Showing posts with label அமேசான். Show all posts
Showing posts with label அமேசான். Show all posts

27 March 2021

விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாக்குதல் : பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரி

கோயம்புத்தூர் பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும் கணித்தமிழ்ப்பேரவையும் இணைந்து ஏழு நாள்கள் (15-21 மார்ச் 2021) நடத்திய இணையவழிப் பயிலரங்கில் முதல் நாளான 15 மார்ச் 2021 அன்று மாலை 3.00 முதல் 4.00 வரை நடைபெற்ற அமர்வில் விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாக்குதல் என்ற தலைப்பில் உரையாற்றினேன். கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்களுடன் உரையாடியது மனதில் நிற்கும் அனுபவமாக அமைந்தது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. நண்பர்கள் கேட்டுக்கொண்டபடி என் மின்னூலைப் பெறுவதற்கான இணைப்பினைத் தந்துள்ளேன்.

பொழினைக் கேட்கவும், கருத்து கூறவும் அன்போடு அழைக்கிறேன். பொழிவிற்கான யுட்யூப் இணைப்பு :  விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாக்குதல்




அமேசான் தளத்தில் பெற இணைப்பு : விக்கிப்பீடியா 1000 பதிவு அனுபவங்கள்

பிற யுட்யூப் பதிவுகள்

1.பொன்னி நாட்டில் பௌத்தம் - ஜம்புலிங்கம் சிறப்புரை மாதாந்திரச் 

சொற்பொழிவு,  வேர்கள், 30 நவம்பர் 2018


2.சோழ நாட்டில் பௌத்த களப்பணிதிரிபீடகத் தமிழ் நிறுவனம், சென்னை, 

மானுடம் தேடும் அறம் உரை 1, 27 ஆகஸ்டு 2020, (உரை 27 ஜுன் 2020)


3.களப்பணியில்சமணம்,  அகிம்சை நடையின் இணைவோம் இணைய 

வழியால்9 ஆகஸ்டு 2020


4.விக்கிப்பீடியாவில் தமிழகக்கோவில்கள் அனுபவக் கட்டுரைகள் 

சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, 6 செப்டம்பர் 2020


5.பொன்னி நாட்டில் பௌத்தம், புதுவைத் தமிழாசிரியர்கள், மின் முற்றம், 

16 நவம்பர் 2020

23 January 2021

100 நூறு வார்த்தை கதைகள் : ஜ. சிவகுரு

எங்கள் இளைய மகன் திரு ஜ.சிவகுரு (9597961646) எழுதியுள்ள முதல் நூல் 100 நூறு வார்த்தை கதைகள்.


பாத்திரங்களின் அறிமுகம், சூழல், கதையின் மையக்கரு என்ற அனைத்தையும் 100 வார்த்தைகளுக்குள் உள்ளடக்கி ஒரு கதையைக் கூறுவது என்பது சற்று சிரமமே. எந்தக் கருத்தைக் கூறுவது, எதனை விட்டுவிடுவது என்ற நிலையில் அவர் எதிர்கொண்ட நிலையை, கதைகளைப் படிக்கும்போது உணரமுடிகிறது. இருந்தாலும் இடைவெளி எதுவும் வாசகரால் உணரப்படா வகையில் கதைகளை முழுமையாக நிறைவு செய்துள்ளார். அந்த முயற்சியினை மேற்கொண்டு முடிந்தவரை தாம் எண்ணியதை வெளிப்படுத்துகின்ற நூலாசிரியரின் பாணி பாராட்டத்தக்கது. சமூக நிலையோடு கூடிய யதார்த்தத்தினை வெளிப்படுத்தும் கதைகள் மட்டுமன்றி அறிவியல், வரலாறு என்ற பல துறைகளைச் சார்ந்த கதைகளையும் இத்தொகுப்பில் காணமுடிகிறது.

