20 August 2026
வடசேரி அய்யம்பெருமாள் சுப்பிரமணியம் நூற்றாண்டு சித்திரம்: தென்னவன் வெற்றிச்செல்வன்
13 August 2026
சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு: இராஜராஜ சோழர் முடிசூடிய 1041ஆவது ஆண்டு விழா
சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, தஞ்சாவூர் தமிழ்ச்சங்கம்ஆகிய அமைப்புகள் சார்பாக 3 ஆகஸ்டு 2026ஆம் நாள் ஆடிப்பெருக்கன்று மாமன்னர் இராஜராஜ சோழர் முடிசூடிய 1041ஆவது ஆண்டு விழா தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் வளாகத்தில் பெத்தண்ணன் கலையரங்கில் நடைபெற்றது.
29 July 2026
முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா: உலகத் தமிழர் பேரமைப்பு
தஞ்சாவூர், முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உலகத்தமிழர் பேரமைப்பின் சார்பாக 26.7.2026 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்களின் நூற்றாண்டு விழா, நிகழ்ச்சி நிரலில் கண்டபடி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் ஒரு பார்வையாளராகக் கலந்துகொண்டு, கல்வியாளர்கள் உள்ளிட்ட பெருமக்களின் உரையைக் கேட்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.
இரண்டு அமர்வுகள், பொது அரங்கு என்ற வகையில் நடைபெற்ற கூட்டத்தில் அன்னாரின் ஆளுமையை பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்களும், நண்பர்களும், துறைசார்ந்தோரும் எடுத்துக்கூறி பெருமைப்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது. அவரை நினைவுகூர்ந்தபோது அக்காலத்தில் நான் பணியாற்றிய நாள்கள் நினைவிற்கு வந்தன. இந்நிகழ்வில் ஆய்வாளர்கள், மாணவர்கள், அறிஞர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இவ்விழாவினை நடத்திய உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் திரு பழ.நெடுமாறன் ஐயா அவர்கள், துணைநின்ற அனைத்து பெருமக்களின் பெருமுயற்சி போற்றத்தக்கதாகும்.
24 July 2026
A Writing on Reading
தி இந்து, பிரண்ட்லைன், வெளிநாட்டு இதழ்கள் வாசிப்பு மற்றும் மொழிபெயர்ப்பு அனுபவ அடிப்படையில் நான் எழுதிய ஆங்கிலக்கட்டுரை (A Writing on Reading) "இன்றைய மொழியியல்" என்ற தேசிய கருத்தரங்கிற்காக அளிக்கப்பட்டு, "பேரா.ச.இராசேந்திரன் மணிவிழா மற்றும் பணியாற்றிய பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா மலர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2012" என்ற கருத்தரங்கத் தொகுப்பில் இடம்பெற்றது.
இதில் நான் வாசித்த இதழ்களின் தலைப்புகள், மனதில் பதிந்த சொற்கள் குறித்த கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அவ்வப்போது நண்பர்களிடம் விவாதிக்கும் சொற்களை ஒரு கட்டுரையாகக் கொணர வேண்டும் என்ற முயற்சி இதன்மூலம் நிறைவேறியது. ஆங்கிலத்தில் நான் எழுதியுள்ள கட்டுரைகளில் மிக முககியமானதாக இதைக் கருதுகிறேன்.
21 July 2026
சிவனைப் பற்றிய சிந்தனைகள்: குடந்தை கே.என்.நாகராஜன்
![]() |
| எங்கள் இல்ல நூலகத்தில் நூலாசிரியருடன் (நாள் 20.7.2026) |
17 July 2026
ஒளிரும் தகளி-தகளி வாழ்வியல் முறைகள்: சித்தவர்மானி சமத்துவராஜன் சம்பத்
சித்தவர்மானி சமத்துவராஜன் சம்பத் எழுதியுள்ள “ஒளிரும் தகளி” என்னும் நூல், தகளி வாழ்வியல் முறைகளை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைக்கிறது. இதுவரை எவரும் அதிகம் அறிந்திராத தகளி என்னும் சொல், அது புலப்படுத்துகின்ற பொருள் ஆகியவற்றைப் பற்றி நூலாசிரியர் தந்துள்ள விளக்கம் அதனைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தினைத் தூண்டுகிறது. சென்னைப் பல்கலைக்கழக அகராதி, 'தகளி' என்ற சொல்லுக்கு 'அகல்', 'உண்கலம்' என்ற பொருள்களைத் தருகிறது.
![]() |
| எங்கள் இல்ல நூலகத்தில் நூலாசிரியருடன் (நாள் 20.5.2026) |

















































