தமிழில் அறிவியல் செய்திகள் வெளிவரவேண்டும் என்ற நோக்கில் 23.12.2000 நாளிட்ட தி இந்து நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையை மொழியாக்கம் செய்து "2000ஆம் ஆண்டின் மிகச்சிறந்த அறிவியல் ஆய்வுகள்" என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை அறிக அறிவியல் இதழில் வெளியானது. 1997க்குப் பின் இவ்வாறாக, தி இந்து நாளிதழிலிருந்து மொழிபெயர்த்து நான் எழுதிய இரண்டாவது கட்டுரை இதுவாகும்.
19 June 2026
2000ஆம் ஆண்டின் மிகச்சிறந்த அறிவியல் ஆய்வுகள்
18 June 2026
அறிவியில் தமிழ் வளர்ச்சியில் மொழிபெயர்ப்பின் தேவை-1997இன் அரிய அறிவியல் சாதனைகள்
ஒவ்வோராண்டின் ஆரம்பத்திலும் தி இந்து ஆங்கில நாளிதழில் அதற்கு முந்தைய ஆண்டின் முக்கியமான அறிவியல் செய்திகள், கண்டுபிடிப்புகள், சாதனைகள் கட்டுரையாக வெளிவரும். அவ்வாறான கட்டுரைகள் தமிழில் வெளிவரவேண்டும் என்ற உந்துதல் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. 1997ஆம் ஆண்டு அதற்கான ஆரம்பமாக அமைந்தது. இதுதத்துவ மையத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட காலத்தில் எழுதியதாகும்.
1.1.1998இல் தி இந்து இதழில் வெளியான கட்டுரையை "அறிவியில் தமிழ் வளர்ச்சியில் மொழிபெயர்ப்பின் தேவை: 1997இன் அரிய அறிவியல் சாதனைகள்" என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்தேன். 12-13.12.1998இல் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்ற அறிவியல் தமிழ் வளர்ச்சிப் போக்குகள் என்ற கருத்தரங்கில் அளித்தேன். அறிவியல், மொழியாக்கம் என்ற வகையில் அமைந்த அக்கட்டுரை, பின்னர் அறிவியல்தமிழ் வளர்ச்சி என்ற நூலில் இடம்பெற்றது.

16 June 2026
மாசு படியும் தாஜ்மஹால்
கோயம்புத்தூரில் 17-18.5.1996இல் தமிழக அறிவியல் பேரவை சார்பாக நடைபெற்ற , நான்காம் கருத்தரங்கில் ‘‘மாசு படியும் தாஜ்மஹால்’’ என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தேன். இது என்னுடைய இரண்டாவது அறிவியல் கட்டுரையாகும். தி இந்து நாளிதழிலிருந்தும், பல ஆங்கில நூல்களிலிருந்தும் தரவுகளைத் திரட்டி தமிழ்த் தட்டச்சுப்பொறியில் தட்டச்சு செய்தேன். தி இந்து நாளிதழில் வெளியான தாஜ்மஹால் தொடர்பான தலையங்கத்தில் வந்த முதல் சொற்றொடர் (Mumtaj would have gone into the footnote of History but for Taj Mahal) இன்னும் நினைவில் உள்ளது. துணை நின்ற நூல்களை கட்டுரையின் நிறைவுப்பகுதியில் அமைத்திருந்தேன். பின்னாளில் ஆய்வேட்டினை உருவாக்கும்போது இவை போன்ற உத்திகள் எனக்கு மிகவும் உதவின. கருத்தரங்க நாளில் வெளியான மலரில் ஆய்வுச்சுருக்கம் இடம்பெற்றது.