“…..சரியாக 100 வார்த்தைகளில் கதை சொல்ல முயல்வதால் வர்ணனைகள், விளக்கங்கள் இல்லாமலும், பாத்திரங்களின் குணாதிசயங்களும், சில கதைகளின் பின்னணியும், சில கதைகளின் முடிவும் படிப்பவரின் கற்பனைக்கே விட்டுவிதமாகவும் அமைந்திருக்கும்…..” என்றும் தமிழில், முதல் முறையாக 100 வார்த்தை கதைகளை பிரபலப்படுத்தும் முயற்சியே இந்நூல் என்றும் கூறுகிறார் நூலாசிரியர்.

விபத்தில் குரல் இழந்த நிஷாவின் ஆவலை வெளிப்படுத்தும் அரங்கேற்றம் (ப.1), வெள்ளாம சரியில்லாத காட்டில் தன் நம்பிக்கையை வைத்திருக்கும்  பொன்னனின் அறுவடை (ப.2), பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என்ற அரசின் அறிவிப்பு உண்டாக்கும் பாதிப்பில் தேடி வரும் உதவி (ப.3), மகனின் ஆவலைப் பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கும்போது தன் தந்தையின் கவலையைப் போக்கும் அந்த மகன் (ப.5)  கேன்சரை எதிர்கொண்டவளுக்குக் கிடைக்கும் இன்ப அதிர்ச்சி (ப.6), பிரபல நடிகனின் வீழ்ச்சி அவனை கேன்சர் நோயாளி வேடமேற்க இட்டுச்செல்லும் அவலம் (ப.11), பெண் பிள்ளைக்குக் காலேஜ் எதற்கு என்று கேட்ட பாட்டியிடம் சண்டைபோட்டவள் அதே பாட்டிக்கு இருதய மாற்று சிகிச்சை செய்யும் நிலை (ப.20), பெத்த குழந்தைகளுக்கு எப்பவுமே நான் அம்மாதான் என்று கூறும் வாடகைத்தாயின் பெருமனம் (48), வீடியோகான்பரன்சுக்காக தம்மை அலங்காரித்துக்கொள்ளும் குடும்பத்தார் (57), ஐ.டி.கம்பெனியில் வேலை பார்ப்பவர்களை அவர்களின் நிலையறியாமல் மாற்றுக்கண்ணோட்டத்தில் பார்க்கும் சமூகம் (63) என்றவாறு கதைகள் அமைந்துள்ளன.

வலையுலகிலும், அமேசான் தளத்திலும் சாதனை படைத்துவருகின்ற நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்கள் நூலின் அணிந்துரையில் “…இவரது ஒவ்வொரு கதையும் நம்மை ஏதோ ஒரு விதத்தில்  பாதிக்கத்தான் செய்கின்றன. இளையவர்தான், ஆனாலும் எழுத்தில் ஒரு முதிர்ச்சி தெரிகிறது. உலகியலை நன்கு அறிந்தவர் என்னும் உண்மை புரிகிறது. எழுத்துலகில் சாதிக்கத் துடிக்கும் இவரது மன நிலை தெளிவாய் தெரிகிறது. சாதிப்பார் என்ற நம்பிக்கையும் பிறக்கிறது. ஏனெனில், இவர் தேர்ந்தெடுத்திருக்கும் கதைக் களம் அப்படிப்பட்டது. தமிழில் யரும் நுழையாத தளத்திற்குள் நுழைந்து, தனித்து நின்று வாளெடுத்துச்சுழற்றி, வெற்றி வீரராய் வெளி வந்திருக்கிறார்….. தமிழில் இதுவரை இல்லாத ஒரு புது வடிவத்தை, புது உருவத்தை, தமிழுக்குக் கொண்டு வந்து அறிமுகம் செய்திருக்கிறார். இங்கிலாந்து பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் அறிவியல் புனைகதை மன்றமானது 1980ஆம் ஆண்டுவாக்கில் சிறுகதை வடிவத்தில் ஒரு புதுமையைப் புகுத்தி உருவாக்கிய Drabble என்ற வடிவத்தை தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்….” என்று குறிப்பிடுகிறார்.

வித்தியாசமான பாணியை தமிழுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ள நூலாசிரியரின் முயற்சிக்கு வாழ்த்துகள்.

நூலின் படியை நாங்கள் பெற்ற இனிய தருணங்கள்



அச்சு நூலைப் பெற : 1) தமிழ்க்குடில் பதிப்பகம், 19, எஸ்.என்.எம்.ரஹ்மான் நகர் விரிவாக்கம், கீழ வாசல், தஞ்சாவூர் 613 001, அலைபேசி 9488969722, நவம்பர் 2020, ISBN: 9789354260575, 120 பக்கங்கள், ரூ.120

2)http://www.tamilbookman.in/products/general-tamil-books/100-varthai-kadhaigal-j-sivaguru.html?fbclid=IwAR0U4jO7Nd_E82DbQRqOrH4J5dC_spodIjhYM9QUJE2-TA7w1Z2fZpDFIJ8

மின்னூலைப் பெற: https://www.amazon.in/dp/B08PSCXRYZ

கருத்தினை பதிய: https://www.goodreads.com/book/show/56170846-100



 

28 December 2020

மறக்கமுடியா ஆவணப்பதிவு : 2020இல் எங்கள் வெளியீடுகள்

 எங்கள் குடும்பத்தார் அனைவரும் நூல்களை எழுதி வெளியிட்ட வகையில் 2020ஆம் ஆண்டு எங்கள் இல்லத்தைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான ஆண்டாகக் கருதுகிறோம்.  கொரோனா நேரத்தை நல்லமுறையில் பயன்படுத்த விரும்பி தன் தந்தையைப் பற்றிய நூலைத் தொகுத்து எழுதியுள்ளதை என் மனைவி திருமதி ஜ.பாக்கியவதி தன்னுடைய "அப்பாவுக்காக..." நூலில் குறிப்பிட்டுள்ளார். 

ஒவ்வோராண்டும் அந்த ஆண்டு நிறைவு பெற்றபின் அந்த ஆண்டிற்கான என் கோப்பினை ஒருங்கமைத்து, நூற்கட்டுக்குத் தந்து பாதுகாத்து வருகிறேன். 1976 முதல் இப்பணியினை நான் செய்து வருகிறேன். ஆரம்பத்தில் பொருளடக்கம் இடுவதில்லை. நாளடைவில் இட ஆரம்பித்தேன். என் ஆண்டுக்கான என் கோப்பில் அந்தந்த பொருண்மை தொடர்பான கடிதங்கள் ஒவ்வொரு பகுதியாகப் பிரித்து பொருளடக்கம் இட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். 

ஆய்வில் தடம் பதித்தபின்னர் கல்விப்பணிகள் என்ற ஒரு பகுதி ஆரம்பமானது. அதில் நான் கலந்துகொண்ட கருத்தரங்குகள், இதழ்களில் வெளியான கட்டுரைகள் பற்றிய விவரங்களைச் சேர்ப்பேன். பிற பதிவுகளாக முதலில் தமிழ்ப் பல்கலைக்கழகம், கோயில் உலா, விக்கிப்பீடியா, குறிப்பிடத்தக்க சாதனைகள் என்ற வகையில் நானே என்னை சுயமதிப்பீடு செய்து கொள்வேன். எந்த இடத்தில் குறையுள்ளதோ அதனை உற்றுநோக்கி சரிசெய்ய இந்த உத்தி எனக்கு உதவியாக இருப்பதை நான் உணர்ந்து வருகிறேன்.

2020ஆம் ஆண்டின் கோப்பில் சிறப்பாகவும்  வித்தியாசமாகவும் நான் பதிந்தது எங்கள் வீட்டில் அனைவரும் நூல் எழுதியதைப் பற்றிய குறிப்புகள் ஆகும். அந்த வகையில் இது மறக்கமுடியாத ஆவணப்பதிவாக அமைந்துவிட்டது.







பா.ஜம்புலிங்கம் (விக்கிப்பீடியா 1000 : பதிவு அனுபவங்கள்/மே 2020/மின்னூல்), எங்கள் மூத்த மகன் முனைவர் ஜ.பாரத் (கடவுள்களுடன் தேநீர்/ஜுன் 2020/மின்னூல், அச்சு நூல்), என் மனைவி திருமதி ஜ.பாக்கியவதி (அப்பாவுக்காக/நவம்பர் 2020/அச்சு நூல்), எங்கள் இளைய மகன் திரு ஜ.சிவகுரு (100 நூறு வார்த்தை கதைகள்/டிசம்பர் 2020/மின்னூல், அச்சு நூல்) என்ற வகையில் இந்த ஆண்டு எங்கள் குடும்பத்து உறுப்பினர்கள் நூல்களை வெளியிட்டுள்ளோம். 

