறது. கண்ணைக்கவரும் வகையில் மேலட்டை, அழகான வடிவமைப்பு, பக்க அமைப்பு, கண்களுக்கு அயற்சி தராத எழுத்துரு, தேவையான இடங்களில் படங்கள் என்றவாறு திட்டமிட்டு செயல்பட்டுள்ள குழுவினரின் முயற்சி சிறப்பானதாகும். இவ்வாறான ஒரு பெரும் பணியைச் சிரமேற்கொண்டு அனைவரும் வியக்கும் வகையில் இதழைக் கொண்டுவந்துள்ள அவருக்கும், அவருக்குத் துணைநிற்கும் நண்பர்களுக்கும் என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.
07 April 2026
உ.வே.சாமிநாதையர் பிறந்த நாள் விழா: ஏடகம்
24 March 2026
சித்தர் கருவூரார் அருளிய பூஜா விதி: பதிப்பாசிரியர் வீ.ஜெயபால்
தஞ்சாவூர், பெருவுடையார் கோயிலின் கருவூரார் சன்னதியில், அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக சித்தர் பெருவிழாவின் 33ஆம் ஆண்டு நிகழ்வின் ஓர் அங்கமாக அருள்மிகு சித்தர் கருவூரார் அருளிய பூஜா விதி (பதிப்பாசிரியர் சித்தாந்த வித்யாநிதி முனைவர் வீ.ஜெயபால்) என்னும் நூல் 19.4.2008இல் வெளியிடப்பட்டது.
இந்நூலில் தஞ்சாவூர், பெரிய கோயிலில் அருள்பாலித்து வரும் கருவூர் சித்தரின் வரலாறும், அவருடைய அற்புதங்களும், அவர் அருளிய பூஜாவிதி என்னும் நூலுக்கான உரையும் இடம்பெற்றுள்ளதோடு கருவூர் சித்தரின் யோக அனுபவங்களும் தெளிவாக்கப்பட்டுள்ளதாகப் பதிப்பாசிரியர் கூறுகிறார்.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் தலைமை வகிக்கும் பேற்றினைப் பெற்றேன். தலைமையுரையாற்றியதும், விழா தொடர்பான செய்தி நாளிதழில் வெளியானதும் நெஞ்சில் நிற்கும் அனுபவம்.
இதற்கு முன்பாக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாகத் தஞ்சாவூர், பெருவுடையார் கோயிலில் 18.9.1998இல் சிவப்பிரகாசம் குறித்து உரையாற்றியுள்ளேன்.
16 March 2026
வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார் நினைவு தமிழ்ப்பரிதி விருது: ஏடகம்
தஞ்சாவூரில் ஏடகம் சார்பாக அரித்துவாரமங்கலம் பெரும்புலவர், புரவலர் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார் நினைவு தமிழ்ப்பரிதி விருது வழங்கும் விழா 5.1.2025இல் நடைபெற்றது.
இவ்விழாவில் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், முனைவர் கி.தங்கவேல், கவிஞர் ப.திருநாவுக்கரசு ஆகியோர் இவ்விருதினைப் பெற்றனர். இவ்விழாவில் வாழ்த்துரை வழங்குவோரில் ஒருவராக விருதாளர்களை வாழ்த்தும் வாய்ப்பினைப் பெற்றேன்.
13 March 2026
கங்கை கொண்ட சோழீச்சரம் : குடவாயில் பாலசுப்ரமணியன்
05 March 2026
சைவ சித்தாந்த நன்னெறி: ச.சௌரிராசன்
03 March 2026
மெய்கண்ட சித்தாந்த சாத்திரம் (சொற்பொழிவுகள்): சிவப்பிரகாசம்
தஞ்சாவூர், பெருவுடையார் கோயிலில் சித்தாந்த சாத்திரங்களான 14 நூல்களைப் பற்றி சைவ நெறியாளர்கள் 14 மாதக்கூட்டங்களில் சொற்பொழிவாற்றினர். அதில் 18.9.1998இல் சிவப்பிரகாசம் குறித்து உரையாற்றும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன். பின்னர், சொற்பொழிவுகள் நூல் வடிவம் பெற்றது. அதில் என்னுடைய உரையின் அச்சு வடிவம் வெளியானது.
உமாபதி சிவாச்சாரியார் அருளிய சிவப்பிரகாசம்
முதன் முதலாக தஞ்சாவூர், பெருவுடையார் கோயிலில் இவ்வாறான ஒரு உரையாற்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்ததும், அச்சொற்பொழிவுகள் இடம் பெற்ற தொகுப்பில் என் கட்டுரை இடம் பெற்றதும் எனக்குக் கிடைத்தப் பெரும் பேறாகக் கருதுகிறேன்.


















































