திரைப்பட நடிகர் பாக்கியராஜ் அவர்களின் மறைவு திரையுலகிற்கும், அவர்களுடைய கோடானு கோடி ரசிகர்களுக்கும் பேரிழப்பு. அவருடைய குருவான பாரதிராஜாவைத் தொடர்ந்து அவரும் மிக விரைவில் இயற்கையெய்தியது அவர்மேல் வைத்திருந்த பக்தியின் வெளிப்பாடாக இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.
ஒவ்வொரு திரைப்படத்திலும் அவருடைய ஆழமான வசனங்கள், எதிர்பாராத திருப்பங்கள், முற்றிலும் வித்தியாசமான கதையின் முடிவு என்ற வகையில் அவருடைய தனித்துவத்தைக் காணமுடியும். அண்டை வீட்டுப் பையன் என்று கூறுவார்களே அந்த வகையில் நம்மை மிகவும் அணுக்கமாக தம் கதையோடு அழைத்துச்சென்று, அதில் நம்மை ஈடுபட வைத்து, ஒரு நெருக்கத்தை மிகவும் அனாயாசமாக உண்டாக்குவதில் அவருக்கு நிகர் அவரே. தன்னுடைய கதாபாத்திரங்கள் மூலமாக நம்மை எந்த அளவிற்குச் சிரிக்க வைக்கின்றாரோ, அதே அளவிற்கு சிந்திக்கவும் வைத்துவிடுவார். நேர்மறை சிந்தனையையும், சாதிக்கவேண்டும் என்ற ஒரு மன உறுதியையும் அவருடைய பல படங்களில் பார்த்து ரசித்து உணர்ந்திருக்கிறேன். அவருடைய சமூகப்பிரக்ஞையை தன் படங்களில் வெளிப்படுத்தியவிதம் போற்றத்தக்கதாகும்.
.jpg)

No comments:
Post a Comment