14 June 2026
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு 'அறிக அறிவியல்' இதழின் பங்கு
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட காலகட்டத்தில் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு, ஆய்வுக்கு அப்பாற்பட்டு அறிவியல் தொடர்பான கட்டுரைகளையும் வாசிக்க ஆரம்பித்தேன். அவ்வகையில் நான் வாசித்த முதல் கட்டுரை 1995இல் அனைத்திந்திய அறிவியில் தமிழ்க் கழகம் சார்பாக நடத்தப்பெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான தலைப்பிலான கருத்தரங்கில் "சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு 'அறிக அறிவியல்' இதழின் பங்கு" என்ற தலைப்பிலான கட்டுரையாகும்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 7-8.10.1995இல் நடைபெற்ற அக்கருத்தரங்கில் முதன்முதலாகக் கட்டுரையை அளித்தபோது சற்று தயக்கமாக இருந்தது. இருப்பினும் சிறப்பான முறையில் வாசித்தேன். அது அச்சு வடிவில் வெளியான தொகுப்பிலும் இடம்பெற்றது.
12 June 2026
அறிவியல் துளி 1995, தமிழ் அகராதியியல் செய்தி மலர் 1998
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்பில் பட்ட ஆய்வினை மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் அனைத்திந்திய அறிவியில் தமிழ்க் கழகத்தின் சார்பாக வெளிவந்த அறிவியில் துளி இதழில் (வெளியிடுபவர் முனைவர் இராம.சுந்தரம், அறிவியல் தமிழ் வளர்ச்சித்துறை) "எலியைத் தின்னும் கிழப்புலி", "ஆண் குதிரை கருத்தரிக்கும்" (சனவரி 1995), "ஓட்டுநருக்கு நற்செய்தி" (மார்ச் 1996) போன்ற தலைப்புகளில் அறிவியல் தொடர்பாக சில துணுக்குகளை எழுதினேன். பின்னாளில் ஆய்வுக்கட்டுரைகள் எழுத இவை போன்ற பதிவுகள் உதவியாக இருந்தன.
அவ்வாறே, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் அனைத்திந்திய அகராதியியல் கழகத்தின் சார்பாக வெளிவந்த காலாண்டிதழான தமிழ் அகராதியியல் செய்தி மலர் இதழில் (வெளியிடுபவர் எச்.சித்திரபுத்திரன், இணைப்பேராசிரியர், அகராதியியல் துறை) வெளிவந்தது. அதில் "சாமுவேல் ஜான்சன்" (சனவரி-சூன் 1998), "உலகப்பெரும் அகராதி" (சூலை-செப்டம்பர் 1998) என்ற தலைப்புகளில் பதிவுகள் எழுதியது நினைவில் நிற்கும் அனுபவமாகும்.
10 June 2026
இயக்குநர் இமயம் பாரதிராஜா
மனதில் நிற்கும் ஆத்தா, தாத்தா
50 ஆண்டுகளுக்கு முன். கும்பகோணம், சம்பிரதி வைத்தியநாதர் தெருவில் எங்கள் வீட்டில் பள்ளிக்காலத்து நினைவுகள் அவ்வப்போது மனதில் வந்துசெல்லும். வீட்டின் நினைவாக இப்போது எங்களிடம் உள்ளது ஆத்தா, தாத்தாவின் போட்டோ மட்டுமே.
கண்டிப்பின் மறுபெயர் எங்கள் தாத்தா (திரு ரெத்தினசாமி). கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளியில் படித்தபோது பெரும்பாலும் தாத்தாவின் அடி வாங்கியபின்னர் தான் பள்ளிக்குச் செல்வேன். பள்ளிக்கூடம் என்றால் எனக்கு ஓர் ஒவ்வாமை. சில சமயங்களில் தாத்தா, வீட்டின் எதிரே இருக்கும் விறகுக்கடையிலிருந்து கையில் கிடைக்கும் விறகை எடுத்துக்கொண்டு விரட்ட ஆரம்பித்துவிடுவார். ஒருமுறை பள்ளிக்குச் செல்லப் பயந்து வீட்டிற்குத் திரும்பி ஓடிவந்துவிட்டேன். என்னை பள்ளிக்கு இழுத்துச்சென்று பெரிய வாத்தியாரிடம் இவனை நன்றாக அடியுங்கள். இரண்டு கண்களை மட்டும் வைத்துவிட்டு தோலை உரித்துவிடுங்கள், அப்போதுதான் சொன்னபேச்சைக் கேட்பான், நன்றாகப் படிப்பான் என்றார். அப்போது வாத்தியார் கொடுக்கின்ற அடியே தேவலாம் என நினைத்தேன்.
