சென்னை, கொ.கந்தசாமி நாயுடு கல்லூரியில் 2.9.2026 அன்று "வ.அய்.சுப்பிரமணியம் அவர்களின் பன்முக ஆற்றல்" என்ற தலைப்பில் மூதறிஞர் வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு நினைவு சிறப்புக் கருத்தரங்கம் நிகழ்ச்சி நிரலில் கண்டவாறு நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வள்ளல் சி.கந்தசாமி நாயுடு அவர்களின் திருவுருவச்சிலைக்கு துறைத்தலைவரும், முக்கிய விருந்தினர்களும் மலர் தூவி சிறப்பு செய்ததைத் தொடர்ந்து நிகழ்வு தொடங்கியது.
விழா மேடையில் வ.அய்.சுப்பிரமணியம் அவர்களின் திருவுருவப்படம் திறந்துவைக்கப்பட்டது.
கல்லூரி முதல்வரும், தமிழ்த்துறைத்தலைவருமான முனைவர் வா.மு.சே.ஆண்டவர் தலைமையில், மொழி அறக்கட்டளையின் இயக்குநர் பேரா. பா.ரா.சுப்பிரமணியம் முதன்மைச்சிறப்புரையில், வ.அய்.சுப்பிரமணியம் அவர்களின் மாணவர் என்ற வகையில் உணர்வுபூர்வமாக அந்நாளைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
அனைத்திந்திய எழுத்தாளர் சங்கத்தலைவர் பேரா. இராம.குருநாதன், பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் வரலாற்றுத்துறைத்தலைவர் பேரா.ச.திருவேங்கடம் ஆகியோர் சிறப்புச்சொற்பொழிவாற்றினர்.
என்னுடைய உரையில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வ.அய்.சு. துணைவேந்தராக இருந்த காலகட்டத்தில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன். அவருடைய நேரடி வாய்மொழி ஆணையின்படி தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைச்சட்ட விதிகளைத் தட்டச்சு செய்தது முதல் பல்கலைக்கழகச் செய்தி மலர், காலாண்டிதழ்களை உறுப்பினர்களுக்கு அனுப்புதல், பேரா.கா.சிவத்தம்பி அவர்களுடைய தமிழில் இலக்கிய வரலாறு நூலின் ஆங்கில வரைவினைத் தட்டச்சு செய்தது, புதிதாக ஒவ்வொரு நூலும் அச்சிடப்படும்போது துணைவேந்தருக்கு அனுப்பப்படும் முறை உள்ளிட்ட பல செய்திகளைப் பகிர்ந்துகொண்டேன்.
முன்னதாக கல்லூரி ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் முனைவர் கு.சிவகாமி வரவேற்புரையாற்ற, நிறைவாக கல்லூரி ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் முனைவர் அ.ரஷிதாபானு நன்றியுரை கூறினார். நிகழ்வினை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் இரா.பிரபா தொகுத்து வழங்கினார். கல்லூரி மாணவர்கள், துறைத்தலைவர்கள், உள்ளூர்ப் பிரமுகர்கள் உள்ட்ட பலர் நிகழ்கில் கலந்துகொண்டனர்.