2020ஆம் ஆண்டு எங்கள் நினைவில் நிற்கும் ஆண்டாக அமைந்துவிட்டது. கொரோனா எதிர்மறையை நேர்மறையாக்கி, எங்கள் எழுத்துப்பணிக்குத் துணைநின்ற நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் என் சார்பாகவும், எங்கள் குடும்பத்தார் சார்பாகவும் மனம் நிறைந்த நன்றி.

நூல்களைப் பெற : 

1) விக்கிப்பீடியா 1000 : பதிவு அனுபவங்கள் மின்னூல் : அமேசான்

2) அப்பாவுக்காக,,, 
அச்சு வடிவம்: முதல் பதிப்புநவம்பர் 2020, தமிழ்க்குடில் பதிப்பகம்தஞ்சாவூர்ரூ.150, தொடர்புக்கு : +91 9488969722,  tamilkudilpathipagam@gmail.com.

3) கடவுள்களுடன் தேநீர் 
மின்னூல் : அமேசான்
அச்சு வடிவம் : முதல் பதிப்புஜுன் 2020, ஜீவா படைப்பகம்காஞ்சீபுரம்  ரூ.120, தொடர்புக்கு : +91 9994220250  jeevapataippagam@gmail.com.

4) 100 நூறு வார்த்தைக்கதைகள் 
மின்னூல் : அமேசான்
அச்சு வடிவம் : முதல் பதிப்புடிசம்பர் 2020, ரூ.120, தொடர்புக்கு : +91 9488969722, tamilkudilpathipagam@gmail.com.

நன்றி  : எழுத்துக் குடும்பம், இந்து தமிழ் திசை, 2 ஜனவரி 2021


2 ஜனவரி 2021இல் மேம்படுத்தப்பட்டது

23 May 2020

விக்கிப்பீடியா 1000 : பதிவு அனுபவங்கள் மின்னூல்

விக்கிப்பீடியாவில் ஜுலை 2014இல், எழுத ஆரம்பித்து ஏப்ரல் 2020இல் 1000ஆவது பதிவினை நிறைவு செய்தேன். விக்கிப்பீடியாவில் எழுதுவது மிகவும் எளிது என்பதை நாளடைவில் உணர்ந்தேன். கட்டுரைகள் எழுதியபோது பெற்ற அனுபவங்களை மின்னூலாக வெளியிட்டுள்ளேன். என் முயற்சியில் துணை நின்ற அனைவருக்கும், அமேசான் தளத்திற்கும் என் மனமார்ந்த நன்றி.

விக்கிப்பீடியாவில் எழுத ஆரம்பித்தபோது தமிழுக்கான சிறந்த பங்களிப்பாக உணர்ந்தேன். கட்டுரை நீக்கப்படவுள்ளதாக தகவல் வந்தபோது குறைகளை நீக்கி, பதிவினை  மேம்படுத்தினேன். பின்னர் அவை ஏற்கப்பட்டன. எவற்றைச் செய்வது என்பதைவிட எவற்றைச் செய்யக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டேன். விக்கிப்பீடியாவின் நற்பழக்க வழக்கங்கள், கொள்கைகள், வழிகாட்டல்களை முறையாகக் கடைபிடித்து, நெறிமுறைகளின்படி எழுதும்போது கட்டுரைகள் ஏற்கப்படுவதை அனுபவத்தில் அறிந்தேன். எழுத ஆரம்பித்த முதல் கடந்த மைல்கற்களைக் காண்போம்.

