30 April 2022

ஃப்ரண்ட்லைன் வாசகனின் கடிதங்கள்

1970களின் இடையில் ஆரம்பித்த தி இந்து வாசிப்பு அவ்விதழின் சகோதர இதழான, 1984இல் முதன்முதலில் வெளியான, ஃப்ரண்ட்லைன் இதழோடு தொடர ஆரம்பித்தது.


ஃப்ரண்ட்லைன் வெளியானபோது அதன் முதல் இதழை நான் வழக்கமாக நாளிதழ்களை வாங்கும் கடைக்கார நண்பர் தனியாக எடுத்துவைத்திருந்தார்.  நீங்கள் வாசிக்கின்ற தி இந்து புதிதாக ஒரு இதழை வெளியிடுகிறது. எனக்காகத் தனியாக எடுத்து வைத்துள்ளதாகக்கூறி அதனைத் தந்தார். இதழின் விலை ரூ.6. இந்த இதழ் எங்கள் இல்ல நூலகத்தில் நூற்கட்டு செய்யப்பட்டு இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

ஃப்ரண்ட்லைன் வெளியிட்ட அனைத்து சிறப்பிதழ்களைப் படித்தவன் என்ற வகையில் அண்மையில் அவ்விதழ் வெளியிட்ட சத்யஜித் ரே சிறப்பிதழை அதிகம் ரசித்து வாசித்தேன். வழக்கமான பத்திகளோ, நடப்புக்கட்டுரைகளோ இன்றி முழுக்க முழுக்க அவருக்காக மட்டுமே அவ்விதழ் அமைந்திருந்தது. அட்டைப்படம் முதல் இறுதிப்பக்கம் வரை எங்கும் விளம்பரமும் இல்லை. இது ஃப்ரண்ட்லைன் இதழின் பொதுச்சிறப்புகளில் ஒன்று.

பல்வேறு காலகட்டங்களில் நான் எழுதியுள்ள கடிதங்கள் அவ்விதழில் வெளியாகியுள்ளன. அவற்றில் சிலவற்றைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

ஃப்ரண்ட்லைன் இதழில் நான் எழுதி (Mission Eagle தொடர்பாக Manoj Joshi, "To the brink in Sri Lanka," Frontline, January 13-26, 1987 என்ற கட்டுரைக்கு) வெளியான முதல் கடிதம். "I felt as if I were with 'Mission Eagle' as a participant in 'Operation Poomalai' while reading Manoj Joshi's report. The photographs were excellent." B.Jambulingam, Thanjavur, Tamil Nadu.
பூமாலை நடவடிக்கை, 1987

ப்ரண்ட்லைன் மறு வடிவமைப்பு 2006



காஸ்ட்ரோ சிறப்பிதழ் வெளியானபோது நான் எழுதிய கடிதம் அவ்விதழில் வெளியானது. அப்போது கூடுதலாக மற்றொரு சிறப்பாக Frontline ஆசிரியர் திரு என்.ராம், திருச்சி The Hindu அலுவலகத்திலிருந்து ஒருவரை (Mr S.Narayanan, Sales Executive, The Hindu, Senthanneerpuram, Trichy) இதற்காகவே என் இல்லத்திற்கு 10.3.2008 அன்று அனுப்பி என் கடிதத்திற்காக பாராட்டு தெரிவித்திருந்தார். வந்தவர் கேட்டபடி என்னுடைய தன்விவரக்குறிப்பினையும், நான் எழுதிய நூலினையும் திரு ராம் அவர்களுக்கு அனுப்பக்கூறி, அவரிடம் தந்தேன். 

பீடல் காஸ்ட்ரோ சிறப்பிதழ், 2008

ப்ரண்ட்லைன் வெள்ளிவிழா ஆண்டு சிறப்பிதழ், 2010



ஜாப் தாமஸ் கட்டுரைக்கு மறுமொழியாக கூடுதல் செய்திகள், 2011

கட்டுரைக்கான கடிதம், 2011

ஜான் செரியன் கட்டுரைக்கான கடிதம், 2013

இந்திய சினிமா நூற்றாண்டு சிறப்பிதழ், 2013


ப்ரண்ட்லைன் 30ஆம் ஆண்டு சிறப்பிதழ், 2015

ஏப்ரல் 2022இல் பணி நிறைவு பெறுகின்ற ப்ரண்ட்லைன் இதழின் ஆசிரியர் திரு ஆர்.விஜயசங்கர் அவர்களுக்கு அவருடைய பணியையும், இதழின் சிறப்பையும் பாராட்டி ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அவர் அதனை தன் முகநூல் பக்கத்தில் ஒரு தீவிர வாசகரின் பாராட்டு என்று பகிர்ந்திருந்தார். அவருக்கு என் நன்றி. வாசிப்பு தொடரும்..


தொடர்புடைய பதிவுகள்:

4 comments:

  1. இனிய நினைவலைகள். பாராட்டுகள்.

    ReplyDelete
  2. தங்களது சிரத்தையான பதிவு வாழ்க....

    ReplyDelete
  3. ப்ரண்ட்லைன் இதழ் தொடங்கப்பட்டபோது, இந்தியா டுடேக்கு சவால்விடும் வண்ணம் இருந்ததை மறுப்பதற்கில்லை. ஆனால், ராமை இந்துவிலிருந்து தனிமைப்படுத்தி அவரது இடதுசாரி மற்றும் கிறிஸ்தவ ஆதரவு கொள்கைகளுக்கு வடிகால்வேண்டும் என்பதற்காகத்தான் அது தொடங்க இந்து உரிமையாளர்கள் அனுமதித்தார்கள் என்ற உண்மை வெளியானபோது அதன்மேலிருந்த மரியாதை குறைந்துவிட்டது. மற்றும் எழுத்துருக்கள் மிகவும் சிறியதாக இருக்கும். படங்கள் தனியாக இருந்தாலும், text-heavy என்பதே அதன் USP ஆக இருந்தது. மத்தியில் யார் ஆளும்கட்சியாக இருந்தாலும் அவர்களை எதிர்ப்பது அதனுடைய கொள்கைகளில் முக்கியமானதாக ஆனபோது படிப்படியாக அதைப் படிப்பதிலிருந்து விலகிவிட்டேன்.

    ஆனால் அதிலிருந்த நல்லவற்றை நீங்கள் எடுத்துக்காட்டினீர்கள். குறிப்பாக உங்களின் கடிதங்கள். இவ்வளவு நாட்களாக எப்படிப் பாதுகாத்து வைத்தீர்கள் என்பதே பிரமிப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  4. சிறப்பான நினைவுகள்.... பாதுகாத்து வைத்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete