01 September 2025

கே.ஏ.குணசேகரன்: இரா. காமராசு

இரா. காமராசு எழுதியுள்ள  கே.ஏ.குணசேகரன் என்னும் நூல்  வந்தனம்னா வந்தனம், நாக்குச் சிவந்த குயில், அட்ரா சக்கே, வன்மங்களின் ஆறா வடு, தொட்டில் தொடங்கித் தொடுவானம் வரை,  தொட்டுக் கொள்ளலாம் வாங்க!, கலிகெழு துணங்கை ஆடிய மருங்கு, மனுசங்கடா…நாங்க மனுசங்கடா! என்ற உட்தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. பின்னிணைப்புகளாக கே.ஏ.குணசேகரன் வாழ்க்கைக் குறிப்பு, வெளியிட்ட நூல்கள், எழுதிய நூல்கள், இயக்கிய நாடகங்கள், வெளிவந்துள்ள ஒலி நாடாக்கள், பெற்ற விருதுகள்/சிறப்புகள் ஆகியவை தரப்பட்டுள்ளன.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில் நூலின் நாயகரான கே.ஏ.குணசேகரனைக் காணவும், அவ்வப்போது பேசவும் எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன. இயல்பாகப் பேசுபவர், நன்கு பழகுபவர், சிரித்த முகம், எப்போதும் சுறுசுறுப்பாகக் காணப்படுபவர் என்ற வகையில் அவர் என் மனதில் ஆழப்பதிந்தார். இந்நூல் அவரைப் பற்றிய துறை சார்ந்த பல முன்னெடுப்புகளை மிகவும் அழகாக எடுத்துரைக்கிறது. இவ்வாறாகச் சாதனை படைத்த ஓர் அரிய மனிதரைக் காண கிடைத்த வாய்ப்பைப் பெருமையாகக் கருதுகிறேன். இளமைக்காலத்தில் அவர் எதிர்கொண்ட பல நிகழ்வுகளே பிற்காலத்தில் மாபெரும் கலைஞனாக உருவெடுக்க உதவியதை இந்நூல் மூலம் அறியமுடிகிறது. கே.ஏ.ஜி. என்றழைக்கப்படுகின்ற குணசேகரனைப் பற்றி அறிந்துகொள்ள நூலின் சில பகுதிகளைக் காண்போம்.



“இளம் வயதில் முறையாக, கட்டணம் செலுத்தி, கலையோ, இசையோ பயில வாய்ப்பு அவருக்கு அமையவில்லை. ஏகலைவனைப் போலத் தாமே முயன்று கற்றுத் தேர்ந்தவர். எந்தச் சூழலிலும் ‘கட்டை விரலை’க் காவு தராத, ஞானச்செருக்கு அவரிடம் இருந்தது.” (ப.11)

“கே.ஏ.ஜி. ஒரு குழந்தையைப் போல எப்போதும் பரவசமாக இருப்பார். விடாமுயற்சி, கடும் உழைப்பு ஆகியவை அவரின் உடன் பிறந்தவை. எதற்கும் அஞ்சாத துணிச்சல்காரர். உயரம் குறைந்தவர்தான், ஆனால் உள்ளத்தால் உயர்ந்தவர். கோபம் வரும். அது நிலைக்காது. அடுத்த கணம் மென் புன்னகை வரும். சாந்தமாகிவிடுவார்…” (ப.20)

“கே.ஏ.ஜி. புகழ்பெறாத பொழுதே அவரின் முதல் பேட்டியை வெளியிட்டது தஞ்சையிலிருந்து வெளிவந்த ‘நடப்பு’ இதழ். பா.செல்வபாண்டியன் பேட்டி எடுத்திருந்தார்…” (ப.24)

“கே.ஏ.ஜி. சங்க இலக்கிய ஆய்வு, உரைகளில் ஈடுபட்டது போலவே, ஆர்வம் காரணமாகவும், அவருக்குள் இருந்த கிராமியப் படைப்பு மனத்தின் வெளிப்பாடாகவும் கவிதைகள் எழுதினார். அவை சில இதழ்களில் வெளிவந்தன. மொழிபெயர்க்கவும் பட்டன…” (ப.40)

“நாட்டுப்புறப்பாடல்கள் காதல், பக்தி, பொழுதுபோக்கு என்ற நிலையில் மேடையேற்றப்பட்டன. அத் தருணத்தில் கே.ஏ.ஜி. நாட்டுப்புறப்பாடல்களின் சமூகச் சாரத்துக்கு அழுத்தம் கொடுத்தார். உழைப்பு, பகுத்தறிவு, கல்வி விழிப்புணர்வு, சாதி சமத்துவம், பொருளியல் விடுதலை, பெண் அடிமை ஒழிப்புப் போன்ற கருத்துகள் முதன்மை பெற்றன. நாட்டுப்புறக் கலைநிகழ்வுகளில் பிற இசைக்கருவிகளைக் காட்டிலும், நாட்டுப்புற இசைக்கருவிகளுக்கு முக்கியத்துவம் அளித்தார். குறிப்பாகப் ‘பறை’ எனும் ஆதி இசையைப் ‘சாப்பறை’யாக்கிய சதியிலிருந்து மீட்டு மீண்டும் ‘போர்ப்பறை’யாக முழங்கச் செய்ததில் கே.ஏ.ஜி.க்குப் பெரும்பங்குண்டு…” (ப.59)

“கே.ஏ.ஜி. நாட்டுப்புறவியல் புலத்தில் அதிகம் ஆர்வம் காட்டி ஈடுபட்டது ‘நாட்டுப்புறக் கலைகள்’ பற்றித்தான். இது குறித்துப் பல ஆய்வுகளில் ஈடுபட்டு, நூல்களையும் தந்துள்ளார்…..நாட்டுப்புறக்கலைகளை அறிமுகம் செய்தல், நாட்டுப்புறக்கலைகளை இலக்கணப்படுத்துதல், சமூகப் பயன்பாட்டை உறுதி செய்தல் ஆகிய வகைகளில் இந்நூற்களின் கருத்துகள் அமைந்துள்ளன.” (ப.68)

“கே.ஏ.ஜியின் நாட்டுப்புறவியல் துறைப் பங்களிப்பில் நாட்டுப்புற இலக்கியங்கள், நாட்டுப்புறக்கலைகள் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக நாட்டுப்புறப் பண்பாடு அமைகிறது. குறிப்பாக இரண்டு கருத்து நிலைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒன்று அதுவரை அதிகம் கவனம் பெறாத பழங்குடி மக்களின் வாழ்வியல். அடுத்து நாட்டுப்புறத்தாரில் பெரும்பான்மையினராகிய ஒடுக்கப்பட்டோர்-தலித்துகளின் பண்பாட்டு நிலை. நாட்டுப்புறவியலை-சேரிப்புறவியல் எனும் அளவுக்கு கே.ஏ.ஜி. சிந்திக்கிறார்.” (ப.74)

“…நாடக உலகில் நுழையும்போது கவனம் பெற்ற கலைஞராக அவர் விளங்கினார். இசைக்கலைஞர், பாடகர், நடிகர், நாடக இயக்குநர், நாடக எழுத்தாளர், நாடகத் தயாரிப்பாளர், நாடகக் கல்வியாளர், நாடகப் பயிற்றுநர் என கே.ஏ.ஜி ஒரு ‘All rounder’ ஆக விளங்கினார்…” (ப.82)

குணசேகரனுடைய குடும்பத்தார், நண்பர்கள், துறைசார்ந்த அறிஞர்கள், கலைஞர்களைச் சந்தித்து விவரங்களைத் தொகுத்தும், அவருடைய, அவரைப் பற்றிய நூல்கள் மூலமாகத் தரவுகளைத் திரட்டியும் ஓர் அருமையான படைப்பினைத் தந்துள்ள நூலாசிரியரின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

நூல் : கே.ஏ.குணசேகரன்
ஆசிரியர் : இரா.காமராசு
பதிப்பகம் : சாகித்திய அகாதெமி, தொலைபேசி 044-24311741/24354815
ஆண்டு : முதல் பதிப்பு, 2025
விலை : ரூ.100

-----------------------------------------------------------
----------------------------------------------------------- 

13 July 2025

கட்டுரைகள், யுட்யூப் பதிவுகள்

வலைப்பூ வாசகர்களின் எளிதான வாசிப்புக்காக நான் எழுதி, அச்சில் வெளியான கட்டுரைகளைப் பற்றிய இப்பதிவில் தந்துள்ளேன். இக்கட்டுரைகள் நான் பல்வேறு காலகட்டங்களில் பருவ இதழ்களிலும், நாளிதழ்களிலும் எழுதியவையாகும். அத்துடன் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. 

1995இல் எலியைத் தின்னும் கிழப்புலி என்ற சிறிய அறிவியல் துணுக்கு எழுத ஆரம்பித்து, 1997இல் ஞானசம்பந்தர் வாழ்வும் வாக்கும் என்ற கட்டுரைக்காக தொகுப்புப்பணியில் ஈடுபட்டு, பின் கட்டுரைகள் என்று எழுத ஆரம்பித்துத் தொடர்கிறேன். இதனை அவ்வப்போது மேம்படுத்துவேன். ஆதரவு தரும் வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றி.

சைவம்/கோயில்கள்/மகாமகம்

1. ‘‘ஞானசம்பந்தர் வாழ்வும் வாக்கும்’’, பன்னிரு திருமுறை சான்றோர் வாழ்வியல், செப்டம்பர் 1997, உரை தொகுப்பு, பக்.5-8

2. ‘‘தஞ்சைப்பெரிய கோயிலில் திரிபுராந்தகர்’’, தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப்பெருவிழா மலர், 9.6.1997, பக்.170-174

3. ‘‘குன்றக்குடியும் திருப்புகழும்’’, தமிழ் மரபும் முருக வழிபாட்டு நெறியும் கருத்தரங்கம், பழனி, ஆகஸ்டு 1998 (கருத்தரங்கிற்காக அனுப்பப்பட்டது, வெளியாகவில்லை)

4. ‘‘பழைசை மழபாடியில் திருஞானசம்பந்தர்’’, பட்டீஸ்வரம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக மலர், பக்.36-38

5. ‘‘உமாபதி சிவாச்சாரியார் அருளிய சிவப்பிரகாசம்’’, மெய்கண்ட சித்தாந்த சாத்திரம் (சொற்பொழிவுகள்), சைவ சித்தாந்தப் பெருமன்றம், தஞ்சாவூர், 1999, பக்.98-109 (தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஆற்றிய உரையின் அச்சு வடிவம்)

6. ‘‘பிள்ளையார் பெற்ற முத்துச்சிவிகை’’, பெரிய புராண ஆய்வு மாலை, தொகுதி 2, பெரிய புராண இலக்கிய ஆய்வு மாநாடு, வாரணாசி, 2001, பக்.686-691

7. ‘‘திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில்’’, தமிழ்நாட்டுச்சிவாலயங்கள், தொகுதி 2, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004, பக்.244-252

8. ‘‘தஞ்சாவூர் மாவட்டக் கற்றளிகளுக்கு புதுக்கோட்டை மாவட்டப் பங்களிப்பு’’, தமிழ்ப்பொழில்ஜூன் 2003, துணர் 77, மலர் 2, பக்.63-70 (முன்னர் புதுக்கோட்டையில் கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரையின் அச்சு வடிவம்)

9. ‘‘சப்தஸ்தானத் தலங்கள்’’, மகாமகம் சிறப்பு மலர் 2004, பக்.40-45

10.‘‘சிவகுரு தரிசனம் திருவடிப்பேறு’’, திருமந்திர ஆய்வுரைக் களஞ்சியம், திலகவதியார் திருவருள் ஆதீனம், புதுக்கோட்டை, 2005, பக்.372-379

11. ‘‘தேவாரம் பாடாத கோயில்’’தி இந்து, ஆனந்த ஜோதி, 9.7.2015

12. கோயில் உலா 1, பத்திரிகை.காம், 27 ஆகஸ்டு 2015

13. கோயில் உலா 2, பத்திரிகை.காம், 27 ஆகஸ்டு 2015

14.கோயில் உலா 3, பத்திரிகை.காம், 4 செப்டம்பர் 2015

15. கோயில் உலா : குடந்தை கோயில்கள், பத்திரிகை.காம், 23 அக்டோபர் 2015

16. மகாமக கோயில்களை தரிசிக்கலாம், வாருங்கள்பத்திரிகை.காம், 20 நவம்பர் 2015

17. மகாமக ஸ்பெஷல் : குடந்தை கோயில் வலம், பத்திரிகை.காம், 4 ஜனவரி 2016

18. மகாமக ஸ்பெஷல் கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் உலாபத்திரிகை.காம், 29 ஜனவரி 2016

19.”கோயிற்கலை போற்றும் மகாமகம்”, கும்பகோணம் மகாமகம் 2016, சிறப்பு மலர், இந்து சமய அறநிலையத்துறை, சென்னை, பக்.65-69

20. ‘‘நாகேஸ்வரர் ஆலய உலா’’, மகாமகம் முன்னோட்டம், தி இந்து, 28.1.2016

21. ‘‘இறைவனுக்கு விலகிய நந்தி’’, தினமணி, வெள்ளி மணி, 19.1.2016

22. ஐந்து மகாமகம் கண்ட அனுபவங்கள்பத்திரிகை.காம், 1 மார்ச் 2016


அறிவியல்

1. ‘‘எலியைத்தின்னும் கிழப்புலி”, அறிவியல் துளி, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர், ஜனவரி 1995, ப.4

2. ‘‘ஆண் குதிரை கருத்தரிக்கும்”, அறிவியல் துளி, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர், ஜனவரி 1995, ப.4

3. ‘‘சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அறிக அறிவியல் இதழின் பங்கு”, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர், 1995, பக்.415-419

4. ‘‘ஓட்டுநருக்கு நற்செய்தி”, அறிவியல் துளி, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர், மார்ச் 1996, ப.1

5. ‘‘மாசு படியும் தாஜ்மஹால்’’, தமிழக அறிவியல் பேரவை, நான்காம் கருத்தரங்கு, கோயம்புத்தூர், 1996, ப.280

6. ‘‘மனிதப்படி உருவாக்கம் ஒரு பார்வை’’, தமிழக அறிவியல் பேரவை, ஐந்தாவது கருத்தரங்கு, அண்ணாமலைநகர், 1997, ப.53

7. ‘‘உயிர் வார்ப்புகள் ஒரு விவாதம்’’, தி வீக், ஆங்கில இதழ் 16 மார்ச் 1997 இதழிலிருந்து தமிழாக்கம், அறிக அறிவியல்ஜூன் 1997, பக்.7-12

8.‘‘தமிழ் இதழ்களில் அறிவியல் செய்தி மொழிபெயர்ப்பு : படியாக்கம் (Cloning)’’, அறிவியல் தமிழாக்கம், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர், 1997, பக்.125-135

9. ‘‘நிழலும் நிஜமும் உயிர்ப்படியாக்கம்’’, அறிக அறிவியல்ஜூன் 1998, பக்.29-30

10. ‘‘மனிதப்படி உருவாக்கம் : ஒரு வரலாற்றுப்பின்னணி’’, காலந்தோறும் அறிவியல் தொழில்நுட்பம், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூர், 1998, பக்.78-84

11. ‘‘உயிர்ப்படியாக்கம் ஒரு வரலாற்றுப்பின்னணி’’, அறிக அறிவியல், ஆகஸ்டு 1998, பக்.8-9

12. ‘‘அம்மா டாலிக்கு வயது இரண்டு’’, அறிக அறிவியல், அக்டோபர்1998, பக்.21-23

13. ‘‘படியாக்க நிகழ்வு : 1997’’, பொது அறிவியல், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர், 1999, பக்.346-352

14. ‘‘அறிவியல் தமிழ் வளர்ச்சியில் மொழிபெயர்ப்பின் தேவை : 1997இன் அரிய அறிவியல் சாதனைகள்’’, அறிவியல் தமிழ் வளர்ச்சி, அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர், 1999, பக்.141-147

15. ‘‘2000ஆம் ஆண்டின் மிகச் சிறந்த அறிவியல் ஆய்வுகள்’’, அறிக அறிவியல், மே 2001, பக்.21-24

16. ‘‘2000 வரை படியாக்க நிகழ்வில் முன்னேற்றம்’’, உயிர் தொழில் நுட்பவியல், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர், 2002, பக்.85-97

17. ‘‘2002இல் படியாக்க நிகழ்வில் முன்னேற்றம்’’, பல்துறைத் தமிழ், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர், 2003, பக்.79-88

18. ‘‘2001இல் படியாக்கத்தின் வளர்ச்சி நிலை’’, தமிழ்ப்பொழில், ஆகஸ்டு செப்டம்பர் 2003, துணர் 77, மலர் 4 மற்றும் 5, பக்.150-158

19. ‘‘2003இல் படியாக்க நிகழ்வில் முன்னேற்றம்’’, தமிழ்ப்பொழில், மார்ச் 2004, துணர் 77, மலர் 11, பக்.392-405

20. ‘‘காட்டு மிருகங்கள் படியாக்கம்’’, அறிக அறிவியல், டிசம்பர் 2004, ப.29

21. ‘‘2004இல் படியாக்கத்தில் முன்னேற்றம்’’, தமிழ்ப்பொழில், நவம்பர் 2005, துணர் 80, மலர் 7, பக்.276-280, ஜனவரி 2007, துணர் 80, மலர் 9, பக்.349-360 (இரு இதழ்கள்) 

22. ‘‘2005இல் படியாக்கத் தொழில்நுட்பம்’’, இந்திய அறிவியல் தொழில் நுட்பம், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், 2006, பக்.271-280 

23. ‘‘2006இல் படியாக்கத்தில் முன்னேற்றம்’’, தமிழ்ப்பொழில், ஆகஸ்டு, துணர் 83, மலர் 2, பக்.199-200  (மூன்று இதழ்களில் தொடர்ந்து) 

24. ‘‘2006இல் படியாக்கத்தில் முன்னேற்றம்’’, தமிழ்ப்பொழில், செப்டம்பர், துணர் 83, மலர் 5, பக்.223-236

25. ‘‘2006இல் படியாக்கத்தில் முன்னேற்றம்’’, டிசம்பர் 2008, துணர் 83, மலர் 9, பக்.361-364  

26. ‘‘2007இல் படியாக்கத்தில் முன்னேற்றம்’’, தமிழ்ப்பொழில், பிப்ரவரி 2009, துணர் 84, மலர் 2, பக்.47-52

27. ‘‘2008இல் படியாக்கத்தில் முன்னேற்றம்’’, தமிழ்ப்பொழில், நவம்பர் 2011, துணர் 86, மலர் 11, பக்.421-430

28. ‘‘2009இல் படியாக்கத்தில் முன்னேற்றம்’’, வாழும் தமிழ், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், 2011, பக்.103-108


பிற பொருண்மைகள்

1. ‘‘சாமுவேல் ஜான்சன்’’, தமிழ் அகராதியியல் செய்தி மலர்,  சனவரி-சூன் 1998, ப.5

2. ‘‘உலகப்பெரும் அகராதி”, தமிழ் அகராதியியல் செய்தி மலர்ஜூலை-டிசம்பர் 1998, ப.3

3. ‘‘அனைத்துக்காலத்திற்கும் பொருந்தும் கதாநாயகன் (சே குவாரா)’’, ஜான் செரியன், மொழிபெயர்ப்பு, நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம், நவம்பர் 2008, பக்.41-44 

4. ‘‘ராஜராஜன் நேருவின் பார்வையில்’’, தினமணி, கொண்டாட்டம், 26 செப்டம்பர் 2010, ப.1

4.“A Writing on Reading”, Current Trends in Linguistics, Tamil University, Thanjavur, 2013, pp.171-176



11. ‘‘கலாமும் நானும் : மறக்க முடியாத இரு நிகழ்வுகள்’’, தினமணி கலாம் சிறப்பு மலர், 2015, ப.166

12.”சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம், கும்பகோணம்”, மகாமகம் 2016, சிறப்பு மலர், சரசுவதி மகால் நூலகம், பக்.83-88

14. ‘‘எழுத்தாளர்களை உருவாக்கிய அறிஞர் திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம்’’, தொகுப்பு புலவர் ம.அய்யாசாமி, விழுமிய நெஞ்சர் வெள்ளையாம்பட்டு சுந்தரம், பக்.109-112

15."மாமனிதரின் வான்புகழ்", திரு கோ.சு.சாமிநாத செட்டியார் நூற்றாண்டு மலர், (தொகு) சீ.தயாளன், சி.கோடிலிங்கம், சிவகுருநாதன் நூலகம், கும்பகோணம், 29.10.2017, பக்.63-67 

16. "கடிதம் செய்த மாற்றம்", தினமணி, மகளிர் மணி, 3 அக்டோபர் 2018, ப.3

17. "அது ஒரு பொற்காலம்", தினமணி, 4 நவம்பர் 2018, ப.xii


19. "கேட்டு வாங்கிப்போடும் கதை  : பிரசவங்கள்", எங்கள் ப்ளாக்,  வலைப்பூ 13 நவம்பர்  2018

20. "இலக்கை நோக்கும் உயரமான பெண்" , தினமணி, மகளிர் மணி, 28 நவம்பர் 2018, ப.4

21. "மைசூர் மெழுகுச் சிலை அருங்காட்சியகம்", கால நிர்ணய், 2019

23. "உலக அரசியல் களத்தில் மகளிர்", தினமணி, 17 ஏப்ரல் 2019, ப.1

24. "2018இன் சிறந்த சொல் நெகிழி", ஏடகம், திகிரி, ஏப்ரல்-ஜூன் 2019 ஏடு 1 அகம் 2, பக்.2-6

25. "மாற்றத்திற்கான மங்கை கிரேட்டா தன்பர்க்", தினமணி, மகளிர் மணி, 4 செப்டம்பர் 2019, ப.3