எங்கள் தாத்தா, "நவசக்தி", "நாத்திகம்" ஆகிய நாளிதழ்களின் வாசகர். அவ்வப்போது சிலவற்றைப் படித்துக் காட்டுவார். அந்த வாசிப்பை பார்த்தே எனக்கு நாளிதழ் வாசிப்புப் பழக்கம் தோன்றியது.
சினிமாவுக்குப் போகக்கூடாது, ரேடியோ கேட்கக்கூடாது, என்பன போல பல கண்டிஷன்கள். தாத்தாவுக்குத் தெரியாமல் அப்பா சினிமாவுக்கு அழைத்துச் சென்றுவிடுவார். திரும்பியபின் இருவரும் திட்டு வாங்குவோம். தாத்தா இருந்தவரை எங்கள் வீட்டில் ரேடியோ கிடையாது. சைக்கிளும் கிடையாது.
ஆற்றில் குளிக்க ஆசையாக இருக்கும். ஆனால் ஆற்றில் போனால் நீச்சல் தெரியாமல் மூழ்கிவிடுவேன் எனப் பயந்து ஆற்றுக்கு அனுப்ப மாட்டார்கள். என் நண்பர்கள் அனைவரும் நீச்சல் தெரிந்தவர்கள். நானும் ஆசையாகக் கேட்பேன், விடமாட்டார். அதனால் எனக்கு நீச்சல் கற்கமுடியாமல் போனது.
வெளியே அழைத்துச்செல்லும்போது பெரிய வீடுகளைக் காட்டி, நீ பெரியவனாகி நன்றாகச் சம்பாதித்து இதுபோல வீடு கட்ட வேண்டும் என்பார். முடிந்தவரை கடன்வாங்கக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்.
பாசத்தின் வடிவம் எங்கள் ஆத்தா (பிச்சாரம்மாள்). தாத்தாவைப் போலவே கண்டிப்பு இருந்தாலும் பாசம் அதிகமாகவே இருக்கும். தாத்தா அடித்து வீங்கியிருக்கும் காயங்களுக்கு மஞ்சப்பத்து போடுவார். சில சமயங்களில் சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுப்பார். சின்ன கூடத்தில் அவர் அருகில் உட்கார்ந்துகொண்டு கால்களை முற்றத்தில் தொங்கவிட்டுக்கொண்டு, முற்றம் வழியாக வானத்தைப் பார்த்தால் நிலா வெளிச்சம் நன்றாகத் தெரியும். நல்ல நல்ல கதைகள் கூறுவார். அடிக்கடி புத்தி கூறுவார். கூடத்தின் நடுவிலோ, நிலைப்படியிலோ அமர்ந்துகொண்டு நகம் வெட்டக்கூடாது, வெள்ளிக்கிழமைகளில் நகம் வெட்டக்கூடாது, பெண் பிள்ளைகள் முடியை விரித்துப்போட்டுக் கொண்டு வீட்டில் உட்காரக்கூடாது என்பார்.
எந்த வேலையை ஆரம்பித்தாலும் என்னை வைத்துத்தான் ஆரம்பிப்பார். பெரியவன் கைவைத்தால் நன்றாக இருக்கும என்பார். கொல்லையில் பறிக்கும் தேங்காயை வீட்டில் கொண்டு வைத்தல், வயலிலிருந்து வரும் நெல்லை குதிரில் கொட்டுதல், அரிசிப்பானையில் அரிசி கொட்டுதல், வீட்டுக்கு மளிகை சாமானுக்கு பட்டியல் எழுதுதல், மழைக்காலப் பயன்பாட்டிற்காக கொல்லை நடையின் பரணியில் சமையலுக்கான விறகை அடுக்கிவைத்தல் போன்ற வேலைகளைச் செய்துள்ளேன்.