  • பயனராகாமல் முதல் பதிவு, நீக்கம், ஜுன் 2013
  • என்னைப் பற்றி எழுதுதல், தலைப்புப் பிரிப்பு, பயனர் ஆதல்
  • முதல் பதிவு எழுதி, மேம்படுத்துதல், 6 ஜுலை 2014
  • முந்தைய மாத 250 தொகுப்புகளுக்காக பாராட்டு பெறல், ஆகஸ்டு 2014
  • அசத்தும் புதிய பயனர், விடாமுயற்சியாளர், தொடர் பங்களிப்பு (ஆகஸ்டு 2014), சைவ சமயப் பங்களிப்பு (அக்டோபர் 2014) ஆகியவற்றுக்கான பதக்கங்கள் பெறல்.
  • விக்கிகாமன்சில் முதல் படிமம் பதிவு, 15 செப்டம்பர் 2014
  • முதற்பக்கத்தில் “உங்களுக்குத் தெரியுமா?” பகுதியில் நான் ஆரம்பித்த/ மேம்படுத்திய சரபேந்திர பூபாலக் குறவஞ்சி (15 அக்டோபர் 2014), ஆதுர சாலை (29 அக்டோபர் 2014), கங்கா ஆரத்தி (நவம்பர் 2014),  ஆழித்தேர் (17 ஜுன் 2015), தஞ்சைப் பெருவுடையார் கோயில் (20 ஜனவரி 2016)  கட்டுரைகளிலிருந்து தகவல்கள் வெளிவரல்
  • புதுக்கோட்டை கணினி தமிழ்ச்சங்க வலைப்பதிவர் திருவிழாவில் முன்னோடி விக்கிப்பீடியா எழுத்தாளர் விருதினைப் பெறல், அக்டோபர் 2015
  • முகப்புப்பக்கத்தில்  பங்களிப்பாளராக அறிமுகமாதல், 1 நவம்பர் 2015
  • “Writer of 250 articles in Tamil Wikipedia” செய்திக் கட்டுரை வெளிவரல்,  TheNew Indian Express,13 November 2015
  • என் கணக்கு தற்காவல் பயனர் உரிமைக்கு மாற்றப்படல், ஜுலை 2016
  • விக்கிக்கோப்பை வெற்றியாளர், 253 பதிவுகள், மூன்றாம் இடம், 2017
  • “விக்கிப்பீடியா போட்டியில் மூன்றாமிடம் பெற்ற தமிழ்ப் பல்கலைக்கழகக் கண்காணிப்பாளர்” செய்தி வெளிவரல்,  தினமணி, 7 மார்ச் 2017
  • வேங்கைத்திட்டம் வெற்றியாளர், 260 பதிவுகள், மூன்றாம் இடம், 2019
  • ஆசிய மாதம் வெற்றியாளர், 115 பதிவுகள், இரண்டாம் இடம், 2019
  • “வியக்க வைக்கும் விக்கிப்பீடியா பதிவர்” கட்டுரை வெளிவரல், புதிய தலைமுறை, 13 பிப்ரவரி 2020
  • விக்கிப்பீடியாவில் 1000 பதிவுகள் நிறைவு, ஏப்ரல் 2020
  • ஆங்கில விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தில், “Did You Know?” பகுதியில், நான் ஆரம்பித்த Thukkachi Abatsahayesvar temple கட்டுரையிலிருந்து வெளிவரல், 20 ஆகஸ்டு 2017 
  • ஆங்கில விக்கிப்பீடியாவில் கோயில்கள் தொடர்பான 190 உள்ளிட்ட 210 பதிவுகள் நிறைவு, மே 2020
  • ஆங்கில விக்கிப்பீடியாவின் WikiProject India/The 10,000 Challenge (மே 1, 2020-ஜுலை 31, 2020) திட்டத்தில் கலந்துகொள்ளல்
  • ஆங்கில விக்கிப்பீடியாவில் முதன்முதலாக The Special Barnstar பதக்கத்தினைப் பெறல்

புதிதாக எழுத வருபவர்களுக்கு இந்நூல் மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது நூலை வாசித்து கருத்தினை அமேசான் தளத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன். நூலைப் பெற கீழ்க்கண்ட இணைப்பினைச் சொடுக்க வேண்டுகிறேன்.

இந்நூலைப் பற்றிய நண்பர்களின் மதிப்புரைகள், அவர்களுக்கு நன்றியுடன் :
திரு கரந்தை ஜெயக்குமார் சாதனையாளரை வாழ்த்துவோம்  


21 ஜனவரி 2021இல் மேம்படுத்தப்பட்டது,