26. "ரியலி கிரேட்டா தன்பர்க்", புதிய தலைமுறை பெண், அக்டோபர் 2019, பக்.88-89

27. "மொழியாக்கம் ஒரு கலை", தினமணி இணைய தளம், 24 டிசம்பர் 2019

28. "மைக்ரோசிப் : அனுசரணையா? ஆபத்தா?, பத்திரிகை.காம்,13 செப்டம்பர் 2017 

29. சே குவாராவின் இறுதி நிமிடங்கள், கிளையர் பூபையர், மொ.பெ. பத்திரிகை.காம், 9 அக்டோபர் 2017

30. ‘‘என்றென்றும் நாயகன் சே குவாரா’’, மொழிபெயர்ப்பு, சே குவாரா 50ம் ஆண்டு நினைவு தினம், தி இந்து, 9.10.2017, ப.6 

31. இந்திரா காந்தி பிறந்த நாள் : நேரு எழுதிய கடிதங்கள், பத்திரிகை.காம், 19 நவம்பர் 2017

32. ‘‘2017ன் சிறந்த சொல்’’தி இந்து, 7.1.2018, ப.8 
34. "உலகின் இளம் பெண் பிரதமர் சன்னா மரின்", தினமணி இணைய தளம், மகளிர் தின சிறப்புப்பக்கம், 8 மார்ச் 2020

36. "உரிய நேரத்தில் உறங்கச்செல்லும் குழந்தைகள் செய்யும் குறும்பு குறைவே", கார்டியன், மொ.பெ., விடுதலை ஞாயிறு மலர், 23.5.2020, ப.9 

38. "அயலக இதழ்கள் புகழாரம் சூட்டிய அப்துல் கலாம்", முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் நினைவஞ்சலி, தினமணி, 27 ஜூலை 2020

39. "15 நிமிட நகரம்"தினமணி, 7 அக்டோபர் 2020

40. "உலக வரலாறு அறிவோம் ", இந்திரா காந்தி நினைவு நாள், இந்து தமிழ் திசை, 31.10.2020, .6

41. "ஆக்ஸ்போர்டு அகராதியின் எதிர்பாரா ஆண்டின் (2020) சொற்கள்", ஏடகம், திகிரி, ஏப்ரல்-ஜூன் 2021 ஏடு 3 அகம் 1

42."ஜெர்மானிய இளைஞர்களின் 2020ஆம் ஆண்டின் சிறந்த ஆங்கிலச்சொல்", ஏடகம், திகிரி, ஜூலை-செப்டம்பர் 2021 ஏடு 3 அகம் 2

43. "2018இன் சிறந்த சொல்", திகிரி கட்டுரைகள், பதி.முனைவர் மணி. மாறன், க.முரளி, ஏடகம், தஞ்சாவூர், 2021, பக்.29-33

பௌத்தம்

1. ‘‘தஞ்சை நாகை மாவட்டங்களில் புத்த மதச் சான்றுகள்”, தமிழ்க்கலை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ் 12, கலை 1-4, மார்ச்-டிசம்பர், 1994, பக்.98-102 

2. ‘‘குடந்தையில் பௌத்தம்’’, தமிழ்ப்பொழில், கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், ஏப்ரல் 1996, துணர் 70, மலர் 1, பக்.560-563 

3. ‘‘பௌத்தத்தில் வாழ்வியல்’’, தமிழ்ப்பொழில், கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், நவம்பர் 1996, துணர் 70, மலர் 8, பக்.905-912 

4. ‘‘இந்து மதத்தில் புத்த மதத்தின் தாக்கம்’’, தமிழியல் ஆய்வு, ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், 1997, பக்.147-151 

5. ‘‘சைவமும் பௌத்தமும்’’, ஆறாம் உலகச் சைவ மாநாடு, தஞ்சாவூர், ஆய்வுச்சுருக்கம், 1997, ப.88

6. ‘‘தஞ்சையில் பௌத்தம்’’, தமிழ்ப்பொழில், கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், மே 1998, துணர் 72, மலர் 1, பக்.3-8 

7. ‘‘தஞ்சை மண்ணில் தழைத்த பௌத்தம்’’, திருச்சி வானொலி நிலையம் ஒலிபரப்பு, 15 ஜூன் 1998 (பதிவு 10 ஜூன் 1998)

8.  ‘‘பௌத்தத்தில் மனித நேயம்’’, மனிதநேயக் கருத்தரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 2 ஆகஸ்டு 1998 (கருத்தரங்கில் அளிக்கப்பட்டது)

9. ‘‘மும்பை அருங்காட்சியகத்தில் நாகப்பட்டின புத்த செப்புத் திருமேனிகள்’’, தமிழ்ப்பொழில், கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், ஜூலை 1999, துணர் 73, மலர் 3, பக்.95-98 

10. ‘‘பௌத்த சமயமும் மத நல்லிணக்கச் சிந்தனைகளும்’’, மதம்-மனிதம்- சமூகம் கருத்தரங்கம், அன்பநாதபுரம் வகையார் அறத்துறைக் கல்லூரி (தன்னாட்சி), மன்னம்பந்தல், மயிலாடுதுறை, 21 மார்ச் 2000, (கருத்தரங்கில் அளிக்கப்பட்டது) 

11.‘‘கல்கத்தா அருங்காட்சியகத்தில் நாகப்பட்டின புத்த செப்புத் திருமேனிகள்’’, ஆய்வு மணி, தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை, மயிலாடுதுறை, 2001, பக்.160-166 

12. ‘‘சம்பந்தரும் பௌத்தமும்’’, திருஞானசம்பந்தர் ஆய்வு மாலை, தொகுதி 2, திருஞானசம்பந்தர் இலக்கிய ஆய்வு மாநாடு, வாரணாசி, 2002, பக்.654-662

13.‘‘சோழ நாட்டில் புத்தர் சிலைகள் : வழிபாடும் நம்பிக்கைகளும்’’, தமிழ்ப்பொழில், நவம்பர் 2002, துணர் 76, மலர் 5, பக்.695-702

14. ‘‘பட்டீஸ்வரம் அருகே புத்தர் சிலை கண்டுபிடிப்பு’’, தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலர், மார்ச் 2002, ப.2

15.“காவிரிக்கரையில் பௌத்தம்”, கல்கி தீபாவளி மலர், 2002, பக்.162-163 

16. “பட்டீஸ்வரம் அருகே புத்தர் சிலை கண்டுபிடிப்பு”, ஆவணம் 13, 2002, ப.185

17.‘‘திருநாட்டியத்தான்குடியில் புத்தர் சிலை கண்டு பிடிப்பு’’, தமிழ்ப் பல்கலைக் கழகச் செய்தி மலர், பிப்ரவரி 2003, ப.3

18. ‘‘தஞ்சை மண்ணில் தழைத்த பௌத்தம்’’, எத்தனம், தமிழியல் ஆய்வுகள், அன்னம், தஞ்சாவூர், 2002, பக்.132-137 (15 ஜூன் 1998இல் திருச்சி வானொலி நிலையத்தில் பேசிய உரையின் அச்சுவடிவம்) 

19. ‘‘தஞ்சை மாவட்ட திருநாட்டியத்தான்குடியில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு’’, பௌர்ணமி, தமிழ்நாடு புத்திஸ்ட் பெடரேசன், சென்னை, முழு நிலா 2, மதி 2, 13.7.2003, ப.16 

20. ‘‘புத்தர் என்றழைக்கப்படும் சமணர்’’, தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலர், சூலை 2003, ப.2

21. ‘‘புத்தர் என்றழைக்கப்படும் சமணர்’’, பௌர்ணமி, தமிழ்நாடு புத்திஸ்ட் பெடரேசன், சென்னை, முழு நிலா 3, மதி 3, 9.10.2003, பக்.20-21