ஒரு முறை ஆத்தாவின் தங்கை, சின்ன ஆத்தா, எங்கள் வீட்டில் வந்து தன் அக்காளிடம் (என் ஆத்தாவிடம்) வயிற்றிலும், வாயிலும் அடித்துக்கொண்டே வீட்டுக்கு வந்த மருமகள் குளித்துவிட்டு தலைவிரி கோலமாக நடுவீட்டில் உட்கார்ந்திருக்கிறார், சொன்ன பேச்சைக் கேட்பதில்லை என்று அழுதார். அவருடைய வீட்டில் குலதெய்வம் இருந்தது. செவ்வாய், வெள்ளியில் பூசை போடுவார்கள். சிவராத்திரியின்போது சிறப்புப்பூசை உண்டு. அமைதியாக இருக்கும் குடும்பத்தில் இவ்வாறான ஒரு பூகம்பத்தைம் எங்கள் ஆத்தாவால் நம்பமுடியவில்லை. பின்னர் அங்கு வந்து புத்தி சொல்வதாகக் கூறியது நினைவில் உள்ளது.
ஓட்டு இடுக்குகளில், தாழ்வாரத்தில், உத்தரத்தில், ஏதாவது சிந்தனையில் இருக்கும்போது கண்களுக்கு ஒட்டடை தெரிந்தால் உடனே விளக்குமாற்றை எடுத்து அதனை ஆத்தா தட்டிவிடுவார்கள். வீட்டில் ஒட்டடை இருக்கக்கூடாது, அவ்வாறு இருந்தால் தரித்திரம் என்பார்கள்.
விசிறியை எப்போதும் மோட்டுவளையில் செருகி வைத்திருப்பார்கள். வெயில் காலத்தில் அது மிகவும் உபயோகமாக இருக்கும்.
தாத்தா, ஆத்தாவுடன் வெளியே நடந்துபோகும்போது ஏதாவது கதையோ, புத்திமதியோ கூறிக்கொண்டேதான் வருவார்கள். அவர்கள் அவ்வாறு கூறும்போது எங்கள் கவனம் சிதறாமல் உன்னிப்பாகக் கவனிக்கிறோமா என்று பார்ப்பார்கள். பனியில் வெளியில் சென்றால் காதுகளை மூடி மப்ளர் போல துணியைக் கட்டிக்கொள்ளவேண்டும்.
குளித்துவிட்டு, திருநீறு பூசிக்கொள்ளவேண்டும் என்பது எங்களுக்கான அன்றாட கடமைகளில் ஒன்று. நெற்றி மொட்டையாக இருக்கக்கூடாது, பெண் பிள்ளைகள் பொட்டினைத் தெரியும்படி அழகாக வைக்கவேண்டும் என்பார்கள். வீட்டில் வெட்டப்பட்ட நகமோ, முடியோ கண்ணில் பட்டால் திட்டுவார்கள். பூமி அதிருமபடி நடக்கக்கூடாது என்பார். கை காயும் வரை சாப்பிடக்கூடாது என்பார்கள். அவ்வாறே சீக்கிரம் குளித்துவிட்டு வரவேண்டும் என்பார்கள்.
ஆத்தாவோ, தாத்தாவோ கண்டிக்கும்போதோ அதட்டும்போதோ எங்கள் அப்பா, அம்மா, அத்தை யாரும் வந்து குறுக்கே வந்து தடுக்கமாட்டார்கள், குழந்தைகளின் நலனுக்காகத்தானே என்று இருந்துவிடுவார்கள். அவர்களுடைய கண்டிப்பைப் பற்றி அப்பா, அம்மா, அத்தையிடம் நாங்கள் எதுவுமே சொல்லமாட்டோம். சொல்லவேண்டும் என்ற எண்ணமும் இருக்காது.
