கும்பகோணத்தில் வீட்டிற்கு வரும் கடிதங்கள், வீட்டு வரி, மின்சார வரி ரசீதுகள், திருமண அழைப்புகள் போன்றவற்றை எங்கள் தாத்தா கம்பியில் குத்தி வைத்திருப்பார். சில சமயங்களில் முக்கியமான கடிதங்களை அதில் தேடிக் கண்டுபிடித்துவிடுவார். அந்த கடிதக் கம்பியில் எங்கள் தாத்தாவிற்கு பெருந்தலைவர் காமராஜர் எழுதிய கடிதத்தையும் நான் பார்த்துள்ளேன். தற்போது அது எதுவுமே இல்லை. நினைவில் மட்டுமே.
1976இல் வேலை வேண்டி விண்ணப்பித்த கடிதத்தின் நகலிலிருந்து என்னுடைய ஆவணக்கோப்பு தொடங்குகிறது. பின்னர் இலக்கியம் (1983 முதல்), மொழிபெயர்ப்பு (1999 முதல்), ஆய்வு (1994 முதல்) என்று பல தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டது. ஆய்வு தொடர்பானவற்றை களப்பணி, ஆதாரங்கள், கண்டுபிடிப்புகள், கட்டுரைகள், நாளிதழ் செய்திகள் என்ற வகையில் பிரித்துள்ளேன்.
அவ்வப்போதைய நிகழ்வுகளைப் பதிவதோடு, அந்தந்த பகுப்பில் சேர்த்துவிடுவதால், எளிதில் கண்டுபிடித்துவிடலாம். நேரத்தை பயனுள்ள பிற பணிகளில் பயன்படுத்தலாம். இந்த அடிப்படை ஒழுங்கு பல நிலைகளில் நம்மை மேம்படுத்திக்கொள்ள உதவும். என் குடும்பத்தாருக்கும் இதனைப் பழக்கப்படுத்தி உள்ளேன். அவர்களும், என்னைப் பார்த்து சில நண்பர்களும் இந்தமுறையைக் கடைபிடித்து வருகின்றார்கள்.
வேலைக்கு அனுப்பிய முதல் விண்ணப்பம், எனக்கு வேலை கிடைத்ததாக வந்த முதல் தந்தி, பல்வேறு நிறுவனங்களுக்கு நான் வேலைக்காக அனுப்பிய விண்ணப்பங்கள், அதற்கான பணியாணைகள், முதன்முதலாக சைக்கிள் வாங்கியது, என் திருமண அழைப்பு தொடங்கி இல்லத்தின் முக்கிய நிகழ்வுகள் தொடர்பான அழைப்பிதழ்கள், நாளிதழ் வார இதழ்கள், முக்கியப் பிரமுகர்களுடனான கடிதப்போக்குவரத்து என்ற வகையில் இவற்றில் ஆவணங்கள் உள்ளன. ஆரம்ப காலத்தில் பொருளடக்கம் அமைக்காமல் இருந்தேன். பின்னர் எளிதில் கண்டுபிடிக்க வசதியாக அந்தந்த ஆண்டிற்கான பொருளடக்கத்தை பொருண்மைவாரியாக அமைக்க ஆரம்பித்தேன்.
அருமையான சிறப்பான செயல் ஐயா...
ReplyDeleteவித்தியாசமான ஒழுங்குமுறை... சில நேரங்களில் வாழ்க்கையின் சில பகுதிகளைத் திரும்பிப்பார்க்க விழையமாட்டோம்.
ReplyDeleteஎன் அப்பா கொஞ்ச காலம் இதை கடைப்பிடித்து வந்தார். நாங்கள் அரசாங்கத் குடியிருப்புகளில் வசித்ததால் இது தொடர சாத்தியமில்லாது போயிற்று. உண்மையிலேயே நல்ல வழக்கம். இந்தக் காலத்தில் யார் கடிதம் எல்லாம் போடுகிறார்கள்!
ReplyDeleteஅய்யா..வணக்கம்.சொந்த ஊர் மதுரை பக்கம் ..உங்களைப் பற்றி முனி கோயில் புத்தர் கோயில்ன்னு சொல்லி தீர்ப்பு வாங்கிய செய்தி மூலம் தொடர்பு கொள்கிறேன்.
ReplyDelete.எப்படி முனி கோயில் புத்தர்ன்னு சொல்றீங்க? அதற்குரிய உண்மை பதிவுகளை பகிர முடியுமா? என் முகவரி..bsvijayan@gmail.com..நான் வெளிநாட்டில் இருக்கிறேன்..உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அழைக்கிறேன்..
ஆவண நாயகர் தாங்கள்.
ReplyDeleteவிக்கி வேந்தரின் சாதனைகள் தொடரட்டும்
ReplyDelete