22. ‘‘நாவுக்கரசரும் பௌத்தமும்’’, திருநாவுக்கரசர் ஆய்வு மாலை, தொகுதி 2, திருநாவுக்கரசர் இலக்கிய ஆய்வு மாநாடு, வாரணாசி, 2003, பக்.738-743

23.‘‘சோழ நாட்டில் புத்தர் சிலைகள்-பேட்டவாய்த்தலை’’, பௌர்ணமி, தமிழ்நாடு புத்திஸ்ட் பெடரேசன், சென்னை, முழு நிலா 4, மதி 4, 8.12.2003, ப.13 

24. ‘‘நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனிகள்’’, வரலாற்றுச்சுடர்கள், குழலி பதிப்பகம், பாண்டிச்சேரி, 2003, பக்.63-69

25. “திருநாட்டியத்தான்குடி புத்தர் சிலை”, ஆவணம் 14, 2003, ப.185

26. ‘‘சோழ நாட்டில் புத்தர் சிலைகள்-ஒகுளூர்’’, பௌர்ணமி, தமிழ்நாடு புத்திஸ்ட் பெடரேசன், சென்னை, முழு நிலா 1, மதி 1, 7.1.2004, ப.14

27. ‘‘சோழ நாட்டில் புத்தர் சிலைகள்-ஆயிரவேலி அயிலூர், அரியலூர்’’, பௌர்ணமி, தமிழ்நாடு புத்திஸ்ட் பெடரேசன், சென்னை, முழு நிலா 2, மதி 2, 27.10.2004, பக்.12-13

28. ‘‘புத்தர் சிலை கண்டுபிடிப்பு’’, செய்திச்சோலை, ஏப்ரல் 2005, ப.24 

29.‘‘சோழ நாட்டில் புத்தர் சிலைகள்-அய்யம்பேட்டை, ஆலங்குடிப்பட்டி, இடும்பவனம்’’, பௌர்ணமி, தமிழ்நாடு புத்திஸ்ட் பெடரேசன், சென்னை, முழு நிலா 1, மதி 1, 19.8.2005, ப.5 

30. ‘‘பெரம்பலூர் மாவட்டம் குழுமூரில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு’’, கணையாழி, ஆகஸ்டு 2006, ப.61 

31. ‘‘புத்தர் சிலை கண்டுபிடிப்பு’’, குமுதம் தீராநதி, செப்டம்பர் 2006, ப.2 

32. “உள்ளிக்கோட்டை புத்தர் சிலை”, ஆவணம் 17, 2006, ப.221

33. ‘‘வளையமாபுரத்தில் புத்தர் சிலை’’, ரசனை, மார்ச் 2008, ப.12 

34.‘‘பெரம்பலூர் மாவட்டம் குழுமூரில் புத்தர் சிலை கண்டு பிடிப்பு’’, தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலர், ஆகஸ்டு 2008, ப.3 

35.‘‘சோழ நாட்டில் களப்பணியில் கண்ட புத்தர் சிலைகள் (1998-2007)”, தமிழ்க்கலை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ் 13, கலை 1, செப்-டிசம்பர் 2008, பக்.31-36

36.“Buddha statues in the vicinity of other temples in the Chola country", Tamil Civilization, Tamil University, Thanjavur, Vol 19, September 2008, pp.15-23 

37.‘‘திருவாரூர் மாவட்டம் வளையமாபுரத்தில் புத்தர் சிலை கண்டு பிடிப்பு’’, தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலர், நவம்பர் 2008, ப.4 

38. ‘‘திருச்சி காசாமலையில் புத்தர் சிலை’’, தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலர், டிசம்பர் 2008, ப.4 

39. “வளையமாபுரத்தில் புத்தர் சிலை”, ஆவணம் 19, 2008, ப.226

40.‘‘சோழ நாட்டில் மீசையுடன் கூடிய புத்தர் சிலை”, தமிழ்க்கலை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ் 14, கலை 3, ஏப்ரல் 2009, பக்.29-32 

41.“A resurvey of Buddha statues in Pudukottai region (1993-2009)", Tamil Civilization, Tamil University, Thanjavur, Vol 23, Oct-Dec 2009, pp.62-68 

42. “திருச்சி காஜாமலை புத்தர் சிலை”, ஆவணம் 20, 2009, ப.205

43. ‘‘பௌத்த சுவட்டைத்தேடி : களத்தில் இறங்கும் முன்’’, தமிழ் இன்று வலைப்பூ, 29 மே 2010

44.‘‘நாகப்பட்டினம் மாவட்டத்தில் புத்தர் சிலைகள் (1940-2009)’’, உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு கோவை, ஆய்வரங்கச் சிறப்பு மலர் 2010, பக்.686-687

45.‘‘பௌத்தம் வளர்த்த தமிழ்’’, தினமணி செம்மொழிக்கோவை, உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு 2010 சிறப்பு மலர், பக்.237-240

46. ‘‘பௌத்தம் போற்றும் மனித நேயம்’’, செம்மொழி மலர், கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், 2010, பக்.188-190 

47. ‘‘பௌத்த சுவட்டைத்தேடி : அம்மண சாமிய பாக்க வந்தீங்களா?’’, தமிழ் இன்று வலைப்பூ, 17 ஜூன் 2010

48. ‘‘அந்த புத்தர் எந்த புத்தர்?’’, தமிழ் இன்று வலைப்பூ, 31 ஜூலை 2010

49. ‘‘புத்தர் அல்ல, கும்பகோணம் பகவர்’’, தமிழ் இன்று வலைப்பூ, 21 ஆகஸ்டு 2010

50. ‘‘நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள்’’, தமிழ் இன்று வலைப்பூ, 13 நவம்பர் 2010

51.“சோழ நாட்டில் புத்தர் செப்புத்திருமேனிகள்”, தினமணி, புத்தாண்டு சிறப்பிதழ் 2011, ப.54 

52.“பௌத்தம் போற்றும் மனித நேயம்”, கரந்தைத்தமிழ்ச்சங்க நூற்றாண்டு விழாச் சிறப்பு மலர், கரந்தைத் தமிழ்ச்சங்கம், 2011, பக்.179-181

53.“10ம் நூற்றாண்டு புத்தர் சிலை கண்டெடுப்பு”, அன்பு பாலம், செப்டம்பர் 2012, ப.47

54.“சோழ நாட்டில் புத்தர் சிற்பங்கள்”, தினமணி புத்தாண்டு சிறப்பிதழ் 2013, பக்.50-51

55. “கண்டிரமாணிக்கத்தில் புத்தர் சிலை”, ஆவணம் 24, 2013, பக்.267-268

56."Buddha statues: Thanjavur District", DLA News, August 2013, Vol 37, No.8, pp.5-6


58.“பௌத்த சுவடுகளைத் தேடி : களப்பணி ஆய்வு”வளன் ஆயம் ஆய்விதழ், இதழ் 16, மலர் 1, மார்ச் 2015, பக்.117-123

59.“சோழ நாட்டில் புத்தர் சிலைகள் வழிபாடும் நம்பிக்கைகளும்”, தமிழக நாட்டுப்புற ஆய்வுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2010, பக்.134-139  

60. ‘‘மகாமகம் காணும் கும்பகோணத்தில் பௌத்தம்’’, கும்பகோணம் மகாமகம் தீர்த்தவாரி, விளம்பரச் சிறப்பிதழ், தினமணி, 22.2.2016 