அவர்கள் எங்களை வளர்ந்த ஒருவகையான கட்டுப்பாடானது பிற்காலத்தில் என் முயற்சியில் நான் பணியில் சேர்ந்து, வெளியூர்களில் பணியாற்றியபோது தொடர்ந்தது. பணிநிறைவு பெற்று, இன்றுவரைகூட அந்தக் கட்டுப்பாடானது என்னை நெறிப்படுத்துவதை உணர்கிறேன். அந்த உத்தியானது நான் செய்வது சரியா என்று சிந்தித்துச் செய்யுமளவிற்கு ஒரு பக்குவத்தை என்னுள் உண்டாக்கியிருந்தது. என்னையும் அறியாமல் அவர்களுடைய அந்த கட்டுப்பாடு எனக்கு ஓர் அரணாக இருந்தது. இன்னும் இருக்கிறது.
எனக்கு நினைவு தெரிந்துதான் வீட்டில் பேன் போட்டார்கள், ராலிபேன் என்று நினைவு. தாத்தா இருக்கும்வரை எங்கள் வீட்டில் ரேடியோ கிடையாது. அவ்வாறே சைக்கிளும் இல்லை. வாடகைக்குக் குடியிருப்போர் வீட்டில் ரேடியோ கேட்போம். அவசர வேலைக்கு அவர்களிடம் சைக்கிளைக் கேட்டு வாங்கிக்கொள்வேன். எங்கும் நடந்துதான் செல்லவேண்டும் என்ற சூழல்.
எங்களுக்கு உடல் நலம் சரியில்லை என்றால் கும்பேஸ்வரர் தெற்கு வீதியில் படிதாண்டா பரமேஸ்வரி கோயிலை அடுத்து இருந்த சின்ன ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வார்கள். (அரயூர் சுப்பிரமணிய உடையார் மருந்தகம் என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை) அல்லது அங்கே அருகேயுள்ள டாக்டர் ஹலிலுல்லா ஆஸ்பத்திரிக்கோ, கும்பேஸ்வரர் வடக்கு வீதியில் இருந்த டாக்டர் பாக்கியம்பிள்ளை ஆஸ்பத்திரிக்கோ அழைத்துச்செல்வார்கள். வீட்டின் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது தென்னை மட்டையைப் பிடித்து விளையாடியபோது என் தலையில் தென்னை மட்டை விழுந்து, நான் மயக்கம்போட்டு விழுந்துவிட்டேன். பாக்கியம்பிள்ளை டாக்டரிடம் அழைத்துச்சென்று தையல் போட்டார்கள். தலையில் முடியுடன் சிறிது சதை தென்னையோலையில் ஒட்டியிருந்ததாகக் கூறினார்கள்.
தாத்தாவிற்கு உடல் நலம் சரியில்லை என்றால் சிங்காரம் செட்டித்தெருவில் உள்ள ஜெகதீசன் சித்தப்பா வீட்டில் சென்று போன் செய்யச் சொல்வார்கள். விஜயலட்சுமி டாக்கீஸ் எதிரேயிருந்த டாக்டர் எம்.கே.எஸ். அவருடைய காரில் எங்கள் வீட்டில் வந்து தாத்தாவிற்கு சிகிச்சை எடுத்ததைப் பார்த்துள்ளேன்.
தாத்தாவின் பழக்கம் காரணமாக என் மகன்களுக்கும். மனைவிக்கும் அந்த பழக்கத்தினை உண்டாக்கினேன். நாளிதழில் வரும் செய்திகளைப் படித்து அது பற்றி உரையாடுவது என் வழக்கம். நாளிதழ் வாசிப்பின் மூலமாகக் கிடைக்கும் பலன் மதிப்பிட முடியாததாகும். இன்று வரை தொடர்ந்து நாளிதழ்களைப் படித்து வருகிறேன்.
பெரியவர்கள் நமக்கு நல்லதைத் தான் சொல்வார்கள், செய்வார்கள் என்று புரிந்துகொள்ள சற்றே தாமதமானாலும் பிற்காலத்தில் அதனை முழுமையாக உணர்ந்து அதற்கான நல்ல பயனை நான் பெற்றுள்ளதை உணர்கிறேன்.
