13 July 2019

தரங்கம்பாடி கடல்சார் அருங்காட்சியகம்

வங்கக்கடலோரத்தில் அமைந்துள்ள தரங்கம்பாடி பகுதியில் அண்மையில் பயணித்தபோது டேனிஷ் கோட்டை என அழைக்கப்படுகின்ற தரங்கம்பாடி கோட்டைக்கு எதிரில் அமைந்துள்ள கடல்சார் அருங்காட்சியகத்திற்குச் சென்றோம். 


  நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் டேனிஷ் இந்திய கலாச்சார மையம், தரங்கம்பாடி கடல்சார் அருங்காட்சியகம் (Danish Indian India Cultural Centre, Tranquebar Maritime Museum) என்ற பெயர்ப்பலகையைக் கண்டோம். நுழைவாயிலை அடுத்து உள்ளே சென்றதும் கடல் சங்குகள் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. அதில் அவற்றைப் பற்றிய ஆன்மிக விளக்கங்கள் தரப்பட்டிருந்தன.


 அப்பகுதியைக் கடந்து உள்ளே சென்றதும் அங்கு தனியாக உள்ள ஒரு அறையின் நுழைவாயிலில் Tranquebar Maritime Museum என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

  







 அங்கு கடல் சங்குகள், அணிகலன்கள், கடலில் கண்டெடுத்த குதிரையின் வடிவம், குதிரையின் பல் போன்றவை இருந்தன. அத்துடன் பல வகையான பீங்கான் பொருள்கள் பல வண்ணங்களில், பல அளவுகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அனைத்துப் பொருள்களும் காட்சிப்பேழையில் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தன. புதிய ரக கட்டு மரத்தின் மாதிரி ஒன்று மிகவும் அழகாக இருந்தது. பல அளவுகளில் மண் பானைகள், குடுவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


  
இந்த அருங்காட்சியகத்தில் காணப்படுபனவற்றில் பெரும்பாலான பொருள்கள் கடலில் கண்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவதை அறியமுடிந்தது. அந்த அறையின் நடுவில் அழகான படகு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. படகினை நேரில் பார்க்க விரும்புவர்கள் இதனைப் பார்த்து படகின் அமைப்பினைத் தெரிந்துகொள்ளமுடியும். அருங்காட்சியக வளாகத்தில் இரு சிறிய படகுகள் காணப்பட்டன.
இவ்வருங்காட்சியகம் காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரையிலும், மாலை 2.30 முதல் 6.00 மணி வரையிலும் இயங்குகிறது. தரங்கம்பாடிக்குச் சுற்றுலா வருபவர்கள், குறிப்பாக குழந்தைகளும் மாணவர்களும்  பார்க்கவேண்டிய இடங்களில் இதுவும் ஒன்றாகும்.


நன்றி
24 ஏப்ரல் 2019 பயணத்தில் உடன் வந்ததோடு, குறிப்புகள் எடுக்கவும், புகைப்படங்கள் எடுக்கவும் உதவிய என் மனைவி திருமதி பாக்கியவதி

இப்பகுதியில் முன்னர் நாம் பார்த்தது
தரங்கம்பாடி மாசிலாதர் கோயில்

15 comments:

  1. அரிய படங்களும், விடயங்களும் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. சுவாரஸ்யமான படங்கள் ; சுவாரஸ்யமான தகவல்கள்.

    ReplyDelete
  3. அருங்காட்சியகம் படங்கள் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  4. அருங்காட்சியகம் அழகாக இருக்கிறது. கடலில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை சேமித்து வைத்திருப்பது சிறப்பு.

    உங்கள் மூலம் அருங்காட்சியகத் தகவல்கள் அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. இந்த அருங்காட்சியகத்திற்குச் சென்று முப்பது ஆண்டுகள் ஆகின்றன...

    ReplyDelete
  6. தகவல்களும் படங்களும் அருமை ஐயா...

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரரே

    இதுவரை பார்க்காத அருங்காட்சியம். படங்களும், அரிய தகவல்களும் மிக அழகாகவும், உபயோகமாகவும் உள்ளன. தங்களால் தரப்பட்ட விபரங்களுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. அருங்காட்சியகம் படங்கள் அதுவும் கடலிலி இருந்து சேகரிக்கப்பட்டவை அருமை. தகவல்கள் அறிந்து கொண்டோம் ஐயா.

    கீதா

    ReplyDelete
  9. படங்களும் விரிவான குறிப்புகளும் அருமை!

    ReplyDelete
  10. தரங்கம் பாடி நான் செல்லாத இடம் உடலில் தெம்பு இருந்தபோது பார்க்காதது தகவல்களுக்கு நன்றி சார்

    ReplyDelete
  11. கடற்சங்கில் ஆன்மிக விளக்கமா?.. அரிய செய்தியாய் இருக்கிறதே?.. அதைப் பற்றி ஏதாவது சொல்லுங்களேன்.

    பீப்பாய்களைப் பார்த்ததும் கடல் கொள்ளையர் நினைவு வந்தது.

    ReplyDelete
  12. தங்கள் கண்ணோட்டம் அருமை
    பாராட்டுகள்

    ReplyDelete
  13. நானும் தரங்கம்பாடி சென்றுள்ளேன்,கடலின் அழகையும் அருகிலுள்ள சர்ச்சின் வெளி தோற்றத்தையும் பார்த்தேன், நேரமின்மை காரணமாக பார்க்க முடியாமல் போன மற்ற விபரங்களை தங்களது பதிவின் மூலமாக அறிந்து மகிழ்தேன்.

    ReplyDelete
  14. அருமை
    ஒருமுறை சென்று பார்த்துள்ளேன்
    நன்றி ஐயா

    ReplyDelete