61. ‘‘களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் மற்றும் சமண தீர்த்தங்கரர் சிலைகள்’’, தொகுப்பு பிக்கு மௌரியார் புத்தா, தென்னிந்தியாவில் பௌத்த கள ஆய்வுகள், புத்தர் வழி, ஓரிக்கோட்டை அஞ்சல், இராமநாதபுரம், 2017, பக்.80-88 

63. "சோழ நாட்டில் பௌத்தம் : களப்பணி (1993-2018)", தெற்காசிய நாடுகளில் பௌத்தமும் தமிழும், கருத்தரங்கம், 22 ஜூன் 2019, Shanlax Inernational Journal of Tamil Studies, pp.27-31 

64. ‘‘A resurvey of Buddha statues in Pudukottai region (1993-2009)’’, புத்தர் வழி, இதழ் 3, மார்ச் ஏப்ரல் 2018, பக்.12-14 [Tamil civilization இதழில் வெளியானது] (23 ஜூன் 2019இல் பெறப்பட்டது) 

65. "கும்பகோணம் பகவ விநாயகர் கோயிலில் உள்ள சிலை", சித்தார்த்தா புத்தக சாலை நூற்றாண்டு விழா (1919-2019), பக்.214-215 

66. "அரியலூர் மாவட்டம் பிள்ளைபாளையத்தில் புத்தர் சிலை", சித்தார்த்தா புத்தக சாலை நூற்றாண்டு விழா (1919-2019), பக்.255-256 

67."சோழர் நல்லிணக்கத்துக்கு புத்தர் ஒரு சான்று",  சோழர்கள் இன்று, தினமலர் வெளியீடு, மே 2023, பக்.239-241 

68."பழையாறையில் புத்தர்"போதி முரசு, தாமரை 9, இதழ் 8, ஆகஸ்டு 2023, ப.35. 

69. "கோயில்களில் புத்தர் சிலைகள்", தமிழாய்வுக் களஞ்சியம், தமிழாய்வு 1, களஞ்சியம் 1, ஜனவரி-மார்ச் 2024, பக்.36-38. 
 
70. "இவர் புத்தர் இல்லை, பகவர்", மானுடம், அக்டோபர் 2024, பக்.7-10 

71. "புதுக்கோட்டை மாவட்டத்தில் பௌத்தம்", போதி முரசு, தாமரை 11,
இதழ் 1, ஜனவரி 2025, பக்.24-25.

72. "அரியலூர் மாவட்டத்தில் பௌத்தம்", போதி முரசு, தாமரை 11,
இதழ் 2, பிப்ரவரி 2025, பக்.24-26 

73. "நாகப்பட்டினம் மாவட்டத்தில் பௌத்தம்", போதி முரசு, தாமரை 11,
இதழ் 3, மார்ச் 2025, பக்.24-26 

74."மயிலாடுதுறை மாவட்டத்தில் பௌத்தம்", போதி முரசு, தாமரை 11,
இதழ் 4, ஏப்ரல் 2025, பக்.5-7 

75."தஞ்சாவூர்  மாவட்டத்தில் பௌத்தம்", போதி முரசு, தாமரை 11,
இதழ் 5, மே 2025, பக்.28-30 

76."திருச்சி  மாவட்டத்தில் பௌத்தம்", போதி முரசு, தாமரை 11,
இதழ் 6, ஜூன் 2025, பக்.11-13 

77."திருவாரூர்  மாவட்டத்தில் பௌத்தம்", போதி முரசு, தாமரை 11,
இதழ் 7, ஜூலை 2025, பக்.16-18 

78."பெரம்பலூர்  மாவட்டத்தில் பௌத்தம்", போதி முரசு, தாமரை 11,
இதழ் 8, ஆகஸ்டு 2025, பக்.14-16 

சமணம்

1.“தஞ்சை அருகே 11ஆம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பத்தை வழிபடும் மக்கள், முக்குடை, சூலை 2009, ப.20 

2.“தஞ்சை அருகே சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிப்பு,” முக்குடை, ஏப்ரல் 2010, ப.29

3. ‘‘செருமாக்கநல்லூரில் சமணர் சிலை கண்டுபிடிப்பு’’, தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலர், மே 2010, ப.4

4. ‘‘வேதாரண்யம் அருகே சமணர் சிலை கண்டுபிடிப்பு’’, தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலர், செப்டம்பர் 2010, ப.2

5.“தோலி கிராமத்தில் மகாவீரர் சிலை கண்டெடுப்பு”, முக்குடை, டிசம்பர் 2011, ப.20

6.“களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள்”, முக்குடை, ஏப்ரல் 2012, பக்.14-15 (முகப்பட்டையில் படங்கள்)

7.“களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட (2009-2011) சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள்”, முக்குடை, டிசம்பர் 2012, பக்.15-16 (முகப்பட்டையில் படங்கள்) 

8. “தோலியில் சமணர் சிற்பம் கண்டுபிடிப்பு”, ஆவணம் 23, 2012, ப.246

9. “கவிநாட்டில் சமணர் சிலை”, ஆவணம் 25, 2014 (கவிநாடு சமணர் சிலையைப் பற்றிய கட்டுரையில் இடம் பெற்றிருந்த புகைப்படம் கிராந்தி புத்தர் ?) 

10. சரவணபெலகோலா : அமைதி தவழும் கோமதீஸ்வரர், பத்திரிகை.காம், 28 செப்டம்பர் 2017

11."அகிம்சை நடை 47", முக்குடை, ஜனவரி 2018, பக்.38-39

12. "சோழர் காலத்தில் சிறந்தோங்கிய சமணம்", கல்லில் உறையும் காவியம், தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா விளம்பரதாரர் சிறப்பு இணைப்பு, இந்து தமிழ் திசை, 5 பிப்ரவரி 2020, பக்.14-15

13."களப்பணியில் இணைவோம் இணைய வழியால்", முக்குடை, செப்டம்பர் 2020, பக்.15-17

14.“தஞ்சைப் பகுதியில் சமணம் நூல் பிறக்கக் காரணமாயிருந்த மா மனிதர் திரு. ச. அப்பாண்டைராஜ், முக்குடை, ஜூன் 2024, பக்.17-18  


பேட்டிகள்/அறிமுகம்
1. N.Ramesh, "Writer of 250 articles in Tamil Wikipedia", The New Indian Express, 13 November 2005
2. "வியக்க வைக்கும் விக்கிப்பீடியா பதிவர்"புதிய தலைமுறை, 13 பிப்ரவரி 2020, பக்.30-31
3."பா.ஜம்புலிங்கம்",  தமிழ் விக்கி, 24 மார்ச் 2024


அணிந்துரை/வாழ்த்துரை/மதிப்புரை

1. மர்மவீரன் ராஜராஜ சோழன், சித்திரக்கதை, கதை, சித்திரம் சந்திரோதயம், அணிந்துரை, 2005 

2. சங்ககாலச் சோழர் வரலாறு, சமுதாய, சமய, பொருளாதார நிலை, டாக்டர் வீ.மலர்விழி, அணிந்துரை, 2008

3. சோழர் கால கட்டடக்கலையும், சிற்பக்கலையும், டாக்டர் வீ.மலர்விழி, அணிந்துரை, 2008

4. ஸ்ரீகாத்தாயி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா, முனைவர் வீ.ஜெயபால், அணிந்துரை, 9.4.2009 

5. திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நேர்முகப்பயிற்சி மையம் இருபதாம் ஆண்டு நிறைவு விழா மலர், 2010-2011, ப.ஆ.முனைவர் வீ.ஜெயபால், வாழ்த்துரை, 26.11.2011