06 June 2026
கோயில் உலா
- அம்மாப்பேட்டை பஞ்சபூதத் தலங்கள்
- அரிச்சந்திரபுரம் சந்திரமௌலீஸ்வரர் கோயில்
- இராஜராஜேச்சரம் குடமுழுக்கு, விமானத்தில் கலசம்
- இராஜராஜேச்சரம் குடமுழுக்கு, 5.2.2020
- உடையார் கோயில் கரவந்தீஸ்வரர் கோயில்
- கழுகுமலை வெட்டுவான்கோயில்
- காமரசவல்லி கார்க்கோடேஸ்வரர் கோயில்
- காவிரி புஷ்கரம் (1), காவிரி புஷ்கரம் (2)
- கும்பகோணம் கோயில்கள்
- கும்பகோணம் அருகிலுள்ள கோயில்கள் கொட்டையூர், இன்னம்பர், திருப்புறம்பியம், விஜயமங்கை, திருவைகாவூர், திருச்சத்திமுற்றம், பட்டீஸ்வரம், பழையாறை, நாதன்கோயில், தாராசுரம்
- கும்பகோணம் அருகிலுள்ள கோயில்கள் நாச்சியார்கோயில், திருச்சேறை, நாலூர் மயானம், கூகூர், திருவீழிமிழலை, துக்காச்சி
- கும்பகோணம் மகாமகம் 2016
- சிவகங்கைக்குளம் சிவலிங்கசுவாமி கோயில்
- தஞ்சாவூர் கேசவதுதீஸ்வரர் கோயில்
- தஞ்சாவூர் நிசும்பசூதனி கோயில் குடமுழுக்கு, 23.6.2016
- தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை கோயில்கள்
- தரங்கம்பாடி மாசிலாநாதர் கோயில்
- தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில் (கும்பகோணம் சப்தஸ்தானம்)
- திருஏடகம் ஏடகநாதர் கோயில்
- திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோயில்
- திருநீலக்குடி பகுதி கோயில்கள் திருநீலக்குடி, கோனேரிராஜபுரம், திருப்பாம்புரம், அகஸ்தீஸ்வரர் கோயில், திருமீயச்சூர், கூத்தனூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை, திருவாரூர்
- திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில்
- திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில்
- திருமழபாடி வைத்யநாதசுவாமி கோயில்
- திருமேற்றளிகை கைலாசநாதர் கோயில்
- திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோயில்
- திருவாதவூர் திருமறைநாதர் கோயில்
- பட்டீஸ்வரம் முத்துப்பந்தல், 15.6.2018
- பழையாறை சோமநாதர் கோயில்
- புள்ளமங்கை பிரம்மபுரீசுவரர் கோயில்
- புனுகீஸ்வரர் கோயில் (மயிலாடுதுறை சப்தஸ்தானம்)
- பெரிய கோயில் தேர் வெள்ளோட்டம், 20.4.2015
- பெரிய கோயில் தேரோட்டம், 29.4.2015
- மயிலாடுறை கோயில்கள் (My comment in Deccan Chronicle about Pushkaram)
- மயிலாப்பூர் சப்த சிவத்தலங்கள்
- வட இந்தியச் சுற்றுலா அலகாபாத், திரிவேணி சங்கமம், கயா, புத்தகயா, காசி, மிர்சாபூர், ஹரித்வார், ரிஷிகேஷ்
- வேப்பத்தூர், வீற்றிருந்த பெருமாள் கோயில்
- 2023 திருத்தென்கூர், நமச்சிவாயபுரம், திருநெல்லிக்காவல், அரியலூர், பூண்டி, அன்பில், லால்குடி, உஜ்ஜயினி கோயில் குடமுழுக்கு, குருக்கத்தி, பழனி, திண்டுக்கல், திருப்பதி, திருத்தணி, திருவாலங்காடு
