10 November 2025

விக்கிப்பீடியாவில் எழுதுதல் : அ.வ.வ.கல்லூரி

மயிலாடுதுறை, அ.வ.வ. கல்லூரித் தமிழாய்வுத் துறையின் ஸ்ரீலோசனி வரதராஜுலு அறக்கட்டளை சார்பாக 7.3.2024இல் விக்கிப்பீடியாவில் எழுதுதல் என்னும் பொருண்மையில் நிகழ்ச்சி நிரலில் கண்டபடி பயிலரங்கு நடைபெற்றது.






அப் பயிலரங்கில் திருவாரூர், கருவூலத் துறை துணை அலுவலரும், சக விக்கிப்பீடியருமான திரு கி மூர்த்தி அவர்களுடன் நானும் பயிற்சி உரை வழங்கினோம். நிகழ்விற்குக் கணிப்பொறித் துறைத் தலைவர் தலைமையுரையாற்றினார்.

இப்பயிலரங்கில் விக்கிப்பீடியாவில் எழுதுவது தொடர்பான ஓர் அறிமுகம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. விக்கிப்பீடியாவில் நான் எழுத ஆரம்பித்தது முதல், நான் எழுதிவருகின்ற பொருண்மைகளைக் குறித்துப் பேசியதோடு, கட்டுரைகளை ஆரம்பிப்பது மிகவும் எளிதானது என்றும் அந்தந்தப் பகுதி தொடர்பாக மாணவர்கள் கட்டுரை எழுதலாம் என்றும் கூறினேன். திரு கி.மூர்த்தி அவர்களின் உரை மூலமாகப் பல புதிய செய்திகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெற்றேன். 

பேராசிரியர்களும், மாணவர்களும் ஆர்வத்தோடு கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். அவர்களின் ஈடுபாடு பாராட்டும் வகையில் இருந்தது. அவர்கள் கேட்ட ஐயங்களுக்கு நாங்கள் இருவரும் மறுமொழி கூறினோம்.   மாணவர்களும் ஆசிரியர்களும் எழுதும் நிலையில் இரண்டாவது நிலையில் பயிலரங்கு தொடரும் எனத் தமிழாய்வுத்துறைத்தலைவர் முனைவர் தமிழ்வேலு தெரிவித்தார். அவருடைய முயற்சி சிறக்க என் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

No comments:

Post a Comment