6. ஆயிரம் ரூபாய் நோட்டு, அழகிரி விசுவநாதன்,  அணிந்துரை, 2012  

7. இந்த எறும்புகள், கவிஞர் அவிநா (அழகிரி விசுவநாதன்), அணிந்துரை, 2012 

8. கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கி.ஜெயக்குமார், வாழ்த்துரை, 2012 

9.சுவடிப்பாதுகாப்பு வரலாறு, முனைவர் ப.பெருமாள், மதிப்புரை, 2014

10. ‘‘மனிதரில் மாணிக்கங்கள்’’, தினமணி புத்தாண்டு மலர் 2014, பக்.112-126

11. ‘‘எனக்குப் பிடித்த புத்தகம் Nelson Mandela-Long Walk to Freedom’’, தினமணி கதிர், 14.12.2014, ப.4

12. திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நேர்முகப்பயிற்சி மையம் இருபத்திநான்காம் ஆண்டு நிறைவு விழா மலர், 2014-2015, ப.ஆ.முனைவர் வீ.ஜெயபால், வாழ்த்துரை, 2015

13. தேவகோட்டை தேவதை தேவகி, கில்லர்ஜி, அணிந்துரை, 2016 

14. கும்பகோணத்தில் ஓர் அறிவுத்திருக்கோயில், முனைவர் ச.அ.சம்பத்குமார்,   வாழ்த்துரை, 2017

15. காலம் செய்த கோலமடி, துளசிதன் வே.தில்லையகத்து, அணிந்துரை, மே 2018   

16. பெரிய புராண நாடகங்கள் : ஒரு பன்முகப்பார்வை, முனைவர் வீ.ஜெயபால்,  அணிந்துரை, 30 அக்டோபர் 2019


17. புத்தகமும் புதுயுகமும், ச.அ.சம்பத்குமார், இரண்டாம் பதிப்பு, 12.8.2019, வாழ்த்துரை (பெற்ற நாள் 16 பிப்ரவரி 2020)

18. தர்ப்பண சுந்தரி, எஸ்.வி.வேணுகோபாலன், புக் டே, 26 ஜூன் 2020

19. மலர்ந்தும் மலராத, எஸ்.வி.வேணுகோபாலன், புக் டே, 6 டிசம்பர் 2020

20.பௌத்தத் தமிழியல் பொதுவியல் (தொகுதி 1), முனைவர் சு.மாதவன், ஆய்வு வாழ்த்துரை, அறம் பதிப்பகம், ஜனவரி 2021 

21. இலக்கணம் இனிது, நா.முத்துநிலவன், புக் டே, 18 மார்ச் 2021

22. சொல்லேர், அண்டனூர் சுரா,  புக் டே, 30 மார்ச் 2021

23. சோழர் வரலாற்றில் மச்சபுரீஸ்வரர், கோ.தில்லை கோவிந்தராஜன்,  புக் டே, 1 நவம்பர் 2021

24. திருக்குறள்-சிறப்புரை, முனைவர் இரெ.குமரன்,  புக் டே, 26 நவம்பர் 2021

25. ஒப்பீட்டு நோக்கில் பௌத்தமும் தமிழும் (முதற் பகுதி), முனைவர் க.ஜெயபாலன், வாழ்த்துரை, ஜனவரி 2022 

26.தஞ்சையும் அரண்மனையும், முனைவர் மணி.மாறன், புக் டே, 27 ஜனவரி 2022 

27. சிற்பி வித்யா சங்கர் ஸ்தபதியும் நவீன சிற்பமும், எஸ்.ஜி.வித்யா சங்கர் ஸ்தபதி,  புக் டே, 1 நவம்பர் 2022

28.தமிழகத்தில் பௌத்தம், முனைவர் தேமொழி, திணை, ஏப்ரல்-ஜூன் 2023, பக்.83-87 (29 மே 2025இல் என் வலைப்பூவில் வெளியான கட்டுரை திணை இதழில் வெளியாகியுள்ளது) 

29.தமிழர் சிற்பக்கலையில் அழகியல் கோட்பாடுகள், சு. திருநாவுக்கரசு,

30.பழந்தமிழர் வாழ்வியலும் வரலாறும், முனைவர் ஆ.ராஜா, புக் டே, 6 செப்டம்பர் 2023

31.பனை உறை தெய்வம், குடவாயில் பாலசுப்ரமணியன், புக் டே, 5 மார்ச் 2024

32.சிற்பக்கலை, முனைவர் க.மணிவண்ணன், 8 நவம்பர் 2024

33.வரலாற்றில் ஐயம்பேட்டை, என்.செல்வராஜ், புக் டே, 1 டிசம்பர் 2024

34.பன்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர், முனைவர் சீமான் இளையராஜா, அறம் பதிப்பகம், நவம்பர் 2021, புக் டே, 17 ஆகஸ்டு 2025 

35.கே.ஏ.குணசேகரன், இரா.காமராசு, புக் டே, 1 செப்டம்பர் 2025

யுட்யூப் /பிற பதிவுகள்


2.விக்கிப்பீடியாவில்தமிழகக் கோவில்கள் - அனுபவக் கட்டுரைகள், சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, GCHRG WEBINARS 2020| PART-3 | Webinar 8,

6 செப்டம்பர் 2020


3.விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் உருவாக்குதல், பூ.சா.கோ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை, இணையவழித் தமிழ்க் கற்றல் கற்பித்தல் ஏழு நாள் இணையவழிப்பயிலரங்கம், முதல் நாள் உரை, 15 மார்ச் 2021


4."வாசிப்பை நேசிப்போம்", தஞ்சாவூர் புத்தகத் திருவிழா 2023,  17 ஜூலை 2023


5."கள ஆய்வில் தடம்", காவிரி இலக்கியத் திருவிழா 2024,  22 மார்ச் 2024


--------------------------------------------------------------------------------------------

பௌத்தம், சமணம் தொடர்பான யுடியூப் பதிவுகளுக்கான இணைப்பு : 

சோழ நாட்டில் பௌத்தம்

--------------------------------------------------------------------------------------------


5 செப்டம்பர் 2025இல் மேம்படுத்தப்பட்டது.

09 June 2025

அறம் பயில்வோம் : கு.பாலசுப்ரமணியன்

கும்பகோணம், காந்தியடிகள் நற்பணிக்கழக இதழில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 53 கட்டுரைகளின் தொகுப்பாக அறம் பயில்வோம் என்ற நூலினை வெளியிட்டுள்ளார் நூலாசிரியர் கு.பாலசுப்ரமணியன்.  



அறம் வளர்த்த தலைவர்கள், கல்வி, அரசியல் சமுதாயப்பார்வை, சிறுகதைகள் என்ற மூன்று பகுதிகளைக் கொண்ட இந்நூல் அறத்தைக் கற்கவும், அதனைத் தொடரவும் ஓர் உந்துதலைத் தருகிறது. பெரும்பாலானவை அறம் என்ற பின்புலத்தில் அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. நூலைப் படித்து முடிந்தபின் நம்முள் அறம் என்ற சிந்தனை துளிர்த்துப் பரவுவதை உணரமுடியும். நூலின் சில கட்டுரைகளைக் காண்போம்.