- 2024 உறையூர், மேடவாக்கம், மதுரை கூடலழகர், மாசிமகம் தீர்த்தவாரி, காரைக்குடி அரண்மனை, கங்கைகொண்டசோழபுரம், கலியபெருமாள் கோயில், திங்களூர், வல்லம் ஏகோரியம்மன்
- 2025 சென்னை அர்த்தநாரீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், சேலம் தலைவெட்டி முனியப்பன், சுகவனேஸ்வரர், கோட்டை மாரியம்மன், திருவாலங்காடு, திருப்பாசூர், திருவெண்காடு, சாயாவனம், புகார், திருநரையூர், கருவளர்சேரி, வலங்கைமான், நாகூர், நாகப்பட்டினம், புத்த விகாரை வளாகம், பட்டீஸ்வரம், கணபதி அக்ரஹாரம், சக்கராப்பள்ளி, சிக்கல், ஆவராணி, திருவாரூர், புலிவலம், விளமல்
- 2026 சுந்தரபெருமாள்கோயில், உவரி, வள்ளியூர், கன்னியாகுமரி, நாகர்கோயில், சுசீந்திரம், தக்கலை கேரளபுரம், திருவனந்தபுரம், ஆற்றுக்கால் பகவதி, திருவல்லம் பரசுராமர், கோவளம் கடற்கரை, ஆழிமலை, பத்மநாமபுரம், துக்காச்சி, ஐயாவாடி, திருவண்ணாமலை, மேல் மலையனூர், ரமணாச்ரமம், திருக்கோவலூர், அரகண்டநல்லூர், திருவெண்ணெய்நல்லூர் டி.இடையாறு, முண்டீஸ்வரம், விருத்தாசலம்
- 2014-2017 (சுருக்கம்)
- ஏப்ரல் 2014 திருவாய்ப்பாடி, சேய்ஞலூர், மேலக்கடம்பூர், ஓமாம்புலியூர், கானாட்டுமுள்ளூர், திருநாரையூர், திருக்குருக்காவூர், திருமுல்லைவாயில், காழிச்சீம விண்ணகரம்
- செப்டம்பர் 2014 கடம்பந்துறை, ஐயர்மலை, திருப்பராய்த்துறை, கற்குடி, உறையூர், முக்கீச்சுரம்
- நவம்பர் 2014 கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருஆலம்பொழில், திருக்காட்டுப்பள்ளி, திருப்பேர்நகர், திருவானைக்காவல், திருச்சி, திருவெறும்பியூர்
- ஜூன் 2015 திட்டை, திருக்கருக்காவூர், ஆவூர், சத்திமுற்றம், பட்டீஸ்வரம், திருவலஞ்சுழி, நந்திபுரவிண்ணகரம், திருஆதனூர், காவலூர், பஞ்சவன்மாதேவீச்சரம்
- ஜூலை 2015 பந்தணைநல்லூர், பழமண்ணிப்படிக்கரை, திருவாழ்கொளிப்புத்தூர், திருக்குரக்குக்கா, திருக்கருப்பறியலூர், திருப்புன்கூர், குருமாணக்குடி, கீழையூர், திருநின்றியூர், கஞ்சனூர், திருஇந்தளூர்
- மார்ச் 2016 திருமங்கலக்குடி, திருக்கோடிக்கா, வேள்விக்குடி, எதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி, குத்தாலம், கொருக்கை, அன்னியூர், தேரழுந்தூர், உப்பிலியப்பன் கோயில்
- நவம்பர் 2016 மயூரநாதர் கோயில், திருவிளநகர், கீழப்பரசலூர், செம்பொனார்கோவில், நனிப்பள்ளி, மேலப்பெரும்பள்ளம், தலைச்சங்காடு, ஆக்கூர், தலைச்சங்காடு, திருநகரி, திருவாலி, திருத்தேவனார்தொகை
- டிசம்பர் 2016 திருப்பாலைத்துறை, தென்குரங்காடுதுறை, திருநீலக்குடி, வைகல், திருநல்லம், கோழம்பியம், தேரழுந்தூர், திருவாவடுதுறை, நாச்சியார்கோயில், திருச்சேறை
- ஜனவரி 2017 திருநெய்வெணை, திருவெண்ணெய்நல்லூர், திருமுண்டீச்சரம், திருஇடையார்
