28 October 2022

ஓவியர் தங்கம்

புன்னகையுடன்கூடிய முகம், அனைவரையும் வசீகரிக்கும் பேச்சு, எப்போதும் நேர்மறைச்சிந்தனை, அனைவரிடமும் பழகும் பாங்கு, ஓர் முன்னுதாரண அரிய மனிதர் என்ற வகையில் எங்கள் அனைவரையும் ஈர்த்தவர். ஓவியத்துறையில் சாதனைகள் புரிந்தவர். இவரைப் போல ஓர் அரிய மனிதரைக் காணல் அரிது. அனைவரிடமும் நட்பு பாராட்டுபவர். எங்கள் குடும்ப நண்பர் திரு தங்கம் அண்ணன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

கையால் அவர் ஓவியமாக வரைந்த கல்கியின் பொன்னியின் செல்வன் 10 தொகுதிகளும் அவருடைய பெயரை என்றும் சொல்லிக்கொண்டிருக்கும்.

பிறந்த ஊர், வளர்ந்த ஊர், சுற்றம், நட்பு, பணியாற்றிய இடங்கள் என்று ஒவ்வொன்றைப் பற்றியும் பேச ஆரம்பித்தால் நாம் நம்மை மறந்துவிடுவோம். அந்தந்த காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச்சென்றுவிடுவார். என் தந்தைக்கும் மிக நெருக்கமானவர். நாங்கள் உறவினர் என்று கூறுவார். என் தந்தை இறந்தபின்னர் பல வருடங்கள் கழித்து உறவினர் திருமணத்தில் நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டபோது "உன் அப்பாவைப் பார்ப்பதுபோலவே இருக்கிறது. நானும் உன் அப்பாவும் கும்பகோணத்தில் ஆங்கிலத் திரைப்படங்கள் பார்க்கச் செல்வோம்." என்று நினைவுகூர்ந்தார்.

சந்திக்கச் செல்லும்போதெல்லாம் குடும்பத்தினரைப் பற்றியும், நண்பர்களைப் பற்றியும் அதிகம் பேசுவார். கும்பகோணம் தெற்கு வீதியில் அவர் குடியிருந்த இல்லத்தில் தொடங்கி பல இடங்களில் நடந்த நிகழ்வுகளை அப்படியே கண்முன் கொண்டு வந்துவிடுவார். பணியாற்றிய நிறுவனங்களை நன்றியோடு நினைவுகூர்வார்.

இத்தகு மாமனிதர் நம் அனைவரின் உள்ளங்களிலும் என்றும் வாழ்வார். அவருடைய சாதனைகள் என்றும் நிலைத்து நிற்கும்.

............

கண்ணீர் அஞ்சலி
திருமதி. R. சந்திரோதயம் தங்கம், ஓவிய ஆசிரியை (ஓய்வு) GCHS, அவர்களின் கணவரும், திருமதி. பொன்னியின் செல்வி, உதவி பேராசிரியர், குந்தவை நாச்சியார் கல்லூரி மற்றும் Dr. T. ராஜேந்திரன், USA., அவர்களின் தந்தையுமாகிய.
திரு. ப. தங்கம், ஆர்டிஸ்ட் & போட்டோகிராபர், நோய் குறியியல் துறை (ஓய்வு), தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அவர்கள் 27.10.2022 வியாழக்கிழமை இரவு 11:00 மணி அளவில் இயற்கை எய்தினார்கள்.
அன்னாரது இறுதி ஊர்வலம், 29.10.2022, சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு எண்.14, 6 வது, மெயின் ரோடு, ஞானம் நகர், தஞ்சாவூர் அவர்களது இல்லத்தில் இருந்து புறப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மீளாத்துயறுடன்,
குடும்பத்தினர் & உறவினர்கள்













ஒளிப்படம் : திரு கரந்தை ஜெயக்குமார்

விக்கிப்பீடியாவில் அவரைப் பற்றி நான் ஆரம்பித்த பக்கம்

............
ஓவியர் தங்கம் அவர்களின் மனைவி திருமதி சந்திரோதயம் நேற்று (11 அக்டோபர் 2023) மதியம் இயற்கை எய்தினார். அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். (அவருடைய குடும்பத்தார் அனுப்பிய செய்தி). 


12 அக்டோபர் 2023இல் மேம்படுத்தப்பட்டது.

7 comments:

  1. நெஞ்சார்ந்த அஞ்சலிகள்...

    ஐயா அவர்களை சந்திக்க ஆவல் இருந்தும் கால் நோவினால் முடியவில்லை..

    இறைவனின் திருவடிகளில் ஆன்மா சாந்தியடையட்டும்..

    ஓம் நம சிவாய..

    ReplyDelete
  2. உடலுக்கு வயதானாலும், உள்ளத்தால் இளமையாய் குழந்தையாய் இருந்தவர், பாசத்தோடு பழகிய நல்மனிதரின் மறைவு வேதனையினைத் தருகின்றது.

    ReplyDelete
  3. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  4. ஆழ்ந்த இரங்கல்கள்.  இவரை பெருமைகள் பற்றி உங்கள் பதிவுகள் மூலமாகவே அறிந்திருந்தேன்.

    ReplyDelete
  5. ஆழ்ந்த இரங்கல்கள். நேற்று கூட அவர் பொன்னியின் செல்வன் கதைக்கு வரைந்திருந்த சித்திரங்களைப்பார்த்தேன் [ சினேகிதி மாத இதழில்]

    ReplyDelete
  6. ஓயாது வரைந்து வரைந்து, ஓய்ந்த கை ஓய்வெடுக்கத் தொடங்கியது

    ஆழ்ந்த இரங்கல்கள் அன்னார் ஆன்மா இறைநிழலில் என்றும் இளைப்பாறட்டும்

    ReplyDelete