முதல் உட்தலைப்பின்கீழ் காந்தி, நேரு, காமராஜர், மொரார்ஜி தேசாய், லால்பகதூர் சாஸ்திரி உள்ளிட்ட தலைவர்களின் சாதனைகள் விவாதிக்கப்படுகின்றன. காந்தியின் தாரக மந்திரம் கரோ பஹலே, கஹோ பீச்சே..உலகம் மாசுபடுவதற்கான சுற்றுச்சூழலில் விஷம் கலப்பதற்கான அனைத்துச் செயல்களையும் செய்துகொண்டே அதைப்பற்றிப் பேசுவது நகை முரண் இல்லையா? (ப.3) காந்தியைப் பற்றிய தவறான புரிதலைப் பரப்பும் அறிவுஜீவிகளிடமிருந்து காந்தியைக் காப்பாற்றுவது நமது கடமை (ப.7). மதச்சார்பின்மையை முழுவதுமாக ஏற்றுக்கொண்டவராக நேருவை நம்பியதால் தன்னுடன் பல வகையில் முரண்பாடு கொண்ட நேருவை அரசியல் தன் அரசியல் வாரிசாக அறிவித்தார் காந்தி. (ப.12)


நேரு, தான் ஆட்சி செய்த 17 ஆண்டு காலத்தில் வட இந்தியாவைவிட தென் இந்தியாவிலேயே அதிக செல்வாக்கு பெற்றவராக விளங்கினார். (ப.21) நேருத என்றால் நமக்குத் தோன்று மதச்சார்பின்மைதான். (ப.26) சமுதாயத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட ஜனநாயக சோசலிசம் என்ற ஒரு புதிய தத்துவத்தை இந்தியாவின் முன் மட்டுமல்ல உலகின் முன் வைத்தார் நேரு. (ப.31) நேரு, காமராஜரை அவரது நேர்மைக்காகவும் எளிமைக்காகவும் மதித்தார். (ப.41)


உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு இவை அனைத்து மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்பதே காமராஜரின் சிந்தனையாக இருந்தது. (ப.50) அனைத்துக் கல்வியும் இலவசம், அனைவருக்கும் இலவசம் இதுதான் காமராஜர் ஆட்சி. (ப.59) பச்சைத்தமிழன் ஆட்சி..தரமான இலவசக்கல்வி, மது கண்டறியாத மக்கள், அரசியல் தலையிடா காவல்துறை, ஓட்டுகளை எதிர்பார்க்கா திட்டங்கள், கரைபடியா கரம்கொண்ட அமைச்சர்கள்...(ப.66)


அறமே மெய்யின்பம்..அறனையே துணை எனக்கொள்வோம் எனக் கூற பாரதி தேவை. அவ்வாறே பாரதியின் முற்போக்குச் சிந்தனைகள் இக்காலத் தேவையாகும். (ப.72)


கல்வி, அரசியல் சமுதாயப்பார்வை என்ற உட்தலைப்பில் உள்ள கட்டுரைகள் தற்கால அரசியல், பொருளாதார, சமுதாயப்பார்வையைத் தருகின்றன. தனியார்மயமாக்கப்பட்ட கல்வியால் தாய்மொழிக்கல்வி புறக்கணிப்பு, சமூகப்பொறுப்பு பற்றிய அறிவுரை நிறுத்தப்படல், கல்விச்செலவுக்காகக் கடன்பட்ட வாழ்க்கை, மனப்பாடம் செய்யும் நிலை, மாணவர்களிடம் காட்டிய கண்டிப்பு குறைவு, மாணவர்கள் மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக மாறல், வணிக நோக்கு. (ப.93) நீட் தேர்வு மாணவர்கள் மீது ஏவிவிடப்பட்ட விஷம் தோய்ந்த அஸ்திரமாகும். (ப.101).

அரசியல் என்பது தொண்டா? வணிகமா? பிழைப்பா? என்றில்லாமல் அரசியல் அறம் என மாற்றப்படவேண்டும். அது அறம் சார்ந்த அரசியலை விரும்புவோர் எண்ணிக்கை மிகும் காலத்தில்தான் மெய்ப்படும். அதற்குக் காத்திருப்பதைத் தவிர வேறுவழியில்லை. (ப.116)


மதம், சாதி, இனம், தீண்டாமை, மது, மூடப் பழக்கவழக்கங்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவற்றிலிருந்து விடுபடும் நாளே பாரதி கனவு கண்ட விடுதலை நாள். (ப.127) லஞ்சம் உள்ள இடத்தில் ஊழலும், ஊழல் உள்ள இடத்தில் லஞ்சமும் இணைந்தே வாசம் செய்யும். இவை நமது அறப்பண்புகளை அளித்து நம்மை மனிதத்தன்மை அற்றவர்களாக மாற்றுகின்றன. (140).


நூலில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் ஊடாக அறம் என்பதானது பரிணமிப்பதைக் காணலாம்.


இவ்வகையில் இந்நூலில் அறம் என்ற கோட்பாடானது நூல் முழுவதும் விரவியிருப்பதைக் காணமுடிகிறது. அறம் சார்ந்த வாழ்க்கை பல்வகையில் நம்மை உயர்த்தும் என்பதையும், அறத்தை உணர்ந்து பின்பற்றும்போது கிடைக்கும் விளைவுகள் நல்ல பயனைத் தரும் என்பதையும் நூலாசிரியரின் எழுத்து உறுதி செய்கிறது. நன்னெறிகள் கொண்ட ஓர் அரிய நூலைப் படித்த எண்ணத்தைத் தருகின்ற இந்நூலை வாசித்து, அறநெறியைக் கடைபிடிக்க முயல்வோம். அற வாழ்க்கை வாழ்ந்துகொண்டு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கின்ற நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.


தலைப்பு : அறம் பயில்வோம்   

ஆசிரியர் : கு.பாலசுப்ரமணியன் 
அலைபேசி : 
 99527 93520
பதிப்பாண்டு : முதல் பதிப்பு, மே 2025
விலை : ரூ.250

50ஆவது ஆண்டு விழா (5, 7, 8 ஜூன் 2025)


முதல் நாள் நிகழ்வு






இரண்டாம் நாள் நிகழ்வு







அறம் பயில்வோம் நூலை பா.ஜம்புலிங்கம் வெளியிட மா.இரமேஷ்பாபு பெறல்

விழா நினைவுப்பரிசினை சு.செல்வம் வழங்க, பா.ஜம்புலிங்கம் பெறல்

நூல் வெளியிட்ட பின் உரையாற்றல்


மூன்றாம் நாள் நிகழ்வு





காந்தியடிகள் நற்பணிக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் அங்கு நானும், என்னுடைய நண்பர்கள் சிலரும் இந்தி வகுப்பில் சேர்ந்தோம். நான் ராஷ்ட்ரபாஷா வரை தேர்ச்சி பெற்றேன். அப்போது நான் கற்ற இந்தியானது சென்னையில் முதன்முதலாகப் பணியில் சேர்ந்தபோதும், கோயம்புத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின்போதும்,  தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப்பட்ட ஆய்வு மேற்கொண்டபோதும்,  வட இந்தியக்கோயில்களுக்குச் சென்றபோதும். எனக்குப் பெரிதும் உதவியது. அவ்வப்போது இன்றும் துணையாக நிற்கிறது. 
அறம் பயில்வோம் நூலினை வெளியிடும் வாய்ப்பினைத் தந்த காந்தியடிகள் நற்பணிக்கழகத்திற்கு நன்றி.

----------------------------------------------------------------------------

ஒளிப்படங்கள் நன்றி : திரு குடந்தை ஆடலரசன், திரு சு.செல்வம்,

காந்தியடிகள் நற்பணிக்கழகம்

----------------------------------------------------------------------------