- ஜூன் 2017 கீழ்வேளூர், நாகப்பட்டினம், திருநள்ளாறு, திருத்தெளிச்சேரி, தருமபுரம், கொட்டாரம், வேட்டக்குடி, திருக்கடையூர்
- ஜூலை 2017 திருக்கலயநல்லூர், மருதாநல்லூர், சிவபுரம், அரிசிற்கரைப்புத்தூர், திருநரையூர்ச்சித்தீஸ்வரம், திருப்பந்துறை, வாஞ்சியம், திருவீழிமிழலை, அன்னியூர், கருவேலி, குடவாசல், கருவாய்க்கரைப்புத்தூர், நாலூர் மயானம், திருச்சேறை, திருநாகேஸ்வரம்
- மார்ச் 2018 திருநல்லூர், திருக்கண்ணமங்கை, நன்னிலம், திருக்கண்டீச்சரம், பனையூர், விற்குடி, கூத்தனூர், திலகைபதி, அம்பர்மாகாளம், அம்பல், திருமீயச்சூர்
- மார்ச் 2019 சக்கராப்பள்ளி, திருப்பாம்புரம், செருகுடி, திருச்சோற்றுத்துறை, சிறுபுலியூர், திருமழபாடியில் நந்தி திருமணம்
- ஏப்ரல் 2019 அவிநாசி, திருமுருகன்பூண்டி, பவானி, திருச்செங்கோடு, வெஞ்சமாக்கூடல், கொடுமுடி, கரூர்
- செப்டம்பர் 2019 திருமருகல், திருப்புகலூர், இராமநந்தீச்சரம், திருச்செங்காட்டாங்குடி, சீயாத்தமங்கை, திருப்பயத்தங்குடி, கரவீரம்
- மே 2022 விளமல், பெருவேளூர், தலையாலங்காடு, சிக்கல், எண்கண், தேவூர், திருப்பள்ளிமுக்கூடல், திருவாரூர்
- ஜூன் 2022 அவளிவணல்லூர், அரித்துவாரமங்கலம், ஆலங்குடி, கொள்ளம்புதூர், திருவிடைவாயில், கோடியக்கரை, அகத்தியான்பள்ளி, வேதாரண்யம், இடும்பாவனம், உசாத்தானம்
- ஜூலை 2022 பரிதிநியமம், கோட்டூர், திருக்களர், சித்தாய்மூர், எட்டுக்குடி, வலிவலம், கன்றாப்பூர், கச்சினம், தண்டலை நீள்நெறி, கற்பகநாதர்குளம் , தில்லைவிளாகம்
- ஆகஸ்டு 2022 திருவஞ்சைக்களம், கொடுங்கல்லூர், திருச்சூர்
- செப்டம்பர் 2022 ஓகையூர், திருவிடைமருதூர், கும்பகோணம், திருவேதிகுடி, திருவையாறு
- 2023 திருநெல்வேலி, நவதிருப்பதி, திருப்பூவணம், திருப்புத்தூர், திருச்சுழி, உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, சேதுக்கரை, ராமேஸ்வரம், தனுஷ்கோடி
- 2025 விருத்தாச்சலம், திருவட்டத்துறை, பெண்ணாகடம், திருக்கூடலையாற்றூர், எருக்கத்தம்புலியூர், ஸ்ரீமுஷ்ணம், காஞ்சிபுரம் கோயில்கள், குரங்கணில்முட்டம், திருமாகறல், திருவன்பார்த்தான்பனங்காட்டூர், அச்சிறுப்பாக்கம், திருத்தண்கா, திருவேளுக்கை, திருப்பாடகம், திருப்புட்குழி, திருவெக்கா
- 2026 நவகைலாசம், வானமாமலை, திருக்குறுங்குடி, குற்றாலம்
- ஏடகம் : வரலாற்று உலா, 25.2.2018
- ஏடகம் : வரலாற்று உலா, 7.12.2019
- ஏடகம் : வரலாற்று உலா. கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு, 7.12.2019
- ஏடகம்: வரலாற்று உலா, சோழபுரம், மாளிகைமேடு, சலுப்பை, வடலூர், தாராசுரம், திருவலஞ்சுழி, 30